கடக லக்னம்
வாய்க்கும் மனைவி மிகவும் ஜாக்கிரதையாக இருப்பாள்.அதிகம் பேச மாட்டாள்.நிர்பந்தத்தில் திருமணம் நடக்கும்.தொழிலில் சிலருக்கு தடங்கல் ஏற்படும்.தொழில் முறையில் அடிக்கடி குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ வேண்டிய நிலை ஏற்படும்.
சிலருக்கு முன் கோபியான கடுஞ்சொல் சொல்பவளாகவும்,கணவன் குடும்பத்தாருடன் அனுசரித்து போகாமலும் கூட்டு குடும்பத்தை பிரிக்கும் குணம் உள்ள மனைவி அமையலாம்.
பெரும்பாலோருக்கு-மனைவிக்கு அடிக்கடி நோய் தொல்லை -கர்ப்பக்கோளாறு,சளி ,ஆஸ்துமா போன்றவைகளினால் பாதிப்பு ஏற்படலாம்.கணவன் -மனைவி இருவரில் ஒருவருக்கொருவர்-சந்தேகபட்டு வீண் வாதங்களினால் பிரிவினை ஏற்படக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.அனுசரித்து போகவும்.
சனியை சுபர் பார்த்தால் -சேர்ந்தால் நல்ல திறமையாகவும்,கெளரவமானவளாகவும்,அறிவாளியாகவும் -உழைப்பாளியாகவும் இருப்பாள்.பாவர் பார்த்தல்-சேர்ந்தால் கருப்பு நிறமான ராக்ஷஸ குணமுள்ள அடங்கா பிடாரி போன்ற மனைவி அமைவாள்.
சிலருக்கு ஆண் வாரிசுகள் அதிகமாக பிறக்கலாம்.பெண் வாரிசுகள் குறையலாம்.சிலரின் ஆணோ ,பெண்ணோ காதல் திருமணம் புரிய வேண்டிய சூழ்நிலையும்,அதை தந்தையே முன் நின்று நடத்தி வைக்க வேண்டிய சூழ்நிலையும் வரலாம்.சில பெண்கள் எல்லா வகையிலும் ஆண்களை போலவே நிர்வாகம் செய்ய கூடிய சூழ்நிலை அமையும்.
சூரியன் -குரு -சனி -சுக்கிரன் தசாபுத்தி அபகார காலங்களில் கிழக்கு -வடக்கு திசையிலிருந்தது வரும் வரன் அமையலாம்..
2,5,7,11-ல் இருப்பவர் -பார்த்தவர்.தசா புத்தி அந்தர காலங்களில் திருமணம் நடக்கும் .
பெரும்பாலும் தூரத்து உறவு முறையில் அல்லது புது உறவு முறை அல்லது கலப்பு (காதல் )வகையில் திருமணம் நடக்கும் .