Homeபரிகாரங்கள்தாந்த்ரீக பரிகாரங்கள்

தாந்த்ரீக பரிகாரங்கள்

தாந்த்ரீக பரிகாரங்கள்

✅முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் போது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல ,போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும்.

✅புதிய வீடு அல்லது கடைகளுக்கு முழு மஞ்சள் 7 , கொட்டை பாக்குகள் 7. சிறிய வெள்ளி தகடுஉலோகத்தால் ஆன நாகர் -2 , இவற்றை எல்லாம் மூடியுடன் கூடிய வெண்கல கலசத்தில் இட்டு மேற்கு புறமாக வைத்திருக்க சகல நன்மைகளும் உண்டாகும்.

✅வீட்டில் உள்ளவர்க்கு ஏதேனும் தொற்று நோய் வந்து அவதிப்பட்டால் – சிறிய மண் சட்டியில் மஞ்சள் லட்டு,ஒரு முட்டை, 2 நாணயங்கள் மற்றும் சிறிது குங்குமம் வைத்து நோய்வாய் பட்டவரின் தலையை 3 முறை வலமாக மட்டும் சுற்றி 4 ரோடுகள் சேரும் இடத்தில் மதியம் 12 மணிக்கு எறிந்து விட , நோய் விலகும்.

✅கடன்களால் வெகு காலம் துன்பப்படும் நபர்களுக்கு ஒன்னேகால் அடி வெள்ளை துணியை எடுத்து அதில் நான்கு பக்கங்களிலும் சிகப்பு ரோஜாவை வைத்து கட்டி , பின்பு நடுவிலும் ஒரு ரோஜாவை வைத்து அதை 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் விட , கடன்கள் அடியோடு அழியும்.

✅வியாபாரம் செழிக்க , வியாபார போட்டி , வியாபாரத்தில் செய்வினை அகல ஒரு ஞாயிறு அன்று ஐந்து எலுமிச்சைகளை பாதியாக வெட்டி , அத்துடன் சிறுது வெண்கடுகு மற்றும் மிளகு தூவி பின்பு மூடி விடவும் மறு நாள் திறந்தவுடன் . அனைத்தையும் கூட்டி இடத்தை விட்டு சிறிது தூரம் சென்று அனைத்தையும் எரித்து விடவும் எரிப்பதற்க்கு மண்எண்னை அல்லது பெட்ரோல் உபயோகிக்க கூடாது.அனைத்தும் எரிந்ததும் வியாபாரத்தில் உள்ள அனைத்து எதிர்மறை சக்திகளும் அழிந்துபோய் வியாபாரம் செழிக்கும்.

✅வேலை இண்டெர்வியூ அல்லது ஏதேனும் புதிய தொழில் முயற்சி தொடங்கு முன் , சம்பந்தபட்டவரை கிழக்கு முகமாக நிற்க வைத்து மூன்று முறை தலையை வலது புறமாக சிறிது பச்சை பயிரை வைத்து சுற்றி பின்பு அவர் மேல் தூவி விட வேண்டும் அவர் சென்றதும் அவற்றை கூட்டி வெளியில் பறவைகளுக்கு கொட்டி விடலாம். இது செயலில் வெற்றியை தேடித்தரும்.

✅அரச மரத்தை சனிக்கிழமை காலை 8 மணிக்குள் 108 முறை வலம் வந்து பின்பு தூப , தீபம் – நிவேதனம் செய்து வழிபட்டால் பண புழக்கம் அதிகரிக்கும்.
தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் செய்து வரலாம்.

✅செவ்வாயின் பாகமான தெற்கில் 7 நல்லெண்ணை விளக்கு ( மண் ) வைத்து தூபம் காட்டி வேண்டி வர , வருடக்கணக்கில் வராத கடன்களும் வந்து சேரும். ஏமாற்றப்பட்ட பொருட்களும் திரும்ப சேரும்.

✅7 பற்கள் மட்டுமே உள்ள வெள்ளை பூண்டு வாங்கி வந்து அத்துடன் 7 காய்ந்த மிளகாகளையும் சேர்த்து ஒரு நூலில் கட்டி வீடு , கடை , ஆபீஸ் வாசல்களில் தொங்க விட திருஷ்டிகள் சகலமும் விலகி நன்மை சேரும்.

✅வீட்டை விட்டு வெளியே கிளம்பும் பொழுது அருகம் புல் நுனி ஒன்று பறித்து எடுத்து பாக்கெட்டில் வைத்து செல்ல செல்லும் காரியம் வெற்றி அடையும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!