Homeஅம்மன் ஆலயங்கள்சிருங்கேரி சாரதாதேவி அம்மன்

சிருங்கேரி சாரதாதேவி அம்மன்

சிருங்கேரி சாரதாதேவி அம்மன்

வரலாறு:

கர்நாடக மாநிலம் மைசூரின் அருகிலே சிக்மகளூர் இடத்தில் சிருங்கேரி சாரதாதேவி பீடம் அமைந்துள்ளது. இக்கோவிலில் வீற்றிருக்கும் சாராதேவி. ஸ்ரீ சக்கரத்தின் மீது ஜெபமாலையை பிடித்தவாறு காட்சியளிக்கிறாள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சாரதாதேவி வெள்ளித் தேரில் கோவிலில் உலா வருவாள்.

சிறப்பு:

சரஸ்வதி, லட்சுமி, ஈஸ்வரி ஆகிய மூன்று தேவிகளின் ஒரே ரூபமாக, குரு ரூபினியின் வடிவில் உள்ள சாரதாதேவி விளங்குகிறாள்.

ஆதிசங்கரரால், சிருங்கேரி சாரதாதேவி பீடம் எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கார்த்திகை மாதத்தின் பௌர்ணமி தினத்தன்று நடைபெறும் தீப உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

சிருங்கேரி சாரதாதேவி அம்மன்

பரிகாரம்:

சாந்தமான பார்வையை கொண்டு தன் பக்தர்களை ஆசீர்வதிக்கும் சாராதேவியை நாம் தரிசித்தால், நம் வாழ்வில் அமைதி நிலவ அவள் நமக்கு உதவுவாள். சாரதா தேவியை நாம் தொடர்ந்து வழிபட்டுவர, எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தியும் மன நிம்மதியும் கிடைக்கும்.

வழித்தடம்:

கர்நாடக மாநிலத்தில் சிக்மகளூர் மாவட்டத்தில், சிருங்கேரி எனும் ஊரில் சாரதாம்பாள் கோவில் உள்ளது கர்நாடக மாநிலத்தில் முக்கிய அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சிருங்கேரிக்கு நேரடியாக பேருந்து வசதிகள் உள்ளன.

Google Map:

 

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!