Homeஅடிப்படை ஜோதிடம்கிரக சேர்க்கைகள்

கிரக சேர்க்கைகள்

 கிரக சேர்க்கைகள்  

ஜாதகத்தில் குருவும் சனியும் சேர்ந்திருந்தால் இளம் வயதிலேயே வேலைக்கு செல்லும் நிலை ஏற்படும்
 
சுக்கிரன் + புதன் + சனி – சேர்க்கை சுப ஸ்தானங்களில் வலிமை பெற்ற ஜாதகன்- பொன், ஆடை , ஆபரணங்கள், வீடு, வாகன வசதிகளை அடைவான்.
 
சுக்கிரன் + குரு + சனி – சேர்க்கை சுப ஸ்தானங்களில் வலிமை பெற்ற ஜாதகன்- வாலிப வயதில் ஏராளமாக சம்பாதித்து மிகுதியான செலவு செய்வான்.
 
செவ்வாய் + சந்திரன் + சூரியன்– சேர்க்கை சுப ஸ்தானங்களில் வலிமை பெற்ற ஜாதகன்- கிராம தலைவனாகும் அமைப்பு உண்டு. பேச்சு திறமையின் காரணமாக புகழ் பெறுவான்….
 
சூரியன் + சந்திரன் + புதன் சேர்க்கை- சேர்க்கை சுப ஸ்தானங்களில் வலிமை பெற்ற ஜாதகன்- அரசனைப் போல செல்வமும் செல்வாக்கும் பெற்றவனாவான்
 
குரு + புதன் + சூரியன் சேர்க்கை சுப ஸ்தானங்களில் வலிமை பெற்றால் ஜாதகன் செல்வந்தன் ஆவான். வீடு, நிலம் ஆகியன பெற்று சிறப்பான வாழ்க்கை அமையும்.
 
குரு + சுக்கிரன் + புதன் – சேர்க்கை சுப ஸ்தானங்களில் வலிமை பெற்றால் ஜாதகன் பாக்கியமுள்ளவன். இளம் வயதில் செல்வம் சேர்ப்பவன். குடும்பத்தாருடன் ஒற்றுமையாக வாழ்பவன்.
 
செவ்வாய் + சுக்கிரன் + சனி – சேர்க்கை சுப ஸ்தானங்களில் நின்றால் , ஜாதகனுக்கு பிறக்கும் மகன் நற்பண்புகள் இல்லாதவனாக இருப்பான். அதனால் ஜாதகனுக்கு பொருள் நஷ்ட…மும் மான இழப்பும் ஏற்படும்.
 
குரு + சனி சேர்க்கை – வலிமை பெற்று சுப ஸ்தானங்களில் நிற்க – ஜாதகன், புகழ் உள்ளவன். செல்வம் சேர்ப்பவன். ஒழுக்கமுள்ளவன், கொடுத் வாக்கை காப்பபாற்றுபவன். பெரியோர்களை மதிக்கத் தெரிந்தவன்.
 கிரக சேர்க்கைகள்
 
சூரியன் + செவ்வாய் 
சூரியனும் நெருப்பு கிரகம் செவ்வாயும் நெருப்பு கிரகம் இவ்விரு கிரகங்களும் சேரும் போது ஜாதகர் அதிகமான உஷ்ணத்தை பெற்ற உஷ்ண தேகி ஆகிறார்.
உஷ்ணத்தால் முக்கியமான பாதிப்புகளால் அம்மை வியாதிகள் தோன்றுகின்றன.
 
சூரியன்+செவ்வாய்+ராகு கேதுக்களுடன் சேரும் போது உஷ்ணத் தொடர்புடைய நோய்கள் முற்றி நோய் எதிர்ப்பு சக்திகளை  ஜாதகர் இழக்கிறார்.
தீவிர அம்மை நோய்கள் சிறு வயதில் ஏற்பட்டிருந்தால் அது குழந்தை பிறப்பை தரக்கூடிய உயிரணுக்களை ஜாதகர் பெற்றிருக்க மாட்டார்.
 
