Homeசனி பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள் 2025சனி பெயர்ச்சி பலன்கள் 2025: தனுசு ராசி(அர்த்தாஷ்டம சனி)

சனி பெயர்ச்சி பலன்கள் 2025: தனுசு ராசி(அர்த்தாஷ்டம சனி)

சனி பெயர்ச்சி பலன்கள் 2025 – தனுசு ராசி

(மூலம் 1,2,3,4, பூராடம் 1,2,3,4,உத்ராடம் 1ம் பாதம் )

சனி பெயர்ச்சி நாள் 2025 -Sani peyarchi Date 2025

இந்த குரோதி வருடம், உத்திராயணம்.பங்குனி மாதம் 15-ஆம் தேதி (29.3.2025) சுக்ல பட்சம் (வளர்பிறை) பிரதமை, சனிக்கிழமை பூரட்டாதி நட்சத்திரம், 4-ஆம் பாதம் மீன ராசி. சுப்ர நாம் யோகம் கூடிய யோக சுப தினத்தில் விருச்சிக லக்னத்தில் சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

சனி பெயர்ச்சி பலன்கள் 2025

தனுசு ராசி

இதன் அதிபதி: குரு

உருவம்:வில்

வகை: உபய ராசி

தத்துவம்:நெருப்பு

நிறம்:இளம் மஞ்சள்

கடவுள்: பெருமாள்

தனுசு ராசியும் சனியும்

தனுசு ராசிக்கு சனி 2 மற்றும் 3-ஆம் அதிபதி ஆவார். இவர் இவ்வளவு நாளும் 3-ஆமிடத்தில் அமர்ந்திருந்தார். தற்போது தனுசு ராசியின் 4-ஆமிடத்திற்கு மாறி சுக ஸ்தான சனி ஆகிறார்.

தனுசு ராசிக்கு சனி பகவான் தரும் பலன்

தனுசு ராசியின் 4-ஆமிடத்தில் அமர்ந்த குரு, அதன் காரகத்தை மேம்படுத்துவார். 4-ஆமிடம் என்பது தாய், கல்வி, வாகனம் வயல், தோட்டம், பால், சொந்தங்கள் என இவை பற்றிக் கூறும் சனி இதை எல்லாம் கொடுப்பார். என்ன ஒன்று பழைய வீடு, செகண்ட் ஹேண்ட் கார். இது மாதிரிதான் கொடுக்க இயலும்.

2025 மார்ச் 29 முதல் ஏப்ரல் 27 வரை

தனுசு ராசியின் 4-ஆமிடத்தில் நகரும்சனிபகவான். பூரட்டாதி நட்சத்திரத்தின் வழியே பலன் தருவார். இந்த சனி பெயர்ச்சி ஆனவுடன், வீட்டை விற்று பெரிய வீடு வாங்கிவிடுவீர்கள். அதன் வழிமுறை சற்று தாமதமாகும். உங்கள் தாயார், உங்கள் இளைய சகோதரனுடன் இருக்க கிளம்பி விடுவார். உங்களின் கல்வி நிதித்துறை, பத்திரிகைத் துறை, மக்கள் தொடர்பு, வாகன கட்டமைப்பு வேளாண்மை இவை சார்ந்து அமையும். கட்டடம் சார்ந்த பங்கு வர்த்தகம் வாங்குவீர்கள்.

வயல், தோட்டம் வாங்கி, பின் அதனை குத்தகைக்கு விட்டு, காசு சம்பாதிப்பீர்கள். வயதானவர்கள் நலன் அல்லது ரியல் எஸ்டேட் சார்ந்து பத்திரிகை ஆரம்பித்துவிடுவீர்கள். அல்லது அதுபற்றி எழுதுவீர்கள். புதிய மொழியை கற்றுக்கொள்வீர்கள். டிரைவிங் ஸ்கூல் ஆரம்பித்து விடுவீர்கள். அசையா சொத்து கள் வாங்கும் யோசனை வரும். உங்களில் ஒரு சிலருக்கு, ஏரி, குளம் சீர் படுத்தும் குத்தகை கிடைக்கும்.

2025 ஏப்ரல் 27 முதல் 2026 மே 17 வரை

இப்போதில், சனிபகவான், உத்திரட்டாதி நட்சத்திரம் எடுத்துக்கொள்வார். இந்த கால கட்டத்தில் சனி மாறுதல் ஒன்றே மாறாததுஎன அடித்துக் கூறுவார்.வீட்டை மாற்றுவார். கையெழுத்தை மாற்றச் செய்வார். மொழியை மாற்றுவார். ஒப்பந்தத்தை மாற்றுவார். வங்கியை மாற்றுவார். பள்ளியை மாற்றுவார். பசு மாட்டை மாற்றுவார். கிணற்றை மாற்றுவார். F.Dயை மாற்றுவார். வண்டியை மாற்றுவார். செய்தித்தாளை மாற்றுவார். தபால் ஆபிசை மாற்றுவார். கைபேசியை மாற்றுவார்.

கம்மலை மாற்றுவார். கடனை மாற்றுவார். தோட்டத்தை மாற்றுவார். பொழுதுபோக்கை மாற்றுவார். நகைகளை மாற்றுவார். வியாபாரத்தை மாற்றுவார். படகை மாற்றுவார். வாழ்க்கைத் துணையின் தொழிலை மாற்றுவார். விவசாய முறையை மாற்றுவார்.

சனிபகவான், தனது 3-ஆமிட சாரத்தில், 4-ஆம் வீட்டில் செல்லும்போது, ஜாதகரின் தாயையும், இளைய சகோதரனையும் தவிர மற்ற எல்லாவற்றையும் மாற்றி விடுவார்.

2026 மே 17 முதல் 2027 ஜூன் 3 வரை

இப்போது சனிபகவான், தனுசு ராசியின் நான்காம் வீட்டில், ரேவதி நட்சத்திரத்திற்கு மாறி அமர்வார். வெகு முயற்சி செய்து ஒரு திருமணத்தை நடத்திவிடுவார். ஒரு தொழிலையும் நடத்த ஆரம்பிக்க அனுமதி அளிப்பார். சிலர் வாழ்க்கைத் துணை. செய்து கொண்டிருந்த தொழிலில் ஜாயிண்ட் ஆகிக் கொள்வார் சிலரின் வியாபாரம். குத்தகை அடிப்படையில் அமையும். சிலரின் தொழில் நிதி நிர்வாகம் சார்ந்து அமையும் ரியல் எஸ்டேட் துறையினர், ஜாயிண்ட் வென்ச்சர் அடிப்படையில், வீடு கட்டி கொடுப்பர்.

உங்கள் தொழில் சம்பந்தமாக, நிறைய மனிதர்களை சந்திக்க வேண்டி இருக்கும். உங்களில் ஒருசிலர், வீட்டுச் சாப்பாடு முறையில், உங்கள் வீட்டிலேயே தயாரித்து, ஒப்பந்த அடிப்படையில் உணவு விநியோகம் செய்வீர்கள். பொது நிகழ்ச்சிகளில், ஒருங்கிணைப்பாளாராக, பேசும் வேலை செய்வீர்கள். ட்யூசன் எடுப்ப தையே தனி பள்ளி மாதிரி அமைப்பீர்கள். இதுவரையில் இடமின்றி அலைந்த வீட்டுத்தரகர்கள். ஒன்றுசேர்ந்து, ஒரு அலுவலகம் தொடங்கி விடுவீர்கள் ஆக ரேவதி நட்சத் திரத்தில் செல்லும் சனி, சொந்தத் தொழில், வியாபாரத்தை தொடங்க உதவுகிறார்.

சனி பார்வை பலன்

சனி பெயர்ச்சி பலன்கள் 2025

சனி 3, 7, 10 எனும் பார்வைகள் உண்டு.

