Homeஜோதிட குறிப்புகள்ஜோதிட குறிப்புகள் பகுதி-10

ஜோதிட குறிப்புகள் பகுதி-10

ஜோதிட குறிப்புகள் பகுதி-10

  • இரவில் பிறந்த பெண்ணுக்கு லக்னம், சூரியன், சந்திரன் ஆகிய மூன்றின் இருப்பிடமும் பெண் நட்சத்திரமானால் ஜாதகிக்கு விசேஷமான நற்பலன்கள் உண்டாகும். பரணி, கிருத்திகை, ரோகிணி, திருவாதிரை, ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், சித்திரை, சுவாதி, விசாகம், கேட்டை, பூராடம், உத்திராடம், அவிட்டம், ரேவதி ஆகியவை பெண் நட்சத்திரங்களாகும்.
  • ஒரு ஜாதகர் பகலில் பிறந்தவராகி பிறந்த நேரம் வளர்பிறையாகி, லக்னாதிபதி உச்சம் பெற்றிருந்தால் அந்த ஜாதகர் சிறந்த கல்விமானாவார், பக்திமானாவார், சுபிட்சமும் சந்தோஷமும் பெற்று வாழ்வார். பதவி உயர்வும் உண்டாகும்.
  • ஒருவர் ஜாதகத்தில் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம் ஆகிய இடங்களில் ராகு-கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் இருந்தால் ஜாதகர் ஊக்கத்துடன் முன்னேறுவார். துணிவும், முண்டியடித்துக்கொண்டு காரியத்தை முடித்துக் கொள்ளக் கூடிய திறமையும் பெற்றிருப்பார். (மேற்சொன்ன 6 வீடுகளிலும் இருந்தாக வேண்டும் என்பது அவசியமில்லை)
  • கும்பம், மீனம், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ஆகிய வீடுகளில் ராகு-கேது நீங்கலாக மற்ற ஏழு கிரகங்களும் இருந்தால், அந்த ஜாதகர் சுபிட்சம் உடையவராகவும், அதிர்ஷ்டம் உடையவராகவும், மென்மைத்தன்மை வாய்ந்தவராகவும் இருப்பார். (மேற்சொன்ன 6 வீடுகளிலும் இருந்தாக வேண்டும் என்பது அவசியமில்லை)
  • எல்லாம் சுபக் கிரகங்களும், சுபக்கிரகங்களின் வீடