Homeஜோதிட தொடர்சொந்த முயற்சியால் தொழிலில் வெற்றி பெற உதவும் கிரக நிலைகள் | ஜோதிட குறிப்புகள்

சொந்த முயற்சியால் தொழிலில் வெற்றி பெற உதவும் கிரக நிலைகள் | ஜோதிட குறிப்புகள்

ஜோதிட குறிப்புகள்

ஒருவர் சொந்த முயற்சியால் பெரிய மனிதராக வரவேண்டுமெனில் அவரின் ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவாக இருக்க வேண்டும்.அப்படியிருந்தால்  அவர் ஆழமாக சிந்திப்பார். இனிமேல் அடிமையாக வேலை செய்யக்கூடாது; சொந்தத் தொழில் மூலம் வளர வேண்டும் என உறுதி கொள்வார்.

  • மனதில் நினைப்பதை செயல் வடிவில் கொண்டு வர 2,57,9,10-ம்  பாவங்கள் நன்றாக இருக்க வேண்டும்.
  • ஒரு ஜாதகத்தில் பத்தாம் அதிபதி உச்சம் பெற்றால் அல்லது லக்னத்திலோ கேந்திர ஸ்தானத்திலோ (1,4,7,10) இருந்தால் அந்த ஜாதகர் யாருக்கும் அடிமையாக இல்லாமல் உழைத்து பெரிய மனிதராக வேண்டும் என நினைப்பார். தன் எண்ணத்தில் வெற்றியும் பெறுவார்.
  • லக்னாதிபதி லக்னத்திலேயே இருந்து ஒன்பதாம் அதிபதி லக்னத்திற்கு 2ல் இருந்தால் அவர் சுய முயற்சியுடன் தைரியமாக தொழிலில் ஈடுபடுவர். நிறைய பணத்தையும் சம்பாதிப்பார்.
  • பத்தாம் அதிபதி உச்சமாக இருந்து ஒன்பதாம் அதிபதி சுய வீட்டில் இருந்தால் அவர் சுய முயற்சியால் தன் குடும்பத்துக்கு சம்பந்தமே இல்லாத தொழிலை செய்து அதில் வெற்றி காண்பார்.
  • ஒரு ஜாதகத்தில் லக்கினத்தில் லக்கினாதிபதி 2-ல் 2-ம் அதிபதி  ஆறில் சனி இருந்தால் அந்த ஜாதகர் சுய முயற்சியால் 27 வயதுக்கு பிறகு பெரிய தொழிலை சொந்தமாக செய்து வெற்றி காண்பார்.
  • லக்னத்தில் செவ்வாய், குரு, 10-ல் சந்திரன் இருந்தால் அவர் சுயமாக தொழில் செய்து நிறைய சம்பாதிப்பார்.
  • லக்கினத்தில் சூரியன், சுக்கிரன், புதன்  9-ல் குரு இருந்தால் 31 வயதுக்கு பிறகு அந்த ஜாதகர் சுய முயற்சியால் தொழில் செய்து பணம் சம்பாதிப்பார்
  • லக்னத்தில் சூரியன், புதன், 2-ல் சந்திரன் 10-ல் செவ்வாய் இருந்தால் 32 வயதுக்குப் பிறகு அந்த ஜாதகர் சுயமாக தொழில் செய்து வெற்றி காண்பார்
  • லக்கினத்தில் சூரியன்,புதன் ,செவ்வாய் 4-ல் சந்திரன் இருந்தால் ,அவை கைவினை பொருள்கள் செய்யும் தொழிலில் பெரிய அளவில் ஈடுபடுவார்.அதில் வெற்றி பெற்ற வர்த்தகராக பவனி வருவார் .
  • லக்னத்தில் சந்திரன் 6-ல் சுக்கிரன், 9-ல் செவ்வாய், சனி ,ராகு இருந்தால் 32 வயதுக்கு பிறகு பெரிய தொழிலதிபராக ஒளி வீசுவார் .
  • லக்னத்தில் உச்ச, குரு உச்ச சந்திரன் இருந்தால் அந்த ஜாதகர் பல முயற்சிகளில் ஈடுபட்டு பெரிய தொழிலதிபர் ஆவார்.
ஜோதிட குறிப்புகள்
  • 11ல் சந்திரன், சனி 5-ல் குரு, ஏழில் சூரியன் இருந்தால் அவர் சுய முயற்சியால் கடுமையாக உழைத்து 38 வயதுக்கு பிறகு பெரிய தொழிலதிபராக முத்திரை பதிப்பார் .
  • லக்னத்தில் சந்திரன், செவ்வாய் 5-ல் குரு, 10-,ல் சனி இருந்தால் அவர் இளம் வயதில் இருந்தே கடுமையாக உழைப்பார். 36 வயதிற்கு பிறகே பெரிய தொழிலதிபர் ஆவார்.
  • லக்னாதிபதி அஸ்தமனம் ஆக இருந்து, பத்தாம் அதிபதி பலவீனமாக இருந்தால் அந்த ஜாதகர் தொழிலில் ஈடுபடும் போது நிறைய தடைகள் உண்டாகும்.
  • 9-ல் ராகு, லக்னத்தில் சூரியன் இருந்தால் அவரது வாழ்க்கையின் முன் பகுதியில் ஏராளமான பிரச்சனைகள் ஏற்படும்.
  • சூரியனுடன் லக்னாதிபதி 4-லிருந்து அந்த  சூரியனை சனி பார்த்தால் அந்த ஜாதகர் சுயமாக தொழில் செய்யும்போது பல சிக்கல்களை சந்திப்பார் 
  • 6-ல் செவ்வாய் ,10-ல் சனி இருந்தால் அவர் சுயமாக தொழில் செய்யும் பொழுது அவரின் பகைவர்கள் சூனியம் செய்வார்கள்.
  • லக்னத்தில் செவ்வாய், 4-ல் சனி  ,8-ல் ராகு இருந்து ,சந்திரன் பலவீனமாக இருந்தால் சுயமாக எதையும் செய்ய துணிச்சல் இருக்காது. அப்படி அவர் எதையாவது ஆரம்பித்தாலும் அவரது விரோதிகள் பல சூழ்ச்சிகளை செய்து கெடுதலை உண்டாக்குவர். 
  • ஒரு வீட்டின் தென்மேற்கு திசை அதிகமாக காலியாக இருந்தாலும், அந்த வீட்டின் வடகிழக்கு சுத்தமாக இல்லை என்றாலும், அந்த ஜாதகர் எவ்வளவு முயற்சி செய்தாலும் சுயமாக தொழில் செய்ய முடியாது. அப்படி செய்தால் நிறைய நஷ்டங்களை சந்திப்பார்

பரிகாரங்கள்:

  • வீட்டில் உணவு பொருள்கள் வைக்கும் இடத்தில மிளகாயையும் ,எலுமிச்சை பழத்தையும் ஒரே பாத்திரத்தில் வைக்க கூடாது .
  • தினமும் காலையில் குளித்து முடித்து ,விநாயகரையும் ,குலதெய்வத்தையும்,சூரியனையும் வழிபடவேண்டும்.
  • வெள்ளிக்கிழமையை துர்க்கையை வழிபடவேண்டும்.துர்க்கா சப்தசதி படிக்கலாம்.
  • ஞாயிற்றுகிழமை ,கோதுமை,வெல்லம் ,சிவப்பு துணி ,ஆகியவற்றை தானம் தருதல் நன்று.   
உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!