Homeஆன்மிக தகவல்வெற்றி தரும் விநாயகர் மந்திரங்கள்!

வெற்றி தரும் விநாயகர் மந்திரங்கள்!

விநாயகர்

ஆன்மீக அன்பர்களின் நெஞ்சங்களில் என்றும் நிலைத்து நின்று, அவர்களின் அன்றாட நடவடிக்கைகளில் பிரிக்க முடியாத வழிபாடாக திகழ்வது விநாயகர் பெருமான் வழிபாடு.

எந்த செயலை தொடங்கினாலும் அந்த செயல் தடையின்றி துரிதமாக நடைபெற, பிள்ளையார் சுழி போட்டு தொடங்குவது இன்றைக்கும் நம்மில் பலருக்கு வழக்கமாக உள்ளது. கோயில்களிலும் நம் இல்லங்களிலும் எந்த பூஜை அல்லது ஹோமம் என்றாலும் முதலில் வழிபடு கனங்களின் தலைவனான கணபதிக்கு தான்.

இதையும் கொஞ்சம் படிங்க : வாஸ்து தோஷம் போக்கும் கால பைரவர்

‘நாயகன்’ என்றால் தலைவன். ‘விநாயகன்’ என்றால் இவருக்கு மிஞ்சிய தலைவன் எவருமில்லை என்பது பொருள். ‘அம்மையப்பனே உலகம்; உலகம்தான் அம்மையப்பன்’ என்று தன் சமயோசிதத்தால் ஞானக்கனியை பெற்ற இந்த கற்பகக் கனியை வணங்கினால் நமது அறிவுத்திறன் மேலோங்கும். வித்தைகள் சிறக்கும்,புத்திர சம்பத்தும், சக்தியும் பெருகும். செய்யும் செயல்கள் எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும். ஆனை முகத்தோனின் தும்பிக்கை நமக்கு நம்பிக்கை அளிக்கும்.

அந்தந்த கிழமைகளில் நவகிரகத்துக்கு உகந்த கீழ் காணும் கணபதி துதியை சொல்லி விநாயகரை மனதார நினைத்து வணங்கினால் எல்லா நன்மைகளும் நம்மை நாடி வந்து சேரும்.

விநாயகர்

ஞாயிறு –சூரிய ரூப வக்ரதுண்ட கணபதயே நம :

திங்கள் – சந்த்ர ஸ்வரூப பாலசந்த்ர கணபதயே நம :

செவ்வாய் – அங்காரக ஸ்வரூப சங்கடஹர கணபதியே நம :

புதன் – புத ஸ்வரூப நவனீத ஸ்தேவ கணபதியே நம :

வியாழன் – குரு ஸ்வரூப ஸந்தன கணபதியே நம :

வெள்ளி – சுக்ர ஸ்வரூப க்ஷிப்ர ப்ரஸாத கணபதியே நம :

சனி – சனீ ஸ்வரூப அபயப்ரத கணபதியே நம :

ராகு ,கேது வழிபாட்டு காலங்களில் கீழ்காணும் துதியை சொல்லி வழிபடலாம்.

ராகு –ராகு ஸ்வரூப துர்கா கணபதியே நம :

கேது – கேது ஸ்வரூப ஞான கணபதியே நம :

அதேபோல் எல்லா நாட்களிலும் கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி விநாயகரை வழிபடுவது விசேஷம்.

‘நவக்ரஹ ஸ்வரூப ஸதா சுபமங்களகர க்ரஹ

ஸ்வரூபகம் கணபதியே நம :’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!