முக்கிய ஜோதிட குறிப்புகள்-பகுதி-8

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

ஜோதிட குறிப்புகள்-பகுதி-8

  • லக்னாதிபதி பலம் பெற்று 4,9ம் வீடுகளுக்குரிய கிரகங்கள் ஒருவருக்கொருவர், கேந்திரம் நிலைபெற்று அல்லது 4,5க்குரியவர்கள் 4-லோ 9-லோ கூடியிருந்தாலும், 7, 10-ஆம் இடங்களில் ஒன்றுகூடி இருந்தாலும், 9ம் அதிபதிக்கு 7-லோ 10-லோ இருந்தாலும் ஜாதகர் கவிமானாகவும் ,செல்வமகனாகவும் ,சுகவாழ்வை அடையக்கூடியவர் ஆவார்.
  • லக்னாதிபதி, சூரியன், சந்திரன் ஆகியோர் கேந்திரம் அல்லது திரிகோணத்தில் சேர்ந்தோ அல்லது தனித்திருந்து ஆட்சி அல்லது நட்பு நிலை பெற்று இருந்தால் ஜாதகர் பெருந்தன்மை உடையவராகவும், பக்தி வழியில் ஈடுபாடு உடையவராகவும், வழிபாட்டுக்குரிய வராகவும் விளங்குவார்.
  • ஐந்தாம் வீட்டின் அதிபதி, குரு, சனி, ஜாதகத்தில் பலம் பெற்றிருந்து கேந்திர திரிகோண ஸ்தானங்களில் இருப்பார்களானால், ஜாதகருக்கு தன்னைப்பற்றிய ஞானம் உண்டாகும். சுக வாழ்வு அமையும், ஆயுள் நீளும், சூரியனும் பலம் பெற்றிருந்தால் அதிக சிறப்புகள் ஏற்படும்.
  • சூரியன் ராசியில் நீசம் பெற்று, நீச நவாம்சத்திலும் இருந்தார் ஆனால் குபேரன்கூட குசேலன் ஆக நேரும்.
  • சிம்மத்தில் சூரியன் இருந்து நீசம் பெறாமல் இருந்தாலும், புதன் கன்னியில் உச்சம் பெற்றிருந்தாலும் சாதாரண நிலையில் பிறந்தவர்கள் கூட உயர்நிலைக்கு கொண்டு செல்லப்படுவார்கள்.
  • சூரியன்-மேஷம், சிம்மம், தனுசு ஆகிய வீடுகளில் 5வது நவாம்சத்தில் இருந்தாரானால் மகா யோகம் உண்டாகும். அவ்வாறே ரிஷப,கன்னி, மகரங்களில் 8வது நவாம்சத்தில் இருப்பாரானால், மகத்தான நன்மைகள் உண்டாகும். அவ்வாறே கடகம்,விருச்சகம்,மீனங்களில் இரண்டாவது நவாம்சத்தில் இருப்பாரானால், மகத்தான பாக்கியங்கள் ஏற்படும்.
  • செவ்வாய் மகரத்தில் உச்சம் பெற்று, லக்னத்தில் சனி இருந்து, சூரியனும் சந்திரனும் தனுசு ராசியில் முதல் பாதியில் குடிகொண்டிருந்தால் ஆனால் ஜாதகர் பகைவரை வென்று பராக்கிரமத்துடன், பாராளும் தகுதியை பெறுவார்.
  • சந்திரனைத் தவிர இதர சுபகிரகங்கள் சூரியனுக்கு இரண்டாம் இடத்தில் இருந்தால் மிகவும் உன்னதமான நற்பலன் உண்டாகும். பணமும் கூடும், அந்தஸ்தும் உயரும்.
ஜோதிட குறிப்புகள்
  • மேஷத்தில் சூரியனும், குரு-சுக்கிரன் ஆகியோர் மீனத்தில், சனி துலாத்திலும், நிறைமதி பலம்பெற்று செவ்வாயால் பார்க்கப்பட்ட நிலையிலும் இருந்தால், ஜாதகன் ராணுவத்தில் தளபதியாக இருக்கக்கூடும்.
  • சூரியனுக்கு முன்னும் பின்னும் சுப கிரகங்கள் இருந்தால், ஜாதகருக்கு எல்லா உயர்வுகளும் ஏற்படும்.
  • சூரியனுக்கு பன்னிரண்டாம் இடத்தில் மட்டும் சந்திரனைத் தவிர ஏதேனும் ஒரு சுப கிரகம் இருந்தாலும் கூட ஜாதகருக்கு நற்பலன்கள் உண்டாகும்.
  • சந்திரனுக்கு 2-ம் வீட்டில் சூரியனை தவிர ஏனைய எந்த கிரகம் இருந்தாலும் ஜாதகருக்கு செல்வ சுபிட்சமும் உண்டாகும்.
  • சந்திரனுக்கு 12-ம் இடத்தில் சூரியனை தவிர வேறு எந்த கிரகம் இருந்தாலும் யோகம் உண்டாகும். நற்பலன்களும், செல்வமும், சௌபாக்கியமும் ஏற்படும்.
  • சந்திரனுக்கு இருபுறங்களிலும் சூரியனைத் தவிர வேறு எந்த கிரகம் இருந்தாலும், பலவித ஐஸ்வரியங்கள் ஜாதகருக்கு உண்டாக வாய்ப்பு உண்டு.
  • சந்திரனுக்கு 2மற்றும் 12ல் சூரியன் இருந்தால் யோக பந்தம் என்பது கிடையாது. யோகமும் கிடையாது.
  • ஒருவர் பயங்கரமான வறுமையில் பாதிக்கப்பட வேண்டுமானால், அதற்கு சந்திரனுக்கு முன்னும் பின்னும் உள்ள இடங்கள் காலியாக இருக்கும். அதாவது எந்த கிரகத்தாலும் சூழப்படாமல் இருக்கும்.
ஜோதிட குறிப்புகள்
  • ஒருவருக்கு வறுமை தீர வேண்டுமானால் சந்திரனுக்கு 1, 4 ,7 10 ஆகிய இடங்களில் குரு அமர்ந்து இருக்க வேண்டும்.
  • சந்திரனிலிருந்து 6, 7, 8ம் இடங்களில் சுபக்கிரகங்கள் இருக்குமானால் ஜாதகருக்கு நற்பலன்கள் உண்டாகும்.
  • சந்திரனில் இருந்து 3, 6, 10 ,11-ம் இடங்களில் புதன், குரு, சுக்கிரன் ஆகியோர் இருந்தார்களானால் ஜாதகருக்கு ஐஸ்வர்யமும், அந்தஸ்தும், செல்வாக்கும், புகழும் உண்டாகும்.
  • ஒரு ஜாதகர் அறிவு, செல்வம், இரண்டையும் பெறுவதற்கு சந்திரனிலிருந்து 3,6,9,12-ம் இடங்களில் சூரியன் இருப்பது நல்ல அறிகுறியாகும்.
  • சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு இருப்பாரானால், கஜகேசரி யோகம் உண்டாகும். இதன் பலன் நீண்ட ஆயுள், செல்வம், சுபிட்சம்.

Leave a Comment

error: Content is protected !!