உங்கள் வீட்டில் தங்கம் பெருகுவதற்கான எளிய தாந்த்ரீக பரிகாரம் !!!

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

தாந்த்ரீக பரிகாரம்

இன்றைய காலகட்டத்தில் தங்கம் வாங்குவது கடினமாக இருந்தாலும், அந்த தங்கத்தை சேமிப்பது மிகவும் கடினமாக இருக்கின்றது. என்னதான் ஒரு குடும்பத்தில் தங்க நகைகள் இருந்தாலும் அது வீட்டில் இருப்பதைவிட அடகு கடைகளிலும், வங்கியிலும் தான் அதிக நாட்கள் இருக்கிறது. வீட்டில் இருக்கும் தங்கம் பாதுகாப்பாக பாதுகாப்பாக இருக்கவும் மேலும் தங்கம் வாங்கி சேர்க்கவும் இந்த பரிகாரம் செய்யலாம். இந்த பரிகாரத்தை செய்பவர்களுடைய வீட்டில் தங்கம் நிச்சயம் பெருகும். அழிவில்லா-அளவில்லா தங்கத்தை தரும் ஆன்மீகம் சொல்லும் எளிமையான தாந்திரீக பரிகாரங்கள் இதோ உங்களுக்காக!

நேர்மறை ஆற்றலை கொண்ட இந்த மூன்று பொருள்களையும் ஒன்றாக வைத்தால் வீட்டில் தங்கமும், பணமும் நிறைய சேரும்.நேர்மறை ஆற்றலை அள்ளிக் கொடுக்கக்கூடிய பொருள்தான் பச்சை கற்பூரம்.இது இறை சக்தியை, நேர்மறை ஆற்றல் ஈர்த்துக் கொடுக்கும். அடுத்தபடியாக சொல்லக்கூடிய பொருள் கிராம்பு. இது மகாலட்சுமிக்கும், பெருமாளுக்கும் உகந்த பொருள். பெருமாள் கோவில் தீர்த்தத்தில் கிராம்பு இல்லாமல் இருக்காது. பச்சை கற்பூரமும் பெருமாள் கோவில் தீர்த்தத்தில் சேர்க்கக்கூடிய ஒரு பொருள்தான். அடுத்தபடியாக சொல்லப்பட்டுள்ள பொருள் துளசி இலை.

மகாலட்சுமியின் ஸ்வரூபம், பெருமாளின் ஸ்வரூபம் இந்த துளசி இலை தான். ஒரு சிறிய கண்ணாடி கிண்ணத்தில் பச்சை கற்பூரம் சின்ன துண்டு, துளசி இலைகள் இரண்டு ,கிராம்பு 3 இந்த பொருள்களை எல்லாம் போட்டு உங்களுடைய வீட்டில் குண்டுமணி தங்கம் இருந்தால் அதில் ஒன்றோடு இந்த பொருளை வைத்து பீரோவில் வைத்து விட்டால் போதும் அந்த குண்டுமணி தங்கம் சில நாட்களில் பெருகத் தொடங்கிவிடும் அதாவது நிறைய தங்கம் வாங்கும் யோகத்தை உங்களுக்கு இந்த சின்ன பரிகாரம் கொடுத்துக் கொண்டே இருக்கும்.

தங்கம் இல்லாத வீடு பெரும்பாலும் இருக்காது, உங்களுடைய வீட்டில் தங்கம் இல்லையென்றால் பரவாயில்லை இந்த மூன்று பொருள்களையும் பீரோவில் வைத்துவிட்டு தங்கம் வாங்கக்கூடிய யோகத்தை பெற வேண்டும் என்று குலதெய்வத்திடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். மகாலட்சுமியிடம் பிரார்த்தனை வையுங்கள். இந்த பரிகாரத்தை ஒரு பௌர்ணமி நாளில் ஒரு வெள்ளிக்கிழமையில் செய்தால் நல்லது.

துளசி இலைகள் காய்ந்து விட்டால் அதை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விட்டு மீண்டும் புதிய இலைகளை வைக்கலாம். பெருமாள் கோவிலுக்கு போறீங்க அங்கு பிரசாதமாக துளசி இலை கொடுப்பாங்க அதை வாங்கி வந்து இந்த கிண்ணத்தில் போட்டு வைத்தால் ரொம்ப நல்லதுங்க. பெருமாள் கோவிலில் கொடுக்கக்கூடிய தீர்த்தத்தை கொண்டு வந்து பீரோவுக்குள் லேசாக தெளித்து விடுங்கள். நிறைய தண்ணீர் ஊற்றி விட்டால் பூசணம் பிடித்து விடும். இல்லையென்றால் அந்த தீர்த்தத்தை ஒரு கிண்ணத்தில் ஊற்றி திறந்தபடி கீழே கொட்டாமல் சிறிது நேரம் பீரோவுக்குள் வைத்து எடுக்கலாம்.

அந்த பாசிட்டிவ் எனர்ஜியும் வீட்டில் மகாலட்சுமி கடாட்சத்தை கொடுக்கும். தங்கம் தங்குவதற்கான இந்த ஒரு எளிய தாந்த்ரீக பரிகாரத்தை நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் வீட்டில் தங்கம் தங்கும்.

Leave a Comment

error: Content is protected !!