புலிப்பாணி ஜோதிடம்
1ல் சந்திரன்
லக்னத்தில் சந்திரன் இருந்தால் அரசனுக்கு அருகில் இருந்து சேவை செய்பவனாகவும், யோகம் உள்ளவனாகவும் இருப்பான்.சிவனுக்கு மனைவியாக திகழும் உமையவள் அவளது இல்லில் வாசல் செய்வாள். குளிர்ந்த மேனியும், நல்ல குணமுடையவனாகவும் இருப்பான்.
2ல் சந்திரன்
வெண்மதி ஆகிய சந்திரன் இரண்டாம் இடத்தில் நின்றால் வித்தை, புத்தி ,நல்ல வாலிப வயதில் திருமணம் செய்வான். மேலும் சன்மார்க்கத்தை போதிக்கும் குணமுள்ளவன், அநேகவித சம்பத்து புத்திர யோகம் உடையவன். சந்திரனைப் போன்று அழகான முகம் உடையவன்.சந்திரன் நட்பு,ஆட்சி உச்சம் பெற்று சுபர் பார்வையுடன் இருந்தால் மேற்கூறிய சுப பலன்கள் நடைபெறும். பகை,நீசம் பெற்று அசுபர் பார்வையுடன் இருந்தால் மேற்கூறிய அதற்கு நேர் மாறான பலன்களே நடைபெறும்.
3ல் சந்திரன்
சந்திரன் மூன்றில் இருந்தால் நல்ல ஆபரணாதி வஸ்துக்களை காதில் அணிவான்.நல்ல அறிவுக் கூர்மை உள்ளவன். சற்று கர்வம் பிடித்தவன். மழலைமொழி மேல் விருப்பம் உள்ளவன்.சந்திரனைப் போல் வாழ்ந்திருப்பான். நல்ல பெண் துணை உடையவன். பாக்கியவான், மிகுந்த பொறுமைசாலி.
4ல் சந்திரன்
சிறப்பு பொருந்திய சந்திரன் 4ம் இடத்தில் நிற்க பரஸ்திரீ மோகமுள்ளவன்.மாடு,குதிரை, மனைகள் உண்டு.வித்தையில் வல்லவன்.
5ல் சந்திரன்
சந்திரன் 5-ம் பாவத்தில் நின்றால் ஜாதகருக்கு பெண் குழந்தைகள் அதிகம் உண்டாகும்.மேலும் இப்புவியில் சீமானாய், செல்வ சிறப்புடன் வாழ்வார்.சந்திரன் சுப பலம் பெற்றிருந்தால் மேற்கூறியவாறு சுப பலம் உண்டாகும். பலவீனமாக இருந்தால் மேற்கூறிய அதற்கு மாறான பலன்கள் நடைபெறும். சுபம் பாவம் கலந்து சந்திரன் சமமாக இருந்தால் இன்பம் துன்பம் இரண்டும் கலந்து நடைபெறும். நினைத்ததை சாதிக்க கடுமையாகப் போராட வேண்டியது வரும்.
6ல் சந்திரன்
சிறப்பு பொருந்திய சந்திரன் 6-ம் இடத்தில் நிற்க அந்த ஜாதகனுக்கு நீரால் பயமும், ரோக பயமும் உண்டாகும். மேலும் அரசின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்.தேசம் எங்கும் அலைந்து திரிந்து வயிற்றுப் பசியை தீர்ப்பான்.
8ல் சந்திரன்
சந்திரன் 8-ம் இடத்தில் நிற்க அந்தக்குழந்தை பலவித கலைகளில் தேர்ச்சி பெற்று விளங்குவான்.அதேசமயம் மலக்கழிச்சல், நீர் பயம், முதலியவற்றால் வருந்துவான்.
7ல் சந்திரன்
வளர்பிறைச் சந்திரன் 7-ம் இடத்தில் நின்றால் அந்த ஜாதகர் தனவந்தனாகவும், மற்றவர்களை அன்புடன் ஆதரிப்பவனாகவும் இருப்பான்.காதலியால் நல்ல அனுகூலமான பலன்களை அடைபவனாகவும், கற்புடைய பெண்ணை மனைவியாக அடைபவனாகவும் இருப்பான்.திருப்பாற்கடலில் வாசம் செய்யும் திருமால் அருளால் செல்வ சீமானாக வாழ்வான்.இருப்பினும் சந்திரனின் இருப்பிடம் அதன் வலிமையை அறிந்து சரியான செய்தியை கூற வேண்டும்.
9ல் சந்திரன்
வளர்பிறைச் சந்திரன் பாக்கிய கோணத்தில் ஏற, ஜாதகர் பாக்கியவனாகவும், தெய்வபக்தி நிறைந்தவனாகவும், காம உணர்வு மிகுந்தவனாகவும் இருப்பான்.மேலும் பரஸ்திரீ பிரியன், புத்திரபாக்கியம் நிறைந்தவன்.
10ல் சந்திரன்
வளர்பிறை சந்திரன் 10-ம் இடத்தில் நிற்க அந்தப் பாலகன் தனலாபமுள்ளவன், பாக்கியவான், மேலும் பல தீர்த்தமாடி உல்லாசமாய் வாழ்வான்.
11ல் சந்திரன்
வளர்பிறைச் சந்திரன் 11-ல் நிற்க மாதுர் வழி ஜனங்களால் லாபம் உண்டு.மேலும் மாந்த்ரீக கலையில் வல்லவனாகவும், சுகபோகம் உள்ளவனாகவும், வீரனாகவும், தீர்க்காயுள் நிறைந்தவனாகவும் இருப்பான்.
12ல் சந்திரன்
சந்திரன் 12ல் நின்றால் தாயால் பொருள் நஷ்டம் உண்டாகும்.சந்திரனின் வலிமையையும் அதன் இருப்பிட சிறப்பையும் அறிந்து சரியான பலன்களை எடுத்துரைக்க வேண்டும்.