பதவி உயர்வுக்கு வழி வகுக்கும் லக்ன வழிபாடுகள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

பதவி உயர்வுக்கு வழி வகுக்கும் லக்ன வழிபாடுகள்

  • பதவியில் பணியில் இருப்போரின் வாழ்க்கையின் லட்சியம் தனது துறையில் உயர்ந்த ஸ்தானத்தை அடைய வேண்டும் என்பதாக இருக்கும். ஆனால் இந்த பேறு எல்லோருக்கும் கிடைப்பதில்லை.
  •  பூர்வபுண்ணியமும், ஜாதகத்தில் பதவி யோக அமைப்பு நன்றாக இருந்தால் இந்திரப் பதவிக்கு நிகரான உயர்பதவி வாய்ப்பு தேடி வரும். இதுகுறித்து ஜோதிட நூல்கள் சில விளக்கங்களை கூறுகின்றன!
  • ஜாதகத்தில் 5-ஆம் வீடும் 5-ம் வீட்டோனும் குருவும் பலம் பெற்றிருந்தால் அந்த ஜாதகர் பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணிய பலன் காரணமாக பதவி யோகத்தை அடைவார்.
  • செவ்வாய் சிம்மத்திலும் குரு மேஷத்தில் சூரியன் தனுசிலுமாக ஒருவர் வீட்டில் மற்றொருவர் இருந்தாலும் ஒருவருக்கொருவர் பரிவர்த்தனை ஆக இருந்தாலும் உயர் பதவி கிடைக்கும். இவர்கள் மூவருமே ராஜ கிரகங்கள் என்பதால் ராஜ யோகம் சித்திக்கும். அரசாங்கத்தில் உயர் பொறுப்பில் உள்ள அமைச்சர் பதவி கிடைக்கும்.
  • சந்திரனுக்கு 6,7,8 குரு சுக்கிரன் புதன் அமர்ந்தால் ‘அதி யோகம்’ அமையும் ஆனால் ஓய்வு பெற 5 ஆண்டுகளே இருக்கும் நிலையில்தான் பதவி உயர்வு வந்துசேரும் ஓரிரு நாட்களே பதவி சுகத்தை அனுபவிக்கும் நிலையும் இந்த யோகம் பெற்றவருக்கு அமைய வாய்ப்பு உண்டு
லக்ன வழிபாடுகள்
  • 5-ல் சூரியனும் புதனும், 2ல் சனி, 12-ல் குரு அமையப் பெற்றிருந்தால் ‘சமுத்திர யோகம்’ வாய்க்கும் இது இந்த ஜாதகருக்கு அரசு பதவி மூலம் நன்மைகளை வாரி வழங்கும்
  • மேஷ லக்னமாகி மேஷ லக்னத்தில் சூரியனும்;துலாத்தில் சந்திரனும் சனியும்; தனுசில் குரு அமர்ந்து இருந்தால் அரசாங்க பதவி உயர்வு கிடைக்கும்.
  • மகரம் லக்னமாக இருந்து சனியும் செவ்வாயும் சேர்ந்து இருக்க சூரியனும் சந்திரனும் தனுசில் அமர்ந்திருந்தால் அரசு பதவியில் மென்மேலும் உயரலாம்
  • செவ்வாயும் சனியும் லக்னம், 5 அல்லது 10 அமர்ந்திருக்க வளர்பிறை சந்திரன் 9-ல் அமர்ந்திருந்தால் இப்படியான கிரக அமைப்பைப் பெற்றவர்கள் அரசு மற்றும் தனியார் பணிகளில் பதவி உயர்வு இல்லாமல் அடிக்கடி இடமாற்றங்களுக்கு ஆளாக நேரிடும்
  • பொதுவாக 2-க்கு உரிய கிரகம் பலவீனமாகி அந்த கிரகத்தின் தசை நடைபெறுகிற காலத்தில் அரசு பதவியில் இருப்பவர்கள் பதவி உயர்வை எதிர்பார்க்க முடியாது. இதன் பொருட்டு வீண் செலவும் அலைச்சலுமே மிஞ்சும்.
 இங்கனம் ஜாதகத்தில் கிரக அமைப்புகள் பலமின்றி இருப்பவர்கள் என்ன செய்யலாம்? இலக்கண ரீதியாக சில எளிய வழிகள் உங்களுக்காக!
  • மேஷம் மற்றும் ரிஷப லக்கினத்தில்  பிறந்த அன்பர்கள் சனிக்கிழமைகளில் எள் முடிச்சு தீபம் ஏற்றி சனிபகவானை வணங்கி வரம் பெறலாம்.
  •  உத்திர நட்சத்திர நாட்களில் சாஸ்தா துதிப் பாடலைப் பாடி வழிபடுவதாலும் பலன் கிடைக்கும் .அருகில் இருக்கும் அனுமனை தரிசித்து வழிபட்டு வந்தாலும் பதவியில் முன்னேற்றம் உண்டாகும்.
  •  மிதுனம் மற்றும் மீன லக்னத்தில் பிறந்தவர்கள் குரு பகவானை வழிபடுவது விசேஷம் அத்துடன் சிவாலயத்தின் கோஷ்டத்தில் தென் முகமாக வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்திக்கு வில்வம் சார்த்தி, கொண்டைக்கடலை சுண்டல் சமர்ப்பித்து வழிபட்டால் செய்யும் பணியில் உரிய அங்கீகாரமும், விசேஷ சலுகைகள் கிடைக்கும். விரைவில் உங்க பெயர் உயர் பதவிக்கு பரிசீலிக்கப்படும்.
  •  கடகம் மற்றும் கும்ப லக்கினக்காரர்கள் செவ்வாய் கிழமைகைகளில் சர்க்கரைப்பொங்கல் படைத்து நெய் விளக்கு ஏற்றி வைத்து முருகக் கடவுளை வழிபடலாம் அத்துடன் ஒருமுறை திருச்செந்தூர் சென்று செந்தில் ஆண்டவரை தரிசித்து வழிபட்டு வரம் பெற்று வரலாம்
  • சிம்ம லக்னகாரர்கள் வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியையும், சுக்கிரனையும் வழிபடுவதன் மூலம் பதவி யோகம் கிடைக்கப் பெறலாம். வீட்டில் மாலை வேளையில் விளக்கேற்றி வைத்து கனகதாரா ஸ்தோத்திரம் படிப்பது விசேஷம்.
  •  கன்னி மற்றும் தனுசு லக்னகாரர்கள் திருமாலையும் நவக்கிரகங்களில் புதன் பகவானை வழிபட வேண்டும். ஒருமுறை திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்து வந்தால் ஏற்றங்கள் உண்டாகும்
  •  துலாம் மற்றும் மகர லக்னகாரர்கள் சந்திரனையும், பராசக்தியும் வழிபடவேண்டும் வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளிலும், பௌர்ணமி தினங்களிலும் அருகிலுள்ள சிவாலயத்தில் அருளும் அம்பாளுக்கு வெண் மலர்கள் சமர்ப்பித்து வழிபட்டு வந்தால் பதவி யோகம் ஸித்திக்கும்
  •  விருச்சிக லக்னகாரர்கள் சூரியனையும், ருத்திரனையும் வழிபடுவதன் மூலம் பதவி யோகம் ஸித்திக்கும். இவர்கள் ஒருமுறை சூரியனார் கோவில் சென்று வழிபட்டு வரலாம் இதனால் பணியில் தடைகள், ஏமாற்றங்கள் ,அதிக வேலைப்பளு, சூழ்ச்சிகள், வீண்பழி முதலான பிரச்சனைகள் நீங்கும்
 இந்திரன் போகங்களுக்கு அதிபதி.ஆக, அனைவரும் கீழ்காணும் இந்த காயத்ரி மந்திரத்தை சொல்லி இந்திரனை தியானித்து நல்லருள் பெறலாம்
“ஈம் வஜ்ரஹஸ்தாய வித்மஹே ஸஹஸ்ரக்ஷய தீமஹி தந்நோ இந்திர :ப்ரசோதயாத்”
 

Leave a Comment

error: Content is protected !!