சிருங்கேரி சாரதாதேவி அம்மன்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

சிருங்கேரி சாரதாதேவி அம்மன்

வரலாறு:

கர்நாடக மாநிலம் மைசூரின் அருகிலே சிக்மகளூர் இடத்தில் சிருங்கேரி சாரதாதேவி பீடம் அமைந்துள்ளது. இக்கோவிலில் வீற்றிருக்கும் சாராதேவி. ஸ்ரீ சக்கரத்தின் மீது ஜெபமாலையை பிடித்தவாறு காட்சியளிக்கிறாள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சாரதாதேவி வெள்ளித் தேரில் கோவிலில் உலா வருவாள்.

சிறப்பு:

சரஸ்வதி, லட்சுமி, ஈஸ்வரி ஆகிய மூன்று தேவிகளின் ஒரே ரூபமாக, குரு ரூபினியின் வடிவில் உள்ள சாரதாதேவி விளங்குகிறாள்.

ஆதிசங்கரரால், சிருங்கேரி சாரதாதேவி பீடம் எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கார்த்திகை மாதத்தின் பௌர்ணமி தினத்தன்று நடைபெறும் தீப உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

சிருங்கேரி சாரதாதேவி அம்மன்

பரிகாரம்:

சாந்தமான பார்வையை கொண்டு தன் பக்தர்களை ஆசீர்வதிக்கும் சாராதேவியை நாம் தரிசித்தால், நம் வாழ்வில் அமைதி நிலவ அவள் நமக்கு உதவுவாள். சாரதா தேவியை நாம் தொடர்ந்து வழிபட்டுவர, எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தியும் மன நிம்மதியும் கிடைக்கும்.

வழித்தடம்:

கர்நாடக மாநிலத்தில் சிக்மகளூர் மாவட்டத்தில், சிருங்கேரி எனும் ஊரில் சாரதாம்பாள் கோவில் உள்ளது கர்நாடக மாநிலத்தில் முக்கிய அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சிருங்கேரிக்கு நேரடியாக பேருந்து வசதிகள் உள்ளன.

Google Map:

 

Leave a Comment

error: Content is protected !!