சொந்த முயற்சியால் தொழிலில் வெற்றி பெரும் கிரக நிலைகள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

சொந்த முயற்சியால் தொழிலில் வெற்றி பெரும் கிரக நிலைகள்

ஒருவர் சொந்த முயற்சியால் பெரிய மனிதராக வரவேண்டுமெனில் அவரின் ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவாக இருக்க வேண்டும்.அப்படியிருந்தால்  அவர் ஆழமாக சிந்திப்பார். இனிமேல் அடிமையாக வேலை செய்யக்கூடாது: சொந்தத் தொழில் மூலம் வளர வேண்டும் என உறுதி கொள்வார்.
 
 மனதில் நினைப்பதை செயல் வடிவில் கொண்டு வர 2,57,9,10-ம்  பாவங்கள் நன்றாக இருக்க வேண்டும்.
 
 ஒரு ஜாதகத்தில் பத்தாம் அதிபதி உச்சம் பெற்றால் அல்லது லக்னத்திலோ  கேந்திர ஸ்தானத்திலோ (1,4,7,10) இருந்தால் அந்த ஜாதகர் யாருக்கும் அடிமையாக இல்லாமல் உழைத்து பெரிய மனிதராக வேண்டும் என நினைப்பார். தன் எண்ணத்தில் வெற்றியும் பெறுவார்.
 
 லக்னாதிபதி லக்னத்திலேயே இருந்து ஒன்பதாம் அதிபதி லக்னத்திற்கு 2ல் இருந்தால் அவர் சுய முயற்சியுடன் தைரியமாக தொழிலில் ஈடுபடுவர் நிறைய பணத்தையும் சம்பாதிப்பார்.
 
பத்தாம் அதிபதி உச்சமாக இருந்து ஒன்பதாம் அதிபதி சுய வீட்டில் இருந்தால் அவர் சுய முயற்சியால் தன் குடும்பத்துக்கு சம்பந்தமே இல்லாத தொழிலை செய்து அதில் வெற்றி காண்பார்.
 
ஒரு ஜாதகத்தில் லக்கினத்தில் லக்கினாதிபதி 2-ல் 2-ம் அதிபதி  ஆறில் சனி இருந்தால் அந்த ஜாதகர் சுய முயற்சியால் 27 வயதுக்கு பிறகு பெரிய தொழிலை சொந்தமாக செய்து வெற்றி காண்பார்.
 
லக்னத்தில் செவ்வாய், குரு, 10-ல் சந்திரன் இருந்தால் அவர் சுயமாக தொழில் செய்து நிறைய சம்பாதிப்பார்.
 
சொந்த முயற்சியால்

 

 
லக்கினத்தில் சூரியன், சுக்கிரன், புதன்  9-ல் குரு இருந்தால் 31 வயதுக்கு பிறகு அந்த ஜாதகர் சுய முயற்சியால் தொழில் செய்து பணம் சம்பாதிப்பார்
 
லக்னத்தில் சூரியன், புதன், 2-ல் சந்திரன் 10-ல் செவ்வாய் இருந்தால் 32 வயதுக்குப் பிறகு அந்த ஜாதகர் சுயமாக தொழில் செய்து வெற்றி காண்பார்
 
லக்கினத்தில் சூரியன்,புதன் ,செவ்வாய் 4-ல் சந்திரன் இருந்தால் ,அவை கைவினை பொருள்கள் செய்யும் தொழிலில் பெரிய அளவில் ஈடுபடுவார்.அதில் வெற்றி பெற்ற வர்த்தகராக பவனி வருவார் .
 
லக்னத்தில் சந்திரன் 6-ல் சுக்கிரன், 9-ல் செவ்வாய், சனி ,ராகு இருந்தால் 32 வயதுக்கு பிறகு பெரிய தொழிலதிபராக ஒளி வீசுவார் .
 
லக்னத்தில் உச்ச, குரு உச்ச சந்திரன் இருந்தால் அந்த ஜாதகர் பல முயற்சிகளில் ஈடுபட்டு பெரிய தொழிலதிபர் ஆவார்.
 
11ல் சந்திரன், சனி 5-ல் குரு, ஏழில் சூரியன் இருந்தால் அவர் சுய முயற்சியால் கடுமையாக உழைத்து 38 வயதுக்கு பிறகு பெரிய தொழிலதிபராக முத்திரை பதிப்பார் .
 
லக்னத்தில் சந்திரன், செவ்வாய் 5-ல் குரு, 10-,ல் சனி இருந்தால் அவர் இளம் வயதில் இருந்தே கடுமையாக உழைப்பார். 36 வயதிற்கு பிறகே பெரிய தொழிலதிபர் ஆவார்.
 
லக்னாதிபதி அஸ்தமனம் ஆக இருந்து பத்தாம் அதிபதி பலவீனமாக இருந்தால் அந்த ஜாதகர் தொழிலில் ஈடுபடும் போது நிறைய தடைகள் உண்டாகும்.
 
9-ல் ராகு லக்னத்தில் சூரியன் இருந்தால் அவரது வாழ்க்கையின் முன் பகுதியில் ஏராளமான பிரச்சனைகள் ஏற்படும்.
 
சூரியனுடன் லக்னாதிபதி 4-லிருந்து அந்த  சூரியனை சனி பார்த்தால் அந்த ஜாதகர் சுயமாக தொழில் செய்யும்போது பல சிக்கல்களை சந்திப்பார் 
 
6-ல் செவ்வாய் ,10-ல் சனி இருந்தால் அவர் சுயமாக தொழில் செய்யும் பொழுது அவரின் பகைவர்கள் சூனியம் செய்வார்கள்.
 
லக்னத்தில் செவ்வாய், 4-ல் சனி  ,8-ல் ராகு இருந்து ,சந்திரன் பலவீனமாக இருந்தால் சுயமாக எதையும் செய்ய துணிச்சல் இருக்காது. அப்படி அவர் எதையாவது ஆரம்பித்தாலும் அவரது விரோதிகள் பல சூழ்ச்சிகளை செய்து கெடுதலை உண்டாக்குவர். 
 
ஒரு வீட்டின் தென்மேற்கு திசை அதிகமாக காலியாக இருந்தாலும், அந்த வீட்டின் வடகிழக்கு சுத்தமாக இல்லை என்றாலும், அந்த ஜாதகர் எவ்வளவு முயற்சி செய்தாலும் சுயமாக தொழில் செய்ய முடியாது. அப்படி செய்தால் நிறைய நஷ்டங்களை சந்திப்பார்
 

பரிகாரங்கள்:

வீட்டில் உணவு பொருள்கள் வைக்கும் இடத்தில மிளகாயையும் ,எலுமிச்சைபழத்தையும் ஒரே பாத்திரத்தில் வைக்க கூடாது .
 
தினமும் காலையில் குளித்து முடித்து ,விநாயகரையும் ,குலதெய்வத்தையும்,சூரியனையும் வழிபடவேண்டும்.
 
வெள்ளிக்கிழமையை துர்க்கையை வழிபடவேண்டும்.துர்க்கா சப்தசதி படிக்கலாம்.
 
ஞாயிற்றுகிழமை ,கோதுமை,வெல்லம் ,சிவப்பு துணி ,ஆகியவற்றை தானம் தருதல் நன்று.   

Leave a Comment

error: Content is protected !!