அனுமன் ஜெயந்தி
மார்கழி மாதம் வருகின்ற அமாவாசை திதியில் மூல நட்சத்திரம் கூடிய நாளில் அஞ்சனைக்கு மகனாக சகலக தேவதைகளின் வரமாக வாயுபுத்திரனாக ஆஞ்சநேயர் அவதரித்தார். இன்று பெருமாள் கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயரை வழிபட உகந்த நாளாகும்.
மார்கழி மாதத்தில் அமாவாசை தினமும் மூல நட்சத்திரமும் சேர்ந்து வரும் தினமே அனுமன் ஜெயந்தியாக கருதப்படுகிறது. இந்நாளில் ராம பக்தனாகிய அனுமனை துளசி ,வெண்ணை சாற்றி வழிபட எங்கும் ,எதிலும் வெற்றி கிடைப்பதுடன், எந்த பாதிப்பும் ஏற்படாது.
அனுமன் காயத்ரி மந்திரம்
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே,
வாயுபுத்ராய தீமஹி ,தந்தோ
அனுமன் ப்ரசோதயாத்
சூரியனும் -அனுமனும்
அஞ்சனாதேவிக்கும் வாயு பகவானுக்கும் பிறந்த அனுமன் சிறு குழந்தையாக இருக்கும்போதே வானில் தெரிந்த சூரியனைப் பழம் என்று கருதி அதைப் பிடித்து சாப்பிடுவதற்காக பறந்து சென்றார். சூரியனை பிடிப்பதற்காக சிறு குழந்தை பிறந்து வருவதை கண்ட தேவர்கள் திகைத்தனர்.
வானில் பறந்து செல்லும் வல்லமையை படைத்த அனுமனுக்கு சூரிய தேவன் கல்வி கற்றுக் கொடுத்தான். சூரிய பகவானை பார்த்தபடி தேரின் ஓட்டத்திற்கு ஏற்ப பின்புறமாக ஓடிக்கொண்டே கல்வி, இசை, வேதங்கள் என அனைத்தையும் அனுமன் பயின்றான். மேலும் ‘நவியாகரண பண்டிதன்’ என்ற பட்டத்தையும் பெற்றான்.
அனுமனின் பராக்கிரமத்தை கண்ட சூரியன் தனது மகன் சுக்ரீவனுக்கு துணையாக இருக்க வேண்டுமென்றும் அனுமனின் ஞானம், வீரம் அனைத்துமே அவனுக்கே பயன்பட வேண்டும் என்றும் கூறினார். அதன் பேரில் அனுமனும் சுக்ரீவனும் நட்புக் கொண்டு அவனது மந்திரியாக இருந்தான்.
இந்திரனின் கோபம்
சூரிய கிரகணத்தை ஏற்படுத்துவதற்காக சென்ற ராகுவால் அனுமன் வேகத்திற்கு செல்ல முடியவில்லை, அதை கண்ட இந்திரன் தனது ஆயுதத்தால் அனுமனை தாக்கினான். அதனால் கோபமடைந்த வாயு தேவன் தனது இயக்கத்தை நிறுத்தினான். அதையடுத்து தேவர்கள் சமாதானம் செய்ததால் வாயுதேவன் அனுமனை அழைத்துச் சென்றார்.
ராமனும் -அனுமனும்
சீதையை தேடி ராமனும் லட்சுமணனும் வந்தபோது சுக்ரீவனும், அனுமானும் அவர்களை சந்தித்து பேசினர். அப்போது அனுமனின் சமயோஜித பேச்சை கேட்ட ராமன் மிகவும் மகிழ்ந்தார். அன்று முதல் ராமனின் சிறந்த தொண்டனாக அனுமன் திகழ்ந்தான்.
