உங்கள் ராசிக்கு யோகம் தரும் கிரகங்கள் எது ?

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

உங்கள் ராசிக்கு யோகம் தரும் கிரகங்கள் எது ?

 🌎பூர்வ ஜென்ம புண்ணியத்தின் படி தான் நம் வாழ்க்கை அமையும் என்பதும், அதிகம் புண்ணியம் செய்தவர்களுக்கு இந்த ஜென்மத்தில் நல்ல ஜாதகம் அமையப் பெற்று யோக பாக்கியங்களைப் பெற முடியும் என்பதும் ஞான நூல்கள் சொல்லும் விளக்கம் .   அவ்வகையில் ஜாதகத்தின் சில அமைப்புகள் யோக வாழ்வு அளிப்பதாக அமையும்.

🌎உதாரணமாக ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5-ஆம் இடம் வலுத்திருக்க 5ம் வீட்டோன்,5-ம்வீட்டுக்கு காரகத்துவம் கொண்ட கிரகம், நவகிரகங்களில் முதல் சுப கிரகமான குரு ஆகியோர் நல்ல நிலையில் அமையப் பெற்று இருந்தால் சகல சவுபாக்கியங்களும் யோகங்களும் கூடிய வாழ்க்கை அமையும்.  

🌎அதேபோல் ஜாதகத்தில் லட்சுமி ஸ்தானங்கள் என்றும் விஷ்ணு ஸ்தானங்கள் என்றும் சில இடங்களை குறிப்பிட்டுச் சொல்வார்கள். அதாவது 1, 5, 9 இடங்கள் திரிகோண ஸ்தானங்கள் எனப்படும். இவற்றை லட்சுமி ஸ்தானங்கள் என்று சிறப்பிப்பார்கள். இந்த மூன்று இடங்களும் வலுப்பெற்று இருந்தால் அறிவு மற்றும் அதிர்ஷ்டத்தால் பொருள் சேரும்.  

விஷ்ணு ஸ்தானங்கள் என்று எவற்றை குறிப்பிடுவார்கள் தெரியுமா?   

🌎கேந்திர ஸ்தானங்களாகிய 1,4,7,10-ம் இடங்களே  விஷ்ணு ஸ்தானங்கள்  எனப்படும். இந்த இடங்கள் வலுப்பெற்று இருக்கும் ஜாதகர்களுக்கு சுய உழைப்பாலும், திறமையாலும், பொருள் சேரும் பாக்கியம் உண்டாகும்.

🌎திரிகோண மற்றும் கேந்திர ஸ்தானங்களின் அதிபதி கிரகங்கள் ஒன்று கூடி கேந்திரத்திலோ திரிகோணத்திலோ பலம் பெற்று அமையப் பெற்றவர்கள் மகா பாக்கியசாலிகள் எனலாம்.    இவ்வாறு முன் வினைகளுக்கு ஏற்ப பல யோக அமைப்புகள் ஜாதகத்தில் இடம் பெறுவது உண்டு. அதே போல் அவரவர் விதிப்படி ஏற்ற பலனை அளிக்கும் விதத்திலேயே ஜாதகத்தில் கிரகங்கள் நிலைபெற்று இருக்கும். அந்த வகையில் குறிப்பிட்ட கிரகங்கள் குறிப்பிட்ட ராசிக்கு பலன் அளிப்பதாக அமையும்.  

யோகம் தரும் கிரகங்கள்

நாம் ஒவ்வொரு ராசிக்கும் எந்தெந்த கிரகங்கள் அதிர்ஷ்டம் அளிக்கும் என்பது குறித்து தெரிந்து கொள்வோமா?

மேஷம்  

🌎மேஷ ராசிக்காரர்களுக்கு சூரியன், செவ்வாய், குரு ஆகியோர் யோக பாக்கியங்களை அளிக்கக் கூடியவர்கள். இவர்கள் மூவருமே ராஜ கிரகங்கள் என்பதால் அரச யோகம் உண்டாகும். உயர் பதவி கிடைக்கும். பிறரை வேலை வாங்கும் தகுதி ஏற்படும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

🔴புதன், சுக்கிரன், சனி ஆகியோரால் கெடுபலன்கள் உண்டாகும்.இந்த  கிரகங்களின் ஆட்சி காலங்களில் (தசா, புத்தி, அந்தரம்) எச்சரிக்கையாக இருப்பதுடன், குறிப்பிட்ட காலங்களில் கிரகசாந்தி பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது.

🙏பழனிக்குச் சென்று தண்டாயுதபாணியை வழிபடுவதும், ஏழைகளின் கல்விக்கு உதவுவதும் விசேஷ பலன்களை பெற்றுத்தரும்.  

ரிஷபம்  

🟢இந்த ராசிக்காரர்களுக்கு சூரியன், புதன், சனி ஆகியோர் யோக பலன்களைத் தரக் கூடியவர்கள். சனி முழுமுதல் யோககாரன் ஆவார். இவர் வலுத்து இருந்தால் சகல யோகங்களையும் பெறமுடியும். சனியும் புதனும் இணைந்து இருப்பது அதிர்ஷ்ட வாய்ப்புகளை பெற்றுதரும். சூரியன் 4 எனும் கேந்திரத்தில் மட்டும் அதிபதி என்பதால் இவர் லக்னத்திற்கு பகை கிரகம் என்றாலும் சொத்து சுகங்களை வழங்குவார்.

🔴இந்த ராசிக்காரர்களுக்கு சந்திரன், குரு, சுக்கிரன் ஆகியோரால் கெடுபலன்கள் ஏற்படும் என்பதால் குறிப்பிட்ட கிரகங்களின் ஆட்சி காலங்களில் பிரீதி பரிகாரங்களைச் செய்து கொள்வது அவசியமாகும். சில வழிபாடு நன்மையளிக்கும்.  

மிதுனம்  

🟢இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு புதன், சுக்கிரன் ஆகியோரால் யோக பலன்கள் கிடைக்கும்.

🔴சூரியன், செவ்வாய், குரு ஆகியோரால் கெடுபலன்கள் உண்டாகும்.

🙏குறிப்பிட்ட கிரகங்களின் ஆட்சி காலங்களில் கிரக சாந்தி பரிகாரங்களை செய்வது நல்லது. ஞாயிற்று கிழமைகளில் அம்பாளை வழிபடுவதால் நன்மை உண்டாகும்.

கடகம்  

🟢இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு செவ்வாய்,குரு, சந்திரன் ஆகியோரால் யோக பலன்கள் சித்திக்கும். இவர்களில் செவ்வாய் வலுத்திருந்தால் விசேஷ பலன்கள் நிச்சயம். சுப வீடுகளில் இந்த மூவரின் இணைவு மற்றும் பார்வை மூலம் நலம் பெருகும்.

🔴புதன், சுக்கிரன், சனி ஆகியோரால் கடக ராசிக்காரர்களுக்கு கெடுபலன்கள் ஏற்படலாம்.

🙏குறிப்பிட்ட இந்த கிரகங்களின் தசா, புத்தி, அந்தர காலங்களில் குறிப்பிட்ட கிரகங்களுக்கு பிரீதி பரிகாரங்கள் செய்து கொள்வது அவசியம்  மகாலட்சுமி மற்றும் ஆஞ்சநேயரை வழிபடுவதால் கெடுபலன்கள் குறையும்.  

சிம்மம்  

🟢இவர்களுக்கு செவ்வாய் யோகக்காரர் ;யோக பலன்களை அளிப்பவர் சூரியன், குரு, ஆகியோரது தொடர்பு செவ்வாய்க்கு இருக்கும் பட்சத்தில் சுப பலன்கள் அதிகரிக்கும். ராஜயோகம் உண்டாகும். சிம்மம் சூரியனின் வீடாவதால் சூரியன், செவ்வாய், குரு ஆகியோர் ராஜகிரகங்கள்  என்பதாலும் உயர் அதிகாரப் பதவிகள் இவர்களுக்கு இயற்கையாகவே அமையும்.

🔴இவர்களுக்கு புதன், சுக்கிரன், சனி ஆகியோர் சங்கடங்களையும் தரக் கூடும் என்பதால் குறிப்பிட்ட தசை, புத்தி, அந்தர காலங்களில் விழிப்பு தேவை.

🙏சனிக்கிழமைகளில் சிவாலயங்களுக்கு சென்று நவகிரகங்களில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டு வரலாம்.  

கன்னி  

🟢இந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிரன்,புதன் ஆகியோரது ஆட்சிக் காலங்கள் யோக பாக்கியங்களை அள்ளித்தரும்.

🔴சந்திரன், செவ்வாய், குரு ஆகியோரது தசை, புக்தி காலங்களில் எச்சரிக்கை தேவை.

🙏பவுர்ணமி தினங்களில் வீட்டில் நெய் விளக்கேற்றி வைத்து, சர்க்கரை பொங்கல் சமர்ப்பித்து அம்பாளை வழிபடுவதால் நன்மை உண்டாகும்  

துலாம்  

🟢இந்த ராசிகாரர்களுக்கு சனி முதல்தர யோககாரன் ஆவார்  இவர் வலுத்து இவரது தசை, புக்தி, அந்தரங்கள் நடைபெறும்போது யோக பாக்கியங்களை ஜாதகர் பெறமுடியும்.

🔴சூரியன், செவ்வாய், குரு ஆகியோரது ஆட்சிக் காலங்களில் சோதனைகளும் சங்கடங்களும் உண்டாகும்.

🙏குறிப்பிட்ட காலங்களில் குறிப்பிட்ட கிரகத்திற்கு பிரீதி பரிகாரங்கள், செய்து கொள்வது அவசியமாகும். இந்த ராசிக்காரர்கள் நரசிம்ம சுவாமியை வழிபடுவது சிறப்பு. இயன்றால் பரிக்கல், திருவரங்கம் அழகியசிங்கர் சன்னதிக்கு சென்று வழிபட்டு வரலாம்.  

விருச்சிகம்  

🟢இந்த ராசியினருக்கு சூரியனும், சந்திரனும், யோக கிரகங்கள் ஆவார்கள். இவர்கள் சேர்க்கை சுப வீடுகளில் அமைந்தால் யோக பாக்கியங்கள் அதிகமாகும். இவர்களுடன் குரு சேர்ந்தாலும் பார்த்தாலும் சுபபலன்கள் மேலும் அதிகரிக்கும். உயர் அதிகார பதவி கிடைக்கும்.

🔴இவர்களுக்கு புதன், சுக்கிரன், சனி ஆகியோர் தசை புக்திகளில் சங்கடங்கள் ஏற்படும்.

🙏இந்த கிரகங்களுக்கு பிரீதி பரிகாரங்களைச் செய்து கொள்வதன் மூலம் சங்கடங்களை குறைத்துக்கொள்ளலாம். இவர்கள் ஒருமுறை காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வரம் பெற்று வரலாம். வீட்டில் வெள்ளிக்கிழமைகளில் லலிதா சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதிப் பாடல்களைப் பாடி வழிபடலாம்.  

தனுசு  

🟢சூரியன், செவ்வாய், புதன், குரு ஆகியோரால் யோக பலன்கள் உண்டாகும். சூரியன், புதன், செவ்வாய், குரு சேர்க்கையும் சூரியன், செவ்வாய் தொடர்பும் விசேஷமானவை. ராஜயோக பலன்களை அள்ளித்தரும்.

🔴சுக்கிரனும் சனியும் கெடு பலன்களை உண்டு பண்ணுவார்கள். புதன் பாதகாதிபதி என்பதால் சங்கடங்களையும் தருவார்.

🙏குறிப்பிட்ட கிரகங்களின் தசை, புக்தி, அந்தரங்கள் நடக்கும் நேரம் அறிந்து அந்தந்த கிரகத்திற்குரிய பிரீதி பரிகாரங்களைச் செய்துகொள்வது நல்லது. இந்த ராசியினர் கோயில் அன்னதானத்திற்கு உதவி செய்யலாம், இயன்றால் குடந்தை சாரங்கபாணி கோயிலுக்குச் சென்று வழிபட்டு வரலாம்.  

மகரம்  

🟢சுக்கிரன் முதல்தர யோககாரகரன் ஆவார். புதன், சுக்கிரன் சேர்க்கை சுப வீடுகளில் அமையும்போது யோக பாக்கியங்கள் பெருகும்.

🔴சந்திரன், செவ்வாய், குரு ஆகியோரது ஆட்சிக் காலங்களில் எச்சரிக்கை தேவை.

🙏இந்த ராசியினர் திருவரங்கம் சென்று திருவரங்கநாதரை வழிபட்டு வந்தால் நற்பலன்கள் கைகூடும். வீட்டில் சஷ்டி கவசம் படித்து முருகப்பெருமானை வழிபட்டு வரலாம்.  

கும்பம்  

🟢இந்த ராசிக்கு சுக்கிரன் முதல்தர யோக காரக கிரகம் ஆவார். செவ்வாயும் சுக்கிரனும் சுப ஸ்தானங்களில் இணைவது விசேஷமாகும்.

🔴இவர்களுக்கு சந்திரன், செவ்வாய், குரு ஆகியோரால் பிரச்சனைகள் எழ வாய்ப்பு உண்டு. குறிப்பிட்ட கிரகங்களின் தசை புத்தி அந்தர காலங்களில் பிரீதி பரிகாரங்கள் செய்து கொள்வது அவசியமாகும்.

🙏சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வரலாம். வீட்டில் அனுதினமும் கோளாறு பதிகம், விஷ்ணு சகஸ்ரநாமம் படித்து வழிபட்டு வரலாம்.  

மீனம்  

🟢செவ்வாய் சந்திரன், குரு ஆகியோரால் யோக பலன்கள் உண்டாகும். செவ்வாய் குரு இணைவு, செவ்வாய் சந்திரன் இணைவு விசேஷமான ராஜ யோகத்தை தரும்.

🔴சூரியன், புதன், சுக்கிரன்,சனி ஆகியோர்  தசை, புத்திகள் சோதனையானவை.

🙏திருமால் வழிபாடு நன்மையளிக்கும் ஒருமுறை திருமாலிருஞ்சோலை அழகரை தரிசித்து அருள் பெற்று வரலாம்.  

ஜாதகத்தில் கிரக நிலைகளை குடும்ப ஜோதிடம் கேட்டறிந்து உங்கள் ராசிக்கு யோகம் தரும் கிரக நிலை, சஞ்சாரம், கெடு பலனளிக்கும் கிரகங்களின் அமைப்பு ஆகியவற்றை ஆராய்ந்து அதற்கேற்ப ப்ரீதி பரிகார வழிபாடுகளை செய்து கொள்ளுங்கள்.பரிகார தலத்திற்கு செல்ல முடியாதவர்களும், வயதானவர்களும் வீட்டிலேயே உரிய வழிபாடுகளை செய்து நன்மை அடையலாம்.

Leave a Comment

error: Content is protected !!