மனைவி அமையும் திசை
ஜோதிடத்தில் பலன் உரைக்கும் வழிமுறைகள் பல உள்ளன.அத்தகைய வழி முறைகளில் பிருகு முனிவரால் இயற்றப்பட்ட பிருகு நாடியும், நந்திகேஸ்வரரால் இயற்றப்பட்ட நந்திநாடியும் ஜோதிட பலன்களை துல்லியமாக உரைக்கின்றன.
இந்த நாடி முறைகள் பலன் கூறும் வழியை தெளிவாக எடுத்தியம்புகின்றன.ஜோதிட பலன்கள் கேட்பவர்கள் பெரும்பாலும் தங்களுடைய படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம், உடல்நலம், சொத்து, சுகம் இவைகளை பற்றி முன்கூட்டியே அறிந்து கொள்ள விரும்புகிறார்கள்.
திருமண விஷயம் பற்றி பிருகு-நந்தி நாடி கூறும் சில விதிகளை பார்ப்போம்.
பிருகு-நந்தி நாடி முறை படி ஆண் ஜாதகத்தில் மனைவியைக் குறிக்கும் கிரகம் சுக்கிரன்.
ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் 12 ராசிகளில் எந்த ராசியில் இருக்கிறாரோ அதை கொண்டு அந்த ஜாதகருக்கு வரும் மனைவியை பற்றிய சில விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
மேஷத்தில் சுக்கிரன் இருந்தால்
ஜாதகருக்கு வரும் மனைவி இளமையான தோற்றம் உடையவள்.சுறுசுறுப்பானவர்.ஜாதகருக்கு வரும் மனைவி சொந்தக்காரியாகவோ அல்லது சொந்த ஊர்காரியாகவோ அல்லது சொந்த பந்தங்கள் வசிக்கும் ஊர்க்காரியாகவோ இருப்பாள்.ஜாதகருக்கு சரியான உடல் பொருத்தமுள்ள மனைவியாக இருப்பாள்.
உஷ்ண தேகம் உடையவளாகவும் இருப்பாள்.மனைவி பிறந்த ஊர் ஜாதகன் பிறந்த ஊருக்கு கிழக்கு திசையில் இருக்கும்.மனைவியின் வீடு கிழக்கு மேற்கு வீதியில் வடக்கு பக்கம் வாசல் உள்ள வீடாக இருக்கும்.
திருமணத்திற்கு பின் மனைவி எப்பொழுதும் தன் கணவர் வீட்டில் இருப்பதையே விரும்புவர். தன் பிறந்த வீட்டிற்கு செல்வதை விரும்ப மாட்டார்.மனைவி ஒருபோதும் ஜாதகரை விட்டு பிரிய மாட்டாள்.மனைவிக்கு இருக்கும் வீடு அதிக வெளிச்சம் உள்ள வீடாக இருக்கும்.
ரிஷபத்தில் சுக்கிரன் இருந்தால்
ஜாதகனுக்கு வரும் மனைவி அழகானவளாகவும்,ஆடை அலங்கார பிரியையாகவும் , சொகுசு விரும்பியகவும் செல்வச்செழிப்பு உடையவளாகவும் இருப்பாள்.மனைவி பக்கத்து ஊர்க்காரியாக இருப்பதற்கு வாய்ப்பு உண்டு.
மனைவி பிறந்த ஊர் ஜாதகன் பிறந்த ஊருக்கு கிழக்கு திசையில் இருக்கும்.மனைவியின் வீடு தெற்கு வடக்கு வீதியில் கிழக்கு பார்த்த வாசல் உடையதாக இருக்கும்.திருமணத்திற்கு பின் மனைவி அடிக்கடி தன் தாய் வீட்டிற்கு செல்ல விரும்புவாள் அல்லது தன் தாய் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி விடுவதற்கு முயற்சி செய்வாள்.அல்லது தன் தாய் வீட்டிற்கு பக்கத்தில் குடிபெயர்ந்து செல்ல முயற்சிப்பாள்.
மனைவி உறவினர்கள் நண்பர்கள் என யார் வீட்டிற்கு செல்வதை விரும்ப மாட்டாள்.யாரையும் உபசரிக்க மாட்டாள்வீட்டை அழகாக வைத்திருப்பாள்.அதிகம் வெளியே செல்ல மாட்டாள்.தான் பிறந்த வீட்டில் வந்து நிரந்தரமாக தங்கி விடும்படி ஜாதகரை நிர்பந்திப்பாள்.
மிதுனத்தில் சுக்கிரன் இருந்தால்
ஜாதகருக்கு வரும் மனைவி நட்பு விரும்பியாகவும், புத்திசாலியாகவும், இளமையான தோற்றம் உடையவளாகவும், சுறுசுறுப்பானவளாகவும், இரட்டை பெயர் அல்லது இரண்டு பெயர்கள் உடையவளாகவும் இருப்பாள்.
தோற்றத்தில் ஜாதகரை விட மிகவும் இளையவள் போன்றோ அல்லது வயதில் மிகவும் இளையவளகா இருப்பாள்.ஜாதகனுக்கு அவன் மனைவிக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருக்கும்.
ஜாதகனுக்கு இரண்டு மனைவிகள் அமைய வாய்ப்பு உண்டு.ஜாதகரின் மனைவி பெண் தோழியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவாள்.மனைவி பிறந்த ஊர் ஒரு ஜாதகன் பிறந்த ஊருக்கு தென்கிழக்கு திசையில் இருக்கும்.மனைவியின் வீடு கிழக்கு மேற்கு வீதியில் தெற்கு பக்கம் வாசல் உள்ள வீடாக அமைந்திருக்கும்.மனைவியின் வீடு தெரு முனையில் அமைந்திருக்கும்.
கடகத்தில் சுக்கிரன் இருந்தால்
ஜாதகருக்கு வரும் மனைவி தாய்மை உணர்வு அதிகம் உடையவளாக இருப்பாள்.மனைவி அழகானவளாகவும்,மன சஞ்சலம் உடையவளாகவும்,பாசத்திற்கு அடிமையாகவும் இருப்பாள்.மனைவிக்கு அவள் பிறந்த வீட்டில் மரியாதை இருக்காது.அவளை அன்னியப் பெண் போல் நடத்துவார்கள் இதனால் காலப்போக்கில் தன் தாய் வீட்டிற்கு செல்வதை விரும்பாமல் நிரந்தரமாக நிறுத்தி விடுவாள்.
மாமியார் வசிக்கும் வீட்டிலும் இவள் இருக்கமாட்டாள்.தனிக்குடித்தனம் செல்வதயே பெரிதும் விரும்புவாள்.மாமியார், தாய், அக்கா, அண்ணி இவர்களின் வீடுகளுக்கு செல்வதை தவிர்ப்பாள்.அடுத்தவர் வீடுகளில் தங்குவதை அவமானமாக நினைப்பாள்.
மனைவி பிறந்த ஊர் ஜாதகன் பிறந்த ஊருக்கு தெற்கு திசையில் இருக்கும்.மனைவியின் வீடு தெற்கு வடக்கு வீதியில் மேற்கு பக்கம் வாசல் உள்ள வீடாக அமைந்திருக்கும்.மனைவி சொந்தமில்லாமல் அந்நிய பெண்ணாக இருப்பாள்.மனைவி இருக்கும் வீட்டின் தளம் தெருவை விட சற்று பள்ளமாக இருக்கும்..
சிம்மத்தில் சுக்கிரன் இருந்தால்
ஜாதகனுக்கு வரும் மனைவி நிர்வாக திறமை உடையவளாகவும் பிறந்த வீட்டில் ராணி போலவும் இருப்பாள்.மனைவி தந்தைவழி உறவினராக இருக்க வாய்ப்புண்டு.பிறந்த வீட்டில் உள்ளவர்களை நன்றாக வேலை வாங்குவாள்.பெற்ற பிள்ளைகளை பராமரிக்க மாட்டாள்.பிள்ளைகளை தாய் வீட்டில் விட்டு வளர்ப்பாள்
தன்னை எல்லோரும் தலைவி போல் பாவிக்க வேண்டும் என விரும்புவாள்.தந்தைவழி சொத்துக்கள் தனக்கே கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, தாய் வீட்டிலிருந்து எப்பொழுதும் எதையாவது எடுத்துக் கொண்டு போவதை வழக்கமாக வைத்திருப்பாள்.
மனைவியின் பிறந்த ஊர் ஜாதகன் பிறந்த ஊருக்கு தெற்கு திசையில் இருக்கும்.மனைவியின் வீடு கிழக்கு-மேற்கு வீதியில் வடக்கு பக்கம் வாசல் உள்ள வீடு அமைந்திருக்கும்.
கன்னியில் சுக்கிரன் இருந்தால்
ஜாதகருக்கு வரும் மனைவி இளமையான தோற்றமுடையவளாக அல்லது ஜாதகனை விட வயதில் மிகவும் இளமையானவளாகவும் இருப்பாள்.மனைவி தன் தோழிகள் வீடுகளுக்கு செல்லாத வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. ஒரே ஒரு முறை சென்று வந்தால் போதும் அவர்கள் தன்னைக் கவனிக்கவில்லை அவமானப்படுத்தி விட்டார்கள் என்று நட்பை துண்டித்து கொள்வாள்.
ஆடை அலங்காரத்தில் மனைவிக்கு அக்கறை இருக்காது.தனது உடமைகளை பிறருக்கு விட்டுக் கொடுப்பாள்.எளிமையாக இருப்பாள்மனைவிக்கு இரண்டு பெயர்கள் இருக்க வாய்ப்பு உண்டு.