சனியின் 3-ஆம் பார்வை பலன்

சனி தனது 3-ஆம் பார்வையால், தனுசு ராசியின் 6-ஆமிடத்தை அருகே சென்று பார்க்கிறார். 6-ஆமிடம் என்பது ஒரு குண, ரோக, எதிரி ஸ்தானம். சனி பார்க்கும் இடம் பாழ் எனவே சனியின் பார்வைபடுவதால், தனுசு ராசியாரின் கடன் அடைபடும். நோய் தீரும். எதிரிகள் அகலுவர், உங்கள் தந்தையின் நோயும் தீரும். அவரின் கடனையும் உங்களால் அடைக்க இயலும் இவ்வளவு நாட்களும் ஒரு பெரும் துன்ப அவமானத்தில் சிக்கி, இன்னல்பட்டுக் கொண்டிருந்தவர்களை, இந்த சனி பார்வை மீட்டெடுக்கும்.

உங்கள் தாயாருக்கு வந்த ஆபத்து நீங்கும். சினிமா எடுக்க சுடன் வாங்கி, பொல்லாத பைனான்சியரிடம் சிக்கிக்கொண்டிருந்த வர்கள், உங்கள் சங்கம்மூலம் விடுவிக்கப் படுவீர்கள். ரொம்ப தூரம் பயணித்து வேலைக்குச் சென்றவர்கள். ஒரே இடத்தில் இருந்து வேலை செய்யலாம். இதில் இன்னொரு விஷயம், மாதச் சம்பளம் சற்று மெதுவாக கைக்கு கிடைக்கும். உங்கள் தாய்மாமனுடன் சற்று பிணக்கு ஏற்படும்.

சனியின் 7-ஆம் பார்வை பலன்

சனி தனது 7-ஆம் பார்வையால் தனுசு ராசியின் 10-ஆமிடத்தை பதவிசாக பார்க்கி றார். 10-ஆமிடம் என்பது தொழில் ஸ்தானம். சனி என்பவர் தொழில் காரகர். எனவே தனது காரக பாவத்தை, அதே காரகாதிபதி கெடுக்க மாட்டார் உடனே ஆஹா தொழில் பத்திக்கிச்சு என குத்தாட்டம் குதியாட்டம் போடவேண்டாம். தொழில் கெடாது. அவ்வளவுதான். ஒரு சுறுசுறுப்பு, பரபரப்பு, வேகம் இது எல்லாம் உங்கள் தொழில் காணக் கிடைக்காத சமாச்சாரங்கள் ஆகி விடும். சற்றுசோம்பேறித்தனமாக மெதுவாக தொழில் நகரும். சுத்தமாக தொழில் நின்று போவதற்கு பதில், ஏதோ ஓரளவு நகர்ந்தால் தேவலாம் அல்லவா இதோடு நீங்கள் திருப்திப்பட்டுக் கொள்ளவேண்டும் முக்கிய விஷயங்களை பேசுவதற்கு, நீங்கள் போகாமல், உங்கள் வீட்டில், தொழில் சார்ந்தவர்களை அனுப்பி முடிவு எடுக்க செய்யுங்கள். சனி உங்கள் ராசியையும் பார்ப்பதால் இவ்விதம் கூறப் பட்டுள்ளது.

சனியின் 10-ஆம் பார்வை பலன்

தனுசு ராசியின் 4-ஆம் வீட்டில் அமர்ந் துள்ள சனிபகவான், தனது பத்தாம் பார்வை யால், ராசியைப் பார்க்கிறார் எனவே, உங்களுக்கு ரொம்ப சோம்பேறித்தனம் வந்து விடும். கோவிலுக்குப் போவதை தள்ளிப் போடுவீர்கள். வீட்டு வேலைகளை அப்புறமா பார்த்துக்கொள்ளலாம் என, தாமதப்படுத்து வீர்கள் கொஞ்சதூரப் பயணங்களும் மலைப் பைத் தரும். ஏனோ பிறரிடம் அலட்சியமாக எடுத்தெறிந்து பேசுவீர்கள். இவரை அறிந்தவர்கள் இவர் நன்றாகத்தானே இருந்தார். இவருக்கு என்ன ஆயிற்று என யோசிப்பார்கள்.

உற்சாகம் குறையும். சுறுசுறுப்பு இருக்கவே இருக்காது. பிறரிட மும், தங்கள் நடத்தையிலும் பதவிசாக நடக்க இயலாது. இன்னும் ஒரு படி மேலே போய், ஆமா, இந்தப் பயல்கள் நம்மை மதிச்சாத் தான் ஆச்சா என அலட்சியம் காட்டுவீர்கள். இது அரசியல்வாதிகளுக்கு எவ்வளவு பெரிய பின்னடைவைத் தரும் என யோசியுங்கள். தந்தையை மதிக்க மனசே வராது. தர்மம் சுருங்கும். எனவே 10-ஆம் பார்வையால், சனி ராசியைப் பார்ப்பதால், ஜாதகரை அரை லூசு மாதிரி பாடாய்ப்படுத்தி எடுப்பார்.

சனி பெயர்ச்சி பலன்கள் 2025

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்

இதுவரை தெளிவாக முடிவு எடுத்துக் கொண்டிருந்தவர்கள் அப்படி முடிவு எடுக்க முடியாமல் குழப்பமான சூழ்நிலை சந்திப்பார்கள். இதுவரை ஒழுங்காகவும் கிடைத்துக் கொண்டிருந்த பல விஷயங்கள் தடை ஆகி குழப்பமாகவும் பயம் வரவழைப்பதாகவும் அமையும். பண விஷயத்தில் ஏமாறுவதற்கு வாய்ப்பு அதிகம். நிரந்தரமான வருமானம் இல்லாமல் தற்காலிக வேலை செய்து கொண்டிருந்தவர்களுக்கு அந்த வேலையும் நின்று போகும் அபாயம் உள்ளது.

பெண்கள் அதிக சோதனைகளை சந்திப்பார்கள் அதாவது மூலம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் மண வாழ்க்கையில், அலுவலக வாழ்க்கையில் வியாபார வாழ்க்கையில் அதிகம் சோதனைகளை சந்திப்பார்கள்.

உடல் நலத்தை பொருத்தவரை சிறுசிறு விபத்துகள் சிறுசிறு காயங்கள் உருவாவதற்கு வாய்ப்பு உள்ளது. பொருட்கள் திருட்டு போவது வாகனங்கள் திருட்டுப் போவது மதிப்பு மிகுந்த பொருள் தொலைந்து போவது போன்றவை நடக்கும்.

நம்பிக்கையான நண்பர்களும் மனம் மாறி ஏமாற்றுவார்கள் அல்லது உதவி செய்யாமல் இழுத்தடிப்பார்கள். ஆகவே மிகவும. கவனத்துடன் இருக்க வேண்டும். கொடுத்த கடன் வசூலாகாது தவிர மேலும் கடன் கொடுத்து நஷ்டம் ஆவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.

கணவன் மனைவி உறவிலும் ஏனைய உறவுகளிலும் அடிக்கடி மனஸ்தாபங்கள் உருவாகி மன அமைதி கெட்டுப் போகும்

அதிகமாக யோசிக்க வேண்டிய விஷயத்திலும் யோசிக்க முடியாமல் குழப்பம் ஏற்படுவதால் தவறான முடிவுகள் எடுப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது ஆகவே பெரிய முதலீடுகள் சொத்து வாங்குதல் திருமணம் தொடர்பாக முடிவு எடுத்தல் வழக்கு போலீஸ் விஷயங்களில் முடிவெடுத்தல் போன்றவற்றை கவனமாக செய்ய வேண்டும் .இந்த விஷயங்களை நம்பிக்கை கொண்ட நண்பர்களிடம் யோசனை கேட்பதை தவிர்க்கலாம் காரணம் நட்பு விரிசல் ஆவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது யாராவது நண்பரின் யோசனையைக் கேட்டு அந்த காரியம் தவறாக முடிந்து விட்டால் அந்த நண்பருடன் உறவு முறிந்து போகும் அபாயம் உள்ளது.

சனிப்பெயர்ச்சியின் தொடக்க காலத்தில் அதிக சிக்கல்களை மூலம் நட்சத்திர அன்பர்கள் சந்தித்தாலும் சனிப்பெயர்ச்சியின் இறுதி காலத்தில் நிவாரணம் அதிகம் கிடைக்கும் இழந்த பொருள்கள் மீண்டு வரும் அல்லது புதிய வாய்ப்புகள் உருவாகி மனதுக்கு ஆறுதல் தருவதாக அமையும்.

