குருப்பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025-மிதுனம்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025-மிதுனம்

தீர்க்கமான சிந்தனை, சிறப்பான அறிவாற்றல் மற்றும் நினைவாற்றல். கொண்ட மிதுனராசி நேயர்களே, புதனின் ராசியில் பிறந்த உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 7, 10க்கு அதிபதியான குருபகவான் திருக்கணிதப்படி வரும் 1-5-2024 முதல் 14-5-2025 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 1-5-2024 முதல் 11-5-2025 வரை) விரைய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளதால் பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சிக்கனத் தோடு இருப்பது நல்லது. வரவுக்கு மீறிய வீண்செலவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் ஆடம்பரத்தை சற்று குறைத்துக்கொள்ளவேண்டும்.

குரு பெயர்ச்சி கிரக நிலைகள்

குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025

உங்கள் ராசிக்கு அதிபதியான புதனுக்கு நட்பு கிரகமான சனி பகவான் பாக்கிய ஸ்தானமான 9 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் தக்க நேரத்தில் கிடைக்க வேண்டிய பண வரவுகள் கிடைத்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும்.

உங்கள் ராசிக்கு 12-ல் சஞ்சரிக்ககூடிய குரு பகவான் 4, 6 8 ஆகிய ஸ்தானங்களை பார்வை செய்வதால் குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்படக்கூடிய அமைப்பு, உங்களுக்கு இருந்து வந்த வம்பு வழக்குகள் குறையக் கூடியநிலை. எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய பலம் உண்டாகும்.

சர்ப கிரகமான கேது 4-ஆம் வீட்டிலும் ராகு 10-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வது தேவையில்லாத அலைச்சல்களை ஏற்படுத்தக்கூடிய அமைப்பு என்றாலும் உங்களுடைய உழைப்புக்கான பலனை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு.

தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு காரியத்திலும் நீங்களே நேரடியாக இருந்து செயல்பட்டால் தான் போட்ட முதலீட்டை எடுக்க முடியும் தொழில்ரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலை உண்டானாலும் அதன் மூலம் உழைப்புக்கான ஆதாயத்தை பெறுவீர்கள். வேலையாட்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் எடுக்கின்ற ஆர்டர்களை குறித்த நேரத்தில் டெலிவரி செய்யமுடியும். தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.

குருபகவான் பார்வை

குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025
குரு பார்வை : 4ம் இடம் (தாய் ,வீடு ),6ம் இடம் (நோய் ,கடன் ,வம்பு ),8ம் இடம் (ஆயுள் ,ஆரோக்கியம் )

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்கள் வேலையையும் சேர்த்து செய்யவேண்டிய ஒருநிலை இருந்தாலும் அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைகூட சிறப்பாக செய்து முடிப்பீர்கள். புதிய வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு சவால்கள் மிக்க வாய்ப்புகள் கிடைக்கும். தற்சமயத்துக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையினை அடையமுடியும். ஒரு சிலருக்கு பணியில் இடமாற்றங்கள் ஏற்பட்டு மனைவி, பிள்ளைகளைவிட்டு வெளியிடங்களுக்கு சென்று அங்கேயே தங்கி வேலை செய்யக்கூடிய ஒருநிலை உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் தேவையில்லாத இடையூறுகள் உண்டாகும்.

குருபகவான் வக்ரகதியில் 9-10-2024 முதல் 4-2-2025 வரை

குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தேவைகேற்படி அமையும் உங்கள் ராசிக்கு 4-ல் கேது, 10-ல் ராகு சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் ஏற்பட்டாலும் உங்களின் தனி திறமையால் எதையும் சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் ஒற்றுமை உண்டாகும். நண்பர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும்.

சனி 9-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளை சந்தித்தாலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். அசையும் அசையா சொத்துவழியில் எதிர்பாராத அனுகூலங்கள் ஏற்படும்.

குரு பெயர்ச்சி பலன்கள்

உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் உண்டாகும். வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயம் கிடைக்கும் தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைப் பெற முடியும் என்றாலும் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் மிகவும் அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கும் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்துச் செயல்படுவது உத்தமம். உங்களுக்குள்ள பணிச்சுமை காரணமாக நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை, அதிகப்படியான உடல் அசதி ஏற்படும்.

பரிகாரம்

மிதுன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 12-ல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குருபகவானுக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள்நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது.

உங்களுக்கு கேது 4-லும் ராகு 10-லும் சஞ்சரிப்பதால் ராகு-கேதுவுக்கு பரிகாரமாக நவகிரகங்களில் ராகுவுக்கு மந்தாரை மலர்களாலும் கேதுவுக்கு செவ்வல்லி மலர்களாலும் அர்ச்சனை செய்வது நல்லது. துர்கையம்மனையும் விநாயகரையும் வழிபடுவது மிகவும் நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்: 5, 6, 8,

நிறம்: பச்சை, வெள்ளை,

கிழமை: புதன், வெள்ளி

கல்: மரகதம்

திசை: வடக்கு

தெய்வம்: விஷ்ணு

Leave a Comment

error: Content is protected !!