Homeஜோதிட குறிப்புகள்ரோகினி, அஸ்தம், திருவோணம் மற்றும் பிற லக்ன நட்சத்திர பலன்கள் - முழுமையான தகவல்

ரோகினி, அஸ்தம், திருவோணம் மற்றும் பிற லக்ன நட்சத்திர பலன்கள் – முழுமையான தகவல்

லக்னம் நின்ற நட்சத்திர பலன்கள்

ரோகினி-அஸ்தம்-திருவோணம்-புனர்பூசம்-விசாகம்-பூரட்டாதி-ஆயில்யம்-கேட்டை-ரேவதி

சந்திரனின் நட்சத்திரமான ரோகிணி ,ஹஸ்தம், திருவோணத்தில் லக்னம் நின்று வளர்பிறைச் சந்திரனாக இருந்தால் 

நல்ல எண்ணம் நற்சிந்தனை தெளிவாக சிந்திக்க கூடிய ஆற்றல் மிக்கவராக இருப்பார்.கள்ளம் கபடமின்றி பழகக்கூடியவர்.பிறர் விரும்பும், போற்றும் குணம், பிறர் பார்த்து வியக்கும் தனித்துவமான வாழ்க்கை அடைவார்.சுப ஆதிபத்தியம் மிக்க குரு, சுக்கிரன், புதன் பார்வை பெற்றால் குணத்தாலும் பண்பாலும் பெரும் பதவியும் அடைவார் .கோடீஸ்வரராக பிறக்கவும் ,கோடீஸ்வரராக வாழும் யோகம் உண்டாகும்.நல்ல தசா புத்திகள் வந்தால் ஏழையாக பிறந்து இருந்தாலும் மக்களால் போற்றப்பட்டு அழியா புகழ்  பெறுவார்.

தேய்பிறை சந்திரன் ஆகி சூரியன் ,செவ்வாய் ,சனி, ராகு, கேது வலுத்து கூட்டு பாவ கிரக பார்வை பெற்றால் தாழ்ந்த நிலையை அடைந்து பரம்பரை புகழையும் இழப்பார்.குரூரமானவராக  இருப்பார்.பிறரைக் கெடுக்கும் எண்ணம்  , பிறரை ஏமாற்றி பிழைக்கும் குணக்கேடு ஏற்படும். 

சந்திரன் கெட்டு மோசமான தசையாக வந்தால், நல்ல பணக்காரராக பெரிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் நாளுக்கு நாள் தேய்ந்து தேய்ந்து வாழ்க்கையே வெறுத்துப் போகும் அளவு கஷ்டம் ஏற்படும்.அஷ்டம  ஏழரைச்சனியும் வந்தால் தற்கொலை எண்ணம் விபத்து ஏற்படும்.

நட்சத்திர பலன்கள்

குருவின் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி  ஆகிய நட்சத்த்திரங்களில் லக்கினம் நின்றால்

பிறருக்கு நல்ல ஆலோசனை வழங்கும் அறிவுத் திறன் மிக்கவராகவும், பிறரின் நிலையறிந்து பேசுபவராகவும் ,ஏமாற்றாமலும் , பிறரிடம் ஏமாறாமலும்  வாழ்வார்.கடக லக்கினம் புனர்பூசம் நட்சத்திரத்தில் நின்றால் பூரண குருபலன் பெற்றவராக, யாரிடம் எப்போது எப்படி பேச வேண்டும், எப்படி நடக்க வேண்டும் என்பதை அறிந்தவர் 

எதிரியை நேருக்கு நேராக சந்தித்து லாவகமாக, லாபகரமான காரிய வெற்றியை எதிரியால்  பெறுவார்.சுக்கிரன் பார்வை இருந்தால் சிரிக்க சிரிக்கப் பேசி மயக்கி காரியம் சாதிக்க கூடியவர் .ஆபத்துக்களை உணர்ந்து அதற்கேற்ப வார்த்தை ஜாலம் செய்யக்கூடியவர்.வளர்பிறைச் சந்திரன் பார்வை இருந்தால் சாதாரண மனிதனையும் பிறர் போற்றும் அளவு உயர்த்தி பெரும் புகழைத் தரும்.

புதன் பார்வை இருந்தால் பல்கலை வித்தகர், சாதுர்யமான பேச்சு, எதிரியும் விரும்பும் திறன் படைத்தவராக அழியா புகழ் பெறுவார்.சுபகிரக கூட்டு பார்வை இருந்தால் நல்ல தசா புத்திகளில் உலகம் வியக்கும் சாதனையாளராவார் .பாவ கிரக பார்வை, சுபகிரக வலு  குறைந்த நிலையில் இருந்தால் திறமையிருந்தும் புகழ் பெற முடியாமலும், முன்னேற வேண்டிய நேரத்தில் தாங்க முடியாத இழப்பு களாலும், தகுதிக்கேற்ற வாழ்க்கை வாழ முடியாமல் ஏக்கத்துடனும் வாழ நேரும்.நினைத்து, நினைத்து வருத்தப்படும் காலம் ஏற்பட்டு ,வாழ்ந்து கெட்டவர் எனும் நிலை வரும்.

நட்சத்திர பலன்கள்

 புதனின் ஆயில்யம், கேட்டை, ரேவதிஆகிய நட்சதிரங்களில்  லக்னம் இருந்தால் 

அனைத்து துறைகளிலும் அனுபவம் அறிவு நிரம்பிய நூலகமாக திகழ்வார்.குருவின் பார்வை இருந்தால் நுணுக்கமான ஆராய்ச்சி கொண்டவராகவும், அறிவியல் அறிஞராகவும் இருப்பார்.பொறுமை ,சுறுசுறுப்பு, கற்பனைவளம் கொண்டு , பிறர் மன ஆழத்தை கண்டறிந்து செயல்படுவர்.பிரபஞ்ச சக்தியை ஆராய்வார்.வான் மண்டல ஜோதிட ஞானத்தையும் பெறுவார் 

சுக்கிரன் பார்வையால் கலைஞானம் கொண்ட பிறவி கலைஞராக இருப்பார்.இயல், இசை, நாடக திறமை உண்டு.சிறந்த ஜோதிடர்.பலமாக இருந்தால் முக்காலத்தையும் சொல்லும் சித்தராவார்.வளர்பிறை சந்திரன் பார்வை கலைஞானி ஆக்கும்.மக்களை அண்ணாந்து பார்த்து ரசிக்க வைப்பார். பார் போற்றும் புகழ் அடைவார்.யாரும் அறியாத யாரும் யோசிக்காத மர்மங்களை கண்டறிந்து உலகிற்கு சொல்வார்.தத்துவஞானி.

பாவ கிரக பார்வை பாதிப்பு ஏற்பட்டிருந்தால் எல்லாத்துறைகளிலும் அரைகுறையாக இருந்து முன்னேற முடியாமல், புகழ் பெறவும்  இயலாமல் தற்பெருமை பேசித் திரிவார்.மதிப்பு ,மரியாதை இல்லாமல் இருப்பதையும் தொலைத்து மனம் வாடுவார் ,எதிர்மறையான எண்ணங்களை தூண்டுவார்.வாழ்க்கையை வெறுப்பவர்களை மேலும் தூண்டிவிட்டு நோகடிப்பார் …

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!