காலம் காலமாக விடாமல் பின் தொடரும் கஷ்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் கருமிளகு பரிகாரம் 

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

கருமிளகு பரிகாரம்

உன்னுடைய மனநிலை நன்றாக இருந்தால் போதும், கிரகநிலை சரியில்லை என்றாலும் உங்கள் வாழ்க்கை நல்லாதான் இருக்கும். உன்னுடைய மனநிலை சரியில்லாமல் போனால், கிரக நிலை என்னதான் உச்சகட்டத்தில் இருந்தாலும் உனக்கு கஷ்டம் வரத்தான் செய்யும். வாழத் தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் கஷ்டம் என்பது இருக்காதுங்க. இவ்வளவுதான் இதை புரிந்து கொண்டு வாழ தொடங்குங்கள் நீங்கள் தான் உங்கள் வாழ்க்கையில் ராஜா.

என்னதான் அடுத்தவர்கள் அட்வைஸ் செய்தாலும் நம்முடைய மனதிற்குள் ஒரு குழப்பம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. வாழ்க்கையில் என்ன பாவம் செய்தோமோ தெரியவில்லை? இன்று இவ்வளவு கஷ்டப்படுகின்றோம் இந்த கஷ்டத்திற்கு ஏதாவது தீர்வு கிடைக்க வழி உண்டா? அதுவும் ஆன்மீகரீதியாக கர்ம வினைகளை, நம்மை துரத்தும் கஷ்டங்களை குறைக்கும் சுலபமான ஒரு பரிகாரம் உங்களுக்காக.

தோஷங்கள், நம்மை துரத்தும் கஷ்டங்கள், கர்ம வினைகள் எல்லாவற்றுக்கும் தீர்வை கொடுக்கக்கூடிய நாள்தான் ‘பிரதோஷம்’ சிவபெருமானை நினைத்து பிரதோஷ காலத்தில் சிவன் கோவிலில் இருந்து சிவபெருமானை மனதார தரிசனம் செய்து பிரார்த்தனை வைத்தாலே நம்முடைய கர்ம வினைகள் அனைத்தும் கரைந்து போகும் இதுதான் முதல் பரிகாரம்.

கருமிளகு பரிகாரம் 

அடுத்தபடியாக பிரதோஷ காலத்தில் உங்கள் வீட்டில் இருந்து நீங்கள் கிளம்பும்போது உங்களுடைய கையில் 3 வரமிளகாய், ஒரு ஸ்பூன் அளவு மிளகு இந்த இரண்டு பொருட்களையும் ஒரு பேப்பரில் வைத்து மடித்து எடுத்துச் செல்லுங்கள்.

கோவிலுக்கு சென்று பின்பு அந்த பிரதோஷ காலம் முடிவதற்குள் அதாவது மாலை 4:30 மணியில் இருந்து 06:00மணிக்குள் பேப்பரில் மடித்து வைத்திருக்கும் இந்த இரண்டு பொருள்களையும் உங்கள் உள்ளங்கையில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

நந்திக்கு அருகில் செல்லுங்கள் சிவபெருமானை பார்த்தவாறு எனக்கு இருக்கக்கூடிய தோஷங்கள், கர்ம வினைகள் அனைத்தும் கரைந்து போக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு உங்கள் கையில் வைத்திருக்கும் மிளகாய் மற்றும் மிளகை அப்படியே மூன்று முறை உங்களுடைய தலையில் சுற்றி மீண்டும் அதே காகிதத்தில் மடித்து வைத்து கோவிலிலிருந்து வரும்போது உங்கள் வீட்டிற்கு எடுத்து வந்து விடுங்கள்.

குறிப்பு : நந்தி தேவருக்கும் சிவபெருமானுக்கும் இடையே வழியே மறித்துக்கொண்டு நடுவே போய் நிற்கக் கூடாது. கொஞ்சம் ஓரமாக நின்று இந்த பரிகாரத்தை செய்து கொள்ளுங்கள்.

வீட்டிற்கு வந்தவுடன் சாம்பிராணி தூபம் போடும் இரும்பு தூபக்கால் இருந்தால் அதில் ஒரு கட்டு கற்பூரம் வைத்து ஒரு கொட்டாங்குச்சியை வைத்து நெருப்பு மூட்டி அந்த நெருப்பில் இந்த மிளகாயையும், மிளகையும் போட்டு பொசுக்கி விடுங்கள். அவ்வளவுதான் ‘உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் பொசுங்கிப் போய்விடும்’. அறிந்தும் அறியாமலும் செய்த பாவ புண்ணிய கணக்குகளுக்கு ஒரு வழியாக ஒரு தீர்வினை அந்த ஆண்டவன் கொடுப்பான்.

பரிகாரத்தின் மூலம் நமக்கு வரக்கூடிய கஷ்டங்கள் குறைக்கப்படும். பாவம் செய்துவிட்டு பரிகாரத்தையும் தேடக்கூடாது. பரிகாரத்தை செய்துவிட்டு பாவ செயல்களிலும் ஈடுபடக்கூடாது. அறியாமல் செய்த பாவத்திற்கு வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டு பரிகாரத்தை தேடி கொள்கின்றோம். இந்த மன நிறைவு நம்முடைய வாழ்க்கையில் நேர்மறை ஆற்றலை நல்லதை கொடுக்க தொடங்கும். வரக்கூடிய கஷ்டங்களும் பெரிய பாதிப்பை கொடுக்காது.

நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு பரிகாரத்தை செய்யுங்கள். பரிகாரத்துடன் சேர்ந்து உங்களால் முடிந்தவரை இயலாதவர்களுக்கு உதவி செய்து வரும் பட்சத்தில் கர்ம வினைகளையும், கஷ்டங்களையும் நினைத்து நீங்கள் ஒருபோதும் கவலைப்பட வேண்டாம். உங்கள் கஷ்டத்தை அந்த ஆண்டவன் பார்த்துக் கொள்வான். என்ற கருத்தோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

Leave a Comment

error: Content is protected !!