பெண்கள் ஜாதகத்தில் சூரியன் செவ்வாய் இருவரும் சேர்ந்து எங்கு இருந்தாலும் உடல் உஸ்ணத்தால் வரும் வியாதிகள் உண்டாகும்..அடிக்கடி காய்ச்சல் என படுத்து விடுவார்கள்..கணவன் மனைவி உறவையும் பாதிக்கும்..ராகு திசையோ கேது திசையோ நடந்தால் குடும்ப தகராறு உண்டாகி தீக்குளித்து இறப்பர்.
 
 கிரக சேர்க்கைகள்
தீக்குளித்து இறப்பது நரகத்தை கண் முன்னால் காண்பது போன்றது.உடலில் இருக்கும் கொழுப்புகள் எல்லாம் எண்ணெய் போல எரியும்..அந்த வேதனை நரகத்தை சில நிமிடங்கள் அவர்களுக்கு கண்ணில் காட்டும்..உயிர் பிழைத்து அந்த காயங்களுடன் சில நாள் உயிருடன் இருக்கும் போது இன்னும் கொடூரம்.தீயால் எரிந்து இறப்பது மின்சாரம் தாக்கி உயிர் இழப்பது எல்லாம் செவ்வாய் சூரியன் இணைவுதான்.
 
கேது லக்னாதிபதியுடன் அஷ்டமாதிபதியுடன் கூடி கேது திசை நடந்தால் தூக்கு மாட்டி இறப்பர்…அவர்கள் தூக்கு போட்டுக்கொள்ளவில்லையெனில் எதிரிகள் அவரை அடித்து தூக்கில் தொங்க விடுவர்.
 
ராகு சந்திரனுடனோ லக்னாதிபதியுடனோ சேர்ந்து எட்டில் மறைந்தால் விசம் குடித்து இறப்பர்.குரு அவர்களை பார்த்தால் காப்பாற்றி விடுவார்கள்…இல்லையெனில் கடும் விசத்தை குடித்திருப்பர்.விசம் அவர்கள் குடிக்கவில்லை எனில் பாம்பு கடிக்கும்.
 
7-ல் சனி, லக்கனத்தில் – குரு இருக்க பிறந்த ஜாதகனுக்கு வாதநோய், பக்கவாதம் ஏற்படும்.
 
5, 9 -ல் சனி இருந்து -அந்த சனியை செவ்வாய் , சூரியன் பார்த்தால் பல் வியாதி.
லக்கனத்திற்கு 4 அல்லது 10 -ல் – சூரியன் + செவ்வாய் சேர்க்கை – மலை மீதிருந்து வீழ்ந்து சாவான் அல்லது உயரமான இடத்தில் இருந்து விழுந்து உயிர் துறப்பான்.
 
லக்னத்திற்கு 10 – ல் சந்திரன், 7 -ல் செவ்வாய், சூரியனுக்கு 2-ல் சனி இருக்க பிறந்தவன் – அங்க வீணணாக இருப்பான்.
 
லக்கனத்திற்கு 10 -ல் சந்திரன், 7 -ல் சுக்கிரன், 4-ல் பாவர்கள் இருக்கப் பிறந்த ஜாதகனுக்கு புத்திரர்கள் ( சந்ததி ) நசிந்து போகும்.
 
5- க்குடையவன் 10-லும் , 10 -க்குடையவன் 5-லும் பரிவர்த்தனைப் பெற்று இருப்பது , அல்லது
5- ல் 2 -ஆம் அதிபதி அல்லது புதன் + சனி + செவ்வாய் — சேர்க்கைப் பெற்று பலம் பொருந்தி இருக்க பிறந்த ஜாதகர்- வைத்தியத்தில் வல்லுனர் + இரண சிகிச்சை புரிவதில் சமர்த்தர்
 
உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!