ரேவதி நட்சத்திர சாரத்தில் சஞ்சாரம் செய்யும் போது மூலம் நட்சத்திர அன்பர்களுக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கும். சொத்து சேரும் வாகனம் வசதி போன்றவை அதிகமாக பெருகி மன நிம்மதி கிடைக்கும். வேலை இழந்தவர்கள் வேலை வாய்ப்பை பெறுவார்கள். அதுவும் நல்ல வேலையாக அமையும். இந்த காலகட்டத்தில் மூலம் நட்சத்திர அன்பர்களுக்கு வருமானத்தில் உயர்வு கிடைக்கும் சொத்து வாங்குவதற்குரிய நல்ல நேரமாக இந்த காலத்தை எடுத்துக் கொள்ளலாம் அதாவது சனி ரேவதி நட்சத்திர சாரத்தில் சஞ்சாரம் செய்யும் போது மட்டும். அதற்கு முன்பு அதாவது பூரட்டாதி உத்திரட்டாதி சாரத்தில் சனி சஞ்சாரம் செய்யும் போது சொத்து வாங்குவதை தவிர்க்கலாம்

மூல நட்சத்திரம் சார்ந்த நண்பர்களுக்கு தாய் தந்தையர் உடல் நலத்தில் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டிய காலம் இந்த சனி பெயர்ச்சி காலம்.

தனுசு ராசி பூராடம் நட்சத்திர அன்பர்களுக்கான சனி பெயர்ச்சி பலன்கள்

சனி பெயர்ச்சிக்கு ஒரு மாதம் முன்பு எக்ஸ்பிரஸ் வேகத்தில் காரியங்கள் சாதகமாக நடப்பதை பார்க்கலாம். .ஆனாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் .மிகவும் சாதகமாக நடக்கிறது என்ற அலட்சியமாக இருந்து விடாமல் கிடைக்கும் பலனை நல்லவிதமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

மிக முக்கியமாக புதிய வேலைக்கான வாய்ப்புகள் உருவாகும். அப்படி உருவாகும் வாய்ப்புகளை அலசி ஆராய்ந்து பார்த்து ஏற்றுக் கொள்ள வேண்டும் .ஒன்றுக்கு மேலாக பல வேலை வாய்ப்புகள் ஒரே சமயத்தில் வந்து திக்கு முக்காட வைக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்

தடைப்பட்டு நின்ற பல விஷயங்கள் தடை நீங்கி வேகமாக முன்னேற்றம் காண்பதை பார்க்கலாம். இதில் திருமண தடையும் அடங்கும். திருமண தடை நீங்கி திருமண பாக்கியம் அமையும் .

காண்ட்ராக்ட் வொர்க் போன்ற வேலை எடுத்து செய்பவர்கள் தடைப்பட்டு நின்ற பல ப்ராஜெக்ட் வேகமாக முன்னேறி லாபத்தை ஈட்டி தருவதாக இருக்கும்.

பார்ட்னர்ஷிப் கூட்டுத் தொழில் போன்ற விஷயங்களில் ஈடுபடுபவர்கள் லாபகரமாக செய்வதற்கு வாய்ப்பு அதிகமாக கைகூடி வரும். நம்பிக்கைக்கு உரியவர்கள் தொழில் சேர்ந்து செய்து தொழில் சிறக்கும்

புதிய நட்புகள் மூலம் பணவரவும் லாபமும் கிடைக்கும். புதிய நட்புகள் சொல்லும் ஆலோசனைகள் இதுவரை வாழ்க்கை இருந்த பல சிக்கல்களை தீர்ப்பதாக சிக்கல் தீர்வதற்கு உதவுவதாக இருக்கும்

உடல் ஆரோக்கியம் நல்ல முன்னேற்றம் அடையும் நீண்ட நாள் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்க வலிகள் மறைந்து நிவாரணம் கிடைக்கும்

மாணவர்களுக்கு மிகவும் அனுகூலமான காலம் என்று சொல்லலாம்.போட்டித் தேர்வுகளில் வெற்றி, எந்த முயற்சியிலும் வெற்றி என்று அழுகூலமான காலமாக பூராடம் நட்சத்திர அன்பர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி காலம் காட்டுகிறது

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ,பண உதவி சுலபமான முயற்சியில் கிடைக்கும் தெய்வ பக்தி அதிகரித்து கோவில் காரியங்கள் தர்ம காரியங்கள் செய்வதில் ஈடுபடுவீர்கள்

இந்த சனி பெயர்ச்சி பூராடம் நட்சத்திர அன்பர்களுக்கு அதிக அளவு நன்மை செய்வதாக அமைந்திருக்கிறது.

சனி பகவான்

தனுசு ராசி உத்திராடம் முதல் பாத அன்பர்களுக்கு சனி பெயர்ச்சி பலன்கள்

கண்ணை கட்டி காட்டில் விட்டது போன்ற காலம் திக்கு திசை தெரியாமல் பிரச்சனைகள் ஒன்றுக்கு பலவாக வந்து தொந்தரவு செய்யும்.

நண்பர்கள் பகைவர்கள் ஆவார்கள். உறவுகள் பிரிந்து போய் அதிக சிக்கலை உண்டாக்கும்.வழக்கு எதுவும் இருந்தால் இப்போது எந்த முடிவும் எடுத்துக் கொள்ளாமல் தள்ளிப் போடுவதற்கு பாருங்கள். காரணம் வழக்கு உங்களுக்கு விரோதமாக தீர்ப்பு ஆவதற்கு வாய்ப்பு உள்ளது

வேலையில் தொந்தரவு இருந்தாலும் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையாக இருக்க பாருங்கள். உங்கள் யோசனை நல்ல யோசனையாக இருந்தாலும் வேலை பார்க்கும் இடத்தில் அதற்கு மதிப்பு இருக்காது. ஆகவே யோசனை சொல்லி அவமானப்படுவதை காட்டிலும் அமைதியாக இருந்து விடுவது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் உங்களை புரிந்து கொள்ளாத பலருடன் சேர்ந்து வேலை பார்க்கும் தர்ம சங்கடமான நிலை தான் நீடிக்கும்.

சனி பெயர்ச்சி இரண்டாவது கட்டத்தில் அது சனி உத்திரட்டாதி சாரத்தில் பயணம் செய்யும்போது இதுவரை இருந்து வந்த கஷ்டங்களிலிருந்து மூச்சு விடும் அளவிற்கு நிவாரணம் கிடைக்கும். சிக்கலாகி இருந்த பல விஷயங்களில் தீர்வு கிடைத்து மன அமைதி திரும்பும்,

சனி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் போது உத்திராடம் நட்சத்திரம் முதல் பாத அன்பர்கள் சில ஆழமான அனுகூலங்களை பெறுவார்கள். மிகக் குறிப்பாக பிரித்து போய் இருந்த உறவுகள் மன சங்கடம் கொண்டிருந்த உறவுகள் இவர்களிடம் அனுகூலமான தன்மை காணப்பட்டு குற்றம் குறைகளை மறந்து சகஜமான நிலைமைக்கு திருப்புவார்கள்

சனி ரேவதி சாரத்தில் பயணம் செய்யும்போது பகை உணர்வுகள் மேலோங்கி சச்சரவு செய்யும் எண்ணம் மிகையாக இருக்கும் ஆகவே வாக்குவாதம் ஏதேனும் ஈடுபட வேண்டாம் மேலும் இந்த காலகட்டத்தில் அதாவது ரேவதி சாதத்தில் சனி இருக்கும்போது கடன் வாங்குதல் போன்றவற்றை தவிர்க்கலாம் வில்லங்கமான சொத்துக்கள் மிகக் குறைந்த விலையில் கைகூடி வருவது போல் காணப்படும் ஆனால் அப்படியான வாய்ப்புகளை அவசியம் தவிர்க்கவும்

கல்வியால் தான் வாழ்க்கையில் வெற்றி என்ற நிலையில் இருப்பவர்கள் சனி பூரட்டாதி சாரத்தில் சஞ்சாரம் செய்யும்போது அனுகூலமான தன்மையை அடைவார்கள் அதேசமயம் சனி உத்திரட்டாதி சாதத்தில் பயணம்செய்யும் போது என்னவென்று புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு சங்கடங்களை சந்திப்பார்கள்.

