கோளறு திருப்பதிகம்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

கோளறு திருப்பதிகம்

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி

மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி,

சனி பாம்பிரண்டும் உடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல

அடியாரவர்க்கு மிகவே.

என்பொடு கொம்பொடாமை யிவைமார்பிலங்க

எருதேறி யேழையுடனே

பொன்பொதி மத்தமாலை புனல்சூடிவந்தென்

உளமே புகுந்த அதனால்

ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொடாறும்

உடனாய நாள்களவைதாம்

அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே!

கோளறு திருப்பதிகம்

உருவளர் பவளமேனி யொளிநீறணிந்து வுமையோடும் வெள்ளைவிடைமேல்

முருகலர் கொன்றை திங்கள் முடிமேலணிந்தென்

உளமே புகுந்த அதனால்

திருமகள் கலையதூர்தி செயமாது பூமி

திசைதெய்வமான பலவும்

அருநெறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே!

மதிநுதல் மங்கையோடு வடபாலிருந்து மறையோதும் எங்கள் பரமன்

நதியொடு கொன்றைமாலை முடிமேலணிந்தென்

உளமே புகுந்த அதனால்

கொதியுறு காலனங்கி நமனோடுதூதர்

கொடுநோய்களான பலவும்

அதிகுண நல்ல நல்ல அவை நல்ல நல்ல

அடியாரவர்க்கு மிகவே.

நஞ்சணி கண்டனெந்தை மடவாள்தனோடும் விடையேறு நங்கள் பரமன்

துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமேலணிந்தென்

உளமே புகுந்த அதனால்

வெஞ்சின அவுணரோடு முருமிடியுமின்னு

மிகையான பூதமவையும்

அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.

கோளறு திருப்பதிகம்

வாள்வரி யதளதாடை வரிகோவணத்தர்

மடவாள்தனோடு முடனாய்

நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடிவந்தென்

உளமே புகுந்த வதனால் கோளரியுழுவையோடு கொலையானை கேழல்

கொடுநாகமோடு கரடி

ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல

அடியாரவர்க்கு மிகவே.

செப்பிள முலைநன்மங்கை யொருபாகமாக விடையேறு செல்வனடைவார்

ஒப்பிள மதியும் அப்பும் முடிமேலணிந்தென்

உளமே புகுந்த அதனால்

வெப்பொடு குளிரும்வாத மிகையானபித்தும் வினையான வந்து நலியா

அப்படி நல்லநல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.

வேள்பட விழிசெய்தன்று விடைமேலிருந்து மடவாள்தனோடு முடனாய்

வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடிவந்தென்

உளமே புகுந்த அதனால்

ஏழ்கடல் சூழிலங்கை யரையன்றனோடும்

இடரான வந்துநலியா

ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.

பலபல வேடமாகும் பரனாரிபாகன் பசுவேறும் எங்கள்பரமன்

சலமக ளோடெருக்கு முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்

மலர்மிசையோனு மாலுமறையோடு தேவர்

வருகாலமான பலவும் அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்லஅடியாரவர்க்கு மிகவே.

கொத்தலர் குழலியோடு விசயற்குநல்கு குணமாய வேடவிகிர்தன்

மத்தமு மதியுநாக முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்

புத்தரோ டமணைவாதில் அழிவிக்குமண்ணல்

திருநீறு செம்மைதிடமே

அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல

அடியாரவர்க்கு மிகவே.

தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல்துன்னி

வளர் செம்பொ னெங்கும்நிகழ

நான்முகனாதியாய பிராமாபுரத்து மறைஞான ஞானமுனிவன்

தானுறு கோளுநாளும் அடியாரைவந்து நலியாதவண்ண முரைசெய்

ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வராணை நமதே.

****திருச்சிற்றம்பலம்***

Leave a Comment

error: Content is protected !!