Homeஆன்மிக தகவல்கருட புராணம்இறந்தபின் உயிரின் நிலை-கருடபுராணம்

இறந்தபின் உயிரின் நிலை-கருடபுராணம்

இறந்தபின் உயிரின் நிலை-கருடபுராணம்

பட்சி ராஜனான கருடன் , ஸ்ரீமத் நாராயணனை நோக்கிக் கேட்டான் : ‘

குணாநிதியே ! ஒரு மனிதன் இறந்தவுடன் அவன் என்னவாகிறான் , அவன் எமலோகத்திற்குச் செல்வது எங்ஙனம் ? அவன் சென்றடையும் எமதர்மனின் இருப்பிடம் எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றி எனக்கு விளக்கிக் கூற வேண்டும் ! ‘

வசுதேவனான ஸ்ரீமந் நாராயணன் கருடனின் கேள்விக்குக் கீழ்க்கண்டவாறு பதிலுரைத்தார் :

கருடா ! ஒரு மனிதன் இறந்த பிறகு சென்றடையும் எமலோகத்தைப் பற்றி சுருக்கமாகக் கூறுகிறேன் , கேள் !

எமலோகத்தை உள்ளடக்கியதாக பதினாறு உலகங்கள் உண்டு . அவை அனைத்துமே மிகவும் பரந்து விரிந்தவை . பூமிக்கும் எமலோகத்திற்கும் இடையே எண்பதாயிரம் காத தூரம் உள்ளது .

கருடா ! ஒரு மனிதன் இப்பூவுலகில் வாழ்ந்து , நன்மை மற்றும் தீமைகளை அனுபவித்த பிறகு , அவன் செய்த வினைகளுக்கு ஏற்ப மரண நிலைக்குத் தள்ளப்படுகிறான்.

ஒருவன் நோயில் விழுவது அவனது பூர்வ வினைகளின் பலன்தான்.மரணமும் அவன் செய்த பாவ , புண்ணியங்களுக்கு ஏற்பவே நிகழ்கிறது.ஒவ்வொரு மனிதனுக்கும் , அவன் செய்த கர்மங்களின் பலாபலன்களுக்கு ஏற்பவே மரணம் நிகழுவும் செய்கிறது.

கருடபுராணம்

ஒருவன் மரணம் அடைந்துவிட்டால் , அவனது இறந்த உடலுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று இப்போது கூறுகிறேன்.

  • மரித்தவன் உடலை பசுஞ்சாணம் மெழுகி தூய்மைப் படுத்தப்பட்ட இடத்திலேயே கிடத்த வேண்டும்.
  • மரித்தவன் உடலைச் சுற்றி எள்ளையும், தர்ப்பைப் புல்லையும் தூவி வைக்க வேண்டும்.
  • துளசி இலைகளையும் சாளக்கிராமத்தையும் அவன் உடல் அருகில் வைக்க வேண்டும்.
  • சாமசூக்தத்தை அந்த உடல் அருகே யாரேனும் அமர்ந்து பாராயணம் செய்ய வேண்டும்.
  • சிறிதளவேனும் தங்கத்தை இறந்த உடலின் மீது வைக்க வேண்டும்.
  • வாய் , நாசித் துவாரங்கள் , கண்கள் , காதுகளில் சிறிதளவு தங்கத்தை வைக்க வேண்டும்.துளசி இலைகளை மரித்தவனின் இரு கைகளிலும் கழுத்திலும் வைக்க வேண்டும்.
  • மரித்தவன் உடலை இரு துணிகளால் போர்த்த வேண்டும்.குங்குமப்பூ மற்றும் பச்சரிசியைப் போட்டு வைக்க வேண்டும் .
  • பூக்களால் அந்த உடலை அலங்கரித்து , வீட்டின் பின்வாசல் வழியாக மரித்தவனின் மகன் , உறவினர்கள் தோள்களில் சுமந்து தகனம் செய்யும் இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
  • தகனம் செய்யும் இடத்தில் மரித்தவனின் தலை வடக்கு திசைநோக்கி இருக்கும்படி கிடத்த வேண்டும்.
  • இறந்தவனின் புத்திரன் கிழக்கு நோக்கி அமர வேண்டும். தகனம் செய்யும்போது , தகன இடம் அண்மையில் வேறுஉடல் ஏதும் தகனம் செய்யப்படாத இடமாக இருக்க வேண்டும்.
  • சிதையானது சந்தனம், துளசி, பலாச மரமாக இருத்தல் வேண்டும். இவை அனைத்தும் மரித்தவன் உடலை தகனம் செய்வதற்கு முன்பான சடங்காக கூறினேன்..

தொடரும்….

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!