தொடர்ந்து சம்பந்தமில்லாத தொல்லைகளுக்கு-தாந்த்ரீக பரிகாரம்
எவரேனும் நம் தவறில்லாத நமக்கு தொல்லை கொடுத்து வந்தாலோ நமக்கு சம்பந்தமில்லாத விஷயங்கள் நம்மை தொல்லை படுத்தினாலோ கீழ்கண்ட விஷயத்தை ஒரு முறை மட்டும் செய்யலாம்.
ஒரு பிரச்சனைக்கு ஒருமுறை மட்டும் செய்துவிட்டு பலனை பிரபஞ்சத்திற்கு விட்டு விடவும். வெவ்வேறு சம்பந்தமில்லாத தொல்லைகளுக்கு தனித்தனியே செய்யலாம் இந்த முறையானது நம் மீது ஏதேனும் தவறு இருப்பின் பலன் தராது.
தகாத பிரச்சனை செய்யும் நபரின் பெயரை அல்லது சம்பந்தமில்லாத நம்மை துரத்தும் பிரச்சனையை சுருக்கமாக ஒரு வெள்ளை தாளில் எழுதி நீங்கள் அணியும் ஷூவின் உள்ளே வைக்கவும். பின் அதை அணிந்து கொண்டு இரவு எட்டு மணிக்கு மேல் வீதியில் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் வேக நடை போடவும். பின் வீடு வந்து அந்த தாளை வலது கையினால் எடுத்து கழிவறையில் கழிவுகள் செல்லும் இடத்தினில் போட்டு நீர் ஊற்றி விடவும்.
எதிர்மறை சக்திகளை பிரபஞ்ச சக்தியின் துணைகொண்டு விரைவில் அழிக்கும் முறை இது. நீங்கள் நடக்கும் சமயம் உங்கள் கால்கள் வழியே அந்த எதிர்மறை துர்சக்திகள் வெளியேறுவதாக மனதில் நிறுத்தவும்.