சனி உத்திரட்டாதி சாரத்தில் பயணம் செய்யும் போது சிலருக்கு உயர் பதவிகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது ஆனால் அந்தப் பதவி வாய்ப்புகளும் மிகுந்த சோதனையான காலகட்டமாக இருக்கும் சக்திக்கு மீறிய வேலைகளை செய்ய வேண்டிய அவசியம் இருக்கும்

தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம் முதல் பாத அன்பர்கள் உழைப்பை அதிகம் நம்பித்தான் ஆக வேண்டும் பிறருடைய வேலைகளும் உங்கள் தலை மேல் பாரமாக வந்துவிடும், பலர் தட்டிக் கழித்த பொறுப்புகள் உங்கள் கைக்கு வந்து சேரும் அதனை நல்லவிதமாக செய்து கொடுத்தால் உங்களுக்கு அனுபவமும் பயனும் கிடைக்கும் ஆனால் இந்த வேலை வாய்ப்புகள் எதுவுமே நேரடியாக உங்களுக்கு அனுகூலமாக தெரியாது ஆழமாக யோசித்துப் பார்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்

சின்ன விஷயங்கள் தொந்தரவு செய்வதை தவிர உடல்நலத்தில் பெரிய அளவில் பின்னடைவு எதுவும் இருக்காது என்று சொல்லலாம்

தனுசு ராசிக்கு சனி தரும் மொத்த பலன்

தனுசு ராசியில் +ஆமிடத்தில் அமர்ந்த சனி ராசியாருக்கு மாற்றமும், ஏற்றமும் தருகிறார். அவர் 6-ஆமிடத்தைப் பார்த்து கெடுபலன்களை அழிக்கிறார். 10-ஆமிடத் தைப் பார்த்து, தொழிலை முடக்காமல், மெதுவாக நடக்கச் செய்கிறார். ராசியைப்பார்ப்பது மட்டுமே கெடுதலாக அமையும். நன்மை அதிகமாகவும், கெடுதல் குறை வாகவும் தருகிறார்.

சனி வக்ர பலன்கள்

சனி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் செல்லும்போது வக்ரம் பெறுவார். அந்த நேரத்தில், மாற்றங்கள் சற்று நிதானிக்கும். வக்ரநிவர்த்தி ஆனவுடன் மாற்றங்கள் முழுவேகத்துடன் செயல்படும். (ஜூலை 12 முதல் நவம்பர் 27 வரை)

2026 ஜூலை 26 முதல் டிசம்பர் 10 வரை ரேவதி நட்சத்திரத்தில் வக்ரம் பெறுவார். இதில் நிறைய தொழில் சார்ந்த பலன்கள் நடக்கும் இந்த வக்ர காலத்தில், தொழில் சற்று தேக்கடைவதுபோல் இருக்கும். வக்ரம் நிவர்த்தி ஆனவுடன் தொழில் நன்கு நடக்கும்

வக்ர சனி காலத்தில், திருவாரூர் எட்டுக் குடி, திருக்குவளை ஸ்தல கோளிலிநாதரை வழிபட வேண்டும்.

பரிகாரங்கள்

சனி, தனுசின் 4-ஆமிடத்தில் இருப்பதால், அர்த்தாஷ்டம சனி என்பர். திருநள்ளாறு சென்று வணங்கவும். ஆஞ்சனேயர் வழிபாடு நல்லது. அருகிலுள்ள சனீஸ்வரருக்கும், அந்த அர்ச்சகருக்கும் வஸ்திரம் வாங்கிக் கொடுக்கவும். அபிஷேகத்திற்கு மஞ்சள் வாங்கிக் கொடுக்கவும். வயதான குருக்களுக்கு மஞ்சள் அல்லது நீல நிற வேஷ்டி துண்டு வாங்கிக்கொடுங்கள். வேலூர்- ஆம்பூர் ஆஞ்சனேயரை வழிபடவும் கோவில் பிரசாத – தேவையறிந்து பொருள் வாங்கிக் காணிக்கையாக்கவும்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!