மனைவி பிறந்த ஊர் ஜாதகன் பிறந்த ஊருக்கு தென்மேற்கு திசையில் இருக்கும். மனைவியின் வீடு தெற்கு வடக்கு வீதியில் கிழக்கு பக்கம் வாசல் உள்ள வீடாக அமைந்திருக்கும் அந்த வீடு தெரு முனையில் இருக்கும்.
துலாம் ராசியில் சுக்கிரன் இருந்தால்
ஜாதகருக்கு வரும் மனைவி அழகானவளாகவும் , ஆடை அலங்கார பிரியையாகவும் , எதையும் சீர்தூக்கிப் பார்த்து சரியான முடிவுகளை எடுக்கும் திறமை உள்ளவளாகவும் இருப்பாள்.
மனைவி பக்கத்து ஊரை சேர்ந்தவராக இருப்பதற்கு வாய்ப்பு உண்டு.மனைவி பிறந்த ஊர் ஜாதகன் பிறந்த ஊருக்கு மேற்கு திசையில் இருக்கும்.மனைவியின் வீடு கிழக்கு மேற்கு வீதியில் தெற்கு பக்கம் வாசல் உள்ள வீடு அமைந்திருக்கும்.
மனைவியின் வீட்டை ஒட்டி கடையோ அல்லது அந்த வீடு கடை தெருவில் இருக்கும்.திருமணத்திற்கு பின் மனைவி அடிக்கடி தன் தாய் வீட்டிற்கு செல்ல விரும்புவாள் அல்லது தன் தாய் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி விடுவதற்கு முயற்சி செய்வாள் அல்லது தன் தாய் வீட்டிற்கு பக்கத்தில் குடி பெயர்ந்து செல்ல முயற்சிபாள்
மனைவி உறவினர்கள், நண்பர்கள் என யார் வீட்டிற்கும் செல்வதை விரும்ப மாட்டாள் எல்லோரும் தன் வீட்டிற்கு தன்னைத் தேடி வந்த பார்க்கட்டும் என நினைப்பாள்..யாரையும் உபசரிக்க மாட்டார்.வீட்டை அழகாக வைத்திருப்பாள்அதிகம் வெளியே செல்ல மாட்டார்
தன் பிறந்த வீட்டில் வந்து நிரந்தரமாகத் தங்கி விடும்படி ஜாதகரை நிர்பந்திப்பாள். மனைவி இருக்கும் வீடு அதிக வெளிச்சம் இல்லாமல் இருட்டாக இருக்கும்.
விருச்சக ராசியில் சுக்கிரன் இருந்தால்
ஜாதகனுக்கு வரும் மனைவி இளமையான தோற்றம் உடையவள்.சுறுசுறுப்பானவர்.ஜாதகருக்கு வரும் மனைவி சொந்தக்காரி ஆகவோ அல்லது சொந்த ஊர்காரியாகவோ அல்லது சொந்த பந்தங்கள் வசிக்கும் ஊர்காரியாகவோ இருப்பாள்.ஜாதகருக்கு சரியான உடல் பொருத்தமுள்ள மனைவியாக இருப்பாள்.
உஷ்ண தேகம் உடையவளாகவும் கோபக்காரியாகவும் இருப்பாள்.மனைவி பிறந்த ஊர் அந்த ஊருக்கு மேற்கு திசையில் இருக்கும்.மனைவியின் வீடு தெற்கு வடக்கு வீதியில் மேற்கு பக்கம் வாசல் உள்ள வீடாக இருக்கும்
திருமணத்திற்கு பின் மனைவி எப்பொழுதும் தன் கணவர் வீட்டில் இருப்பதையே விரும்புவர்.தான் பிறந்த வீட்டிற்கு செல்வதை விரும்ப மாட்டார் மனைவி ஒருபோதும் ஜாதகரை விட்டு பிரிய மாட்டார்.
தனுசு ராசியில் சுக்கிரன் இருந்தால்
ஜாதகருக்கு வரும் மனைவி சாந்தமான அமைதியான தோற்றத்தில் இருப்பாள். தோற்றத்தில் ஜாதகனை விட மூத்தவர் போன்று இருப்பாள் அல்லது வயதில் மூத்தவளாக இருக்க வாய்ப்பு உண்டு.அல்லது மனைவி உடல் பருத்தவளாக இருப்பாள்.
மனைவி சொந்தக்காரியாக இருக்க வாய்ப்பு உண்டு.மனைவி தன் வீட்டிற்கு யாரும் வந்து போவதை விரும்ப மாட்டார்.தனிக்குடித்தனம் செல்வதை விரும்புவாள்.
மனைவி பிறந்த ஊர் ஜாதகர் பிறந்த ஊருக்கு வடமேற்கு திசையில் இருக்கும். மனைவியின் வீடு கிழக்கு மேற்கு வீதியில் வடக்கு பக்கம் வாசல் உள்ள வீடாக அமைந்திருக்கும்.மனைவியின் வீடு தெரு முனையில் அமைந்திருக்க வாய்ப்புண்டு.
மனைவி வீட்டிற்கு அருகே கோயில் ஒன்று இருக்க வாய்ப்பு உண்டு.மனைவிக்கு இரட்டை பெயர் அல்லது இரண்டு பெயர்கள் இருக்க வாய்ப்பு உண்டு.மனைவி அவசியம் இல்லாமல் காரணம் இல்லாமல் எந்த ஒரு செயலிலும் ஈடுபட மாட்டாள் .
மகரத்தில் சுக்கிரன் இருந்தால்
ஜாதகனுக்கு வரும் மனைவி நல்ல உடல் உழைப்பாளியாக இருப்பாள்.அடக்கமாகவும் எளிமையாகவும் இருப்பாள்.முதிர்ச்சியான தோற்றம் இருக்கும்.அவள் காரியவாதியாக இருப்பாள்.
மனைவி சொந்தம் இல்லாமல் அந்நிய பெண்ணாக இருப்பாள்.மனைவி பிறந்த ஊர் ஜாதகன் பிறந்த ஊருக்கு வடக்கு திசையில் இருக்கும்.
மனைவியின் வீடு தெற்கு வடக்கு வீதியில் கிழக்கு பக்கம் வாசல் உள்ள வீடு அமைந்திருக்கும்.மனைவி இருக்கும் வீட்டின் தளம் தெருவில் இருந்து அதிக உயரத்தில் இருக்கும்.மனைவி அடிக்கடி தோழிகளின் வீட்டிற்கு சென்று வருவதை விரும்புவாள்.மனைவி அடுத்தவர்களுக்கு சேவகம் புரிந்து காரியம் சாதிப்பாள்.
கும்பத்தில் சுக்கிரன் இருந்தால்
ஜாதகருக்கு வரும் மனைவி காரியவாதியாக இருப்பாள்.ஆதாயம் தேடாமல் எந்த ஒரு காரியத்திலும் ஈடுபட மாட்டார்.யாரிடமிருந்து எதைப் பெறலாம் என்பதிலேயே குறியாக இருப்பார்.அடுத்தவர்களிடம் உதவி கேட்பதற்கு கூச்சப்படமாட்டாள்.அமர்ந்த இடத்தை விட்டு நகராமல் எல்லோரையும் வேலை வாங்குவார்
தனது பணிகளை பிறர்மீது திணிப்பாள்.முதிர்ச்சியான தோற்றம் உடையவள்.மனைவி பிறந்த ஊர் ஜாதகர் பிறந்த ஊருக்கு வடக்கு திசையில் இருக்கும்.மனைவியின் வீடு கிழக்கு மேற்கு வீதியில் வடக்கு பக்கம் வாசல் உள்ள வீடு அமைந்திருக்கும்.மனைவி தோழிகளை தன் வீட்டிற்கு வரவழைத்து அரட்டை அடிப்பாள்.மனைவி சொந்தம் இல்லாமல் அந்நிய பெண்ணாக இருப்பாள்
மீனத்தில் சுக்கிரன் இருந்தால்
ஜாதகருக்கு மனைவி சாந்தமான அமைதியான தோற்றத்தில் இருப்பாள்.தோற்றத்தில் ஜாதகரை விட மூத்தவள் போன்று இருப்பாள். அல்லது வயதில் மூத்தவளாக இருக்க வாய்ப்பு உண்டு அல்லது மனைவி உடல் பருமனாக இருப்பார்.
மனைவி சொந்தக்காரி ஆக இருக்க வாய்ப்பு உண்டு.மனைவி பிறந்த ஊர் ஜாதகர் பிறந்த ஊருக்கு வடக்கு திசையில் இருக்கும்.மனைவியின் வீடு தெற்கு வடக்கு வீதியில் மேற்கு பக்கம் வாசல் உள்ள வீடு அமைந்திருக்கும்.
மனைவியின் வீடு தெரு முனையில் அமைந்திருக்க வாய்ப்பு உண்டு.மனைவிக்கு இரட்டை பெயர் அல்லது இரண்டு பெயர்கள் இருக்க வாய்ப்பு உண்டு.மனைவி அடுத்தவர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வாள் .அடுத்தவர்கள் வீட்டிற்கு சென்று அதிகாரம் செய்வாள்.மனைவி ஆடம்பரப் பிரியராகவும்,பேராசைக்காரியாகவும் இருப்பாள், பிறர் பொருளை அபகரிப்பாள்.