Homeஅடிப்படை ஜோதிடம்கன்னி லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு அமையும் கணவன் அல்லது மனைவியின் தன்மை மற்றும் குண நலன்கள்

கன்னி லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு அமையும் கணவன் அல்லது மனைவியின் தன்மை மற்றும் குண நலன்கள்

கன்னி லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு அமையும் கணவன் அல்லது மனைவியின் தன்மை மற்றும் குண நலன்கள்

  • இவர்கள் திருமணம் ஏதோ ஒரு நிபந்தனையின் பேரில் அல்லது முக்கிய ஒரு காரணத்தால் நடப்பதாகும். தெய்வானு கூலத்தால் நடந்துவிடும். ஏதோ ஒரு கவலைகள் தம்பதிக்குள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.
  • கணவன் அல்லது மனைவி ஏதோ ஒரு தெய்வீக துறையில் சக்தி பெறுவார். மனைவிக்கு சங்கீத ஞானம் அல்லது ஆச்சரியமான சில வேலைகளை செய்து காட்டுவார்.
  • திருமணத்திற்கு முன் இருந்த கவலை திருமணத்திற்கு பின் இருக்காது.
  • ஏதோ ஒரு பயந்த நிலையில் விரக்தியான நிலையில் திருமணம் நடக்கும். பின் நல்ல எதிர்காலம் அமையும்.
  • லக்னாதிபதியும் 7-க்குடையவரும் சுக்கிரனும் நீசமோ 6,8-ல் அமைந்தோ அல்லது 7-ல் ராகு,கேது அமைந்தால் சாதாரணமான இடத்திலிருந்து பெண் அமையும்.
  • திருமணத்திற்குப்பின் பெண் குடும்பம் நல்ல நிலைமைக்கு வந்து விடும். கணவனுக்கு சுமாரான யோகம் தரும்.
  • ஆண் அல்லது பெண்ணுக்கு 7-ல் சூரியன், செவ்வாய், ராகு, கேது, மாந்தி சேர்க்கை-பார்வை மண வாழ்க்கையை கேட்கவே வேண்டாம். அனுசரித்து போய் விடுவது உத்தமம்.
  • இல்லையேல் பிரிவினை-விவாகரத்து ஏற்படும்.
  • உடல் பருத்து குண்டான குட்டையான மனைவி வாய்க்கலாம்.
  • அளவான புத்திர பாக்கியம் ஏற்படும்.
  • சிலருக்கு மனைவியால் யோகமும் வரலாம். சிலர் மனைவிக்கு கட்டுப்பட்டு மனைவி சொல்படி நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
  • பெண்களுக்கு கர்ப்பப்பை சம்பந்தமான கோளாறு அல்லது கர்ப்பப்பையை எடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.
  • வாத ,பித்த சம்பந்தபட்டதும் நரம்பு தளர்ச்சி, தோல் சம்பந்தப்பட்டதும் ஆன நோய் தொல்லைகள் வரும்.
கன்னி லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு அமையும் கணவன் அல்லது மனைவியின் தன்மை மற்றும் குண நலன்கள்
  • சுக்கிரன்-சனி-குரு சந்திரன் தசா புத்தி அந்தர காலங்களில் வடக்கு-தெற்கு சம்பந்தப்பட்ட திசையில் திருமணம் நடக்கும்.
  • 2 ,5, 7 ,11 -ல் உள்ளவர் பார்த்தவர் தசா புத்தி அபகாரங்களில் திருமணம் நடக்கும்.
  • வரும் மனைவி விகாரத்துடன் கூடியது. கெட்ட புத்திரி-புத்திரர்கள் உள்ளவர். சண்டையிடுவதில் பிரியம்.
  • நல்லொழுக்கம், பிரீதி இவை அற்றவள்.
  • இப்பலன் பாவ கிரக தொடர்பால் ஏற்படக் கூடியதாகும்.
  • திருமண காலத்தில் இவர்களுக்கு பல பிரச்சனைகள் பல வகையான வாக்குவாதங்கள் அல்லது அபிப்பிராய பேதங்கள் ஏற்பட்டு திருமணம் நடக்கும்.

இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு:

  • குரு 3, 6 ,8 ,12-ல் இருந்தால் திருமணத்திற்கு பின் மிக உயர்வான வாழ்க்கையை பெற்று மதிப்புடன் வாழ்வார்.
  • நல்லதொரு வீடு, வண்டி, வாகன வசதிகள் அனைத்தும் ஏற்படும்.
  • ஆனால் வரும் கணவனோ மனைவியோ கோப தன்மையும், பிடிவாத குணமும் கொண்டவர்களாக இருப்பர்.
RELATED ARTICLES

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!