ஜடாயு மூலமாக ராவணன் சீதையை இலங்கைக்கு கடத்திச் சென்றது தெரிய வந்தது அதையடுத்து கடலை தாண்டி இலங்கைக்கு சென்று வரக்கூடிய வல்லமை அணுமனுக்கு மட்டுமே இருப்பது தெரியவந்து, சீதையைத் தேடி அனுமன் இலங்கைக்குச் சென்றார். அப்போது ராமன் தனது அடையாளமாக மோதிரத்தையும், தனக்கும் சீதைக்கும் நடந்த சில உரையாடல்களையும் தெரிவித்து அனுப்பினார்.
முதல் வழிபாடு
சீதையுடன் ராமர் திரும்பி வருவையில் ராமேஸ்வரத்தில் ராவணனை வதம் செய்த தோஷம் நீங்குவதற்காக சிவலிங்கம் அமைத்து வழிபட்டார். காசியில் இருந்து அனுமன் லிங்கம் எடுத்து வர கால தாமதமானதால் சீதாதேவி பிடித்து வைத்த மணல் லிங்கமே பிரதான லிங்கமாக இருப்பினும் அனுமன் கொண்டு வந்த லிங்கத்திற்கே முதல் வழிபாடு நடைபெறுகிறது.
ராமேஸ்வரத்தில் சிவலிங்க வழிபாடு செய்த பின்னர் அயோத்திக்கு திரும்பி சென்று ராமருக்கு பட்டாபிஷேகம் நடந்து சிறப்பாக ஆட்சி செய்தார். அதன் பின்னர் அவதார நோக்கம் முடிவடைந்தும் ராமர் வைகுண்டம் திரும்பியபோது அனுமன் வைகுண்டத்திற்கு செல்ல விரும்பாமல் பூலோகத்தில் ‘ராம நாமத்தை’ இன்றும் கூறிக்கொண்டே இருக்கின்றார்.
ஐந்து சகோதரர்கள்
ஆஞ்சநேயருக்கு ஐந்து சகோதரர்கள் இருக்கிறார்கள் பிரம்மாண்ட புராணத் தில் இந்த செய்தி உள்ளது. இவர்கள் ஐந்து பேரும் ஆஞ்சநேயருக்குப் பிறகு பிறந்தவர்கள் ஸ்ருதிமான், மதிமான், கேதுமான். கட்டுமான் மற்றும் த்ரிதிமான் ஆகியன அவர்களின் பெயர்கள் இவர்கள் ஐந்து பேருக்கும் குடும்பம். குழந்தைகள் இருந்ததாக சொல்லப்படுகிறது.
1. மதிமான் – மதிமான் மிகுந்த புத்தி கூர்மை உடையவர் ஞானத்தின் அடை யாளமாக திகழ்பவர் ராஜதந்திரம் மற்றும் பேச்சுத்திறமை மிக்கவர்
2. ஸ்ருதிமான் – ஸ்ருதிமான் பெரும் அறிஞர் வேதங்களை பற்றி சிறந்த ஞானம் பெற்றவர். ஜோதிடம், வானியல் மற்றும் இலக்கியத்தில் கை தேர்ந்தவர்.
3. கேதுமான் – கேதுமான் மிகப் பெரிய போர் வீரர். தீயவர்களுக்கு எதிராக போரிட்டு அழிக்கக் கூடியவர். ஆயுதங் களை கையாள்வதில் திறமை பெற்றவர். போர் கலைகள், நுணுக்கங்கள் அனைத்தும் தெரிந்தவர்
4. த்ரிதிமான் – அனைவருக்கும் இளை யவர் த்ரிதிமான். மிகவும் உற்சாகமான. குறும்புத்தனங்கள் நிறைந்தவர். இவர் அனு மன் மீது அளவு கடந்த பற்றும், பாசமும் கொண்டவர்.
5. கதிமான் – கதிமான் மரம் ஏறுதல். அதிக தூரம் தாவுதல் ஆகிய திறமைகளை பெற்றவர்கள். எவ்வளவு உயரமான மரத்தி லும் விரைவாக ஏறும் திறன் கொண்டவர் இவர்.
தினமும் கூற வேண்டிய அனுமன் மந்திரம்
அனுமன் அருள் அபாரமானது. எல்லையில்லாதது. அவர் தராத வரங்கள் கிடையாது. ஒவ்வொரு தேவதையிடம் பெறு கின்ற அத்தனை வரங்களையும் அவரிடம் பெறலாம். நவகிரகங்களிடம் தனித் தனி யாக பெறுகின்ற வரங்களையும் அனுமன் ஒருவரை வணங்குவதால் கிடைத்துவிடும் என்பது பெரியோர்கள் வாக்கு. அவரால் கிடைப்பது என்னென்ன தெரியமா? நல்ல அறிவு, ஆரோக்கியம், உடல் பலம், புகழ், தைரியம், இனிமையான பேச்சு, இப்படி எத்தனையோ வரங்கள் அனுமனை நம் பிக்கையோடு வணங்கும்போது கிடைத் துவிடும். இதைத்தான் இந்த ஸ்லோகம் கூறுகின்றது.
புத்திர் பலம் யஸோ தைர்யம்
நிர்பயத்வம் அரோகதாம்
அஜாத்யம் வாக் பட்டுத்வம் ச
ஹனுமத் ஸ்மரன்னாத் பவேத் //
இந்த ஸ்லோகத்தை தினசரி பாராயணம் செய்வதன் மூலமாக அனுமனின் அருளோடு மேற்கண்ட குணங்களையும் பெற முடியும். குறிப்பாக குழந்தைகள் இந்த ஸ்லோகத்தை தினசரி சொல்வது நல்லது.
அனுமனை எப்படி வணங்க வேண்டும்?
அனுமனை எப்படி வணங்க வேண்டும்? என்ற சில விஷயங்க ளைப் பார்க்கலாம். ஒவ்வொரு மூல நட சத்திரம் அன்றும், அமாவாசையன்றும் அனுமனை வணங்குவது சிறப்பு. இது தவிர அவருக்கு உரிய நாட்கள் செவ்வாய்க் கிழமை, வியாழக்கிழமை, மற்றும் சனிக் கிழமை. சனிக்கிழமை வெகு சிறப்பு. வெற் றிலை மாலை, வடைமாலை (நெய் வடை) முதலிய மாலைகளைச் சாற்றி வழிபடலாம். வடக்கே ஜாங்கிரி மாலை போடுவார்கள். செந்தூரம் சாற்றி வழிபடலாம். வெண்ணெய் காப்பு அவருக்கு மிகவும் பிடித்த மானது. அனுமத் ஜெயந்தி அன்று பல கோயில்களில் வெண்ணெய் காப்பு செய் வார்கள். அந்த வெண்ணெய் உருகுவதற்குள் நாம் நினைத்த காரியத்தை அனுமன் நடத்தி தருவார் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள் அத்தனை விரைவாக நமக்கு அனுக் கிரகம் செய்பவர் அனுமன். அனுமனின் சிறப்புக்கள் அவ்வளவு எளிதாகச் சொல்லி விடமுடியாது. இராமாயணம் மகாபாரதம் போல அனுமனின் சிறப்புகளும் பெரிய காவியமாக விரியும். அதில் சில தகவல்களை மட்டும் நம்முடைய நேயர்களுக்காக இந்தத் தொகுப்பில் தந்திருக்கிறோம். அனுமன் ஜெயந்தி அன்று ஸ்ரீராம பக்த அனுமனை வணங்கி அற்புத அருள் பெறுவோம்.
பரிகாரம்
அனுமனுக்கு வெண்ணெய், துளசி ,வடை மாலை சாற்றி வழிபடுவது மிகவும் சிறப்பாகும். உளுந்து வடை ராகுவுக்கு மிக பிடித்தமானது என்பதால் இந்த வடை மாலையை அனுமனுக்கு அணிவிப்பதன் மூலமாக ராகு தோஷத்தில் இருந்து நிவர்த்தி பெறலாம். அனுமனை வணங்குபவர்களுக்கு சனி கிரகத்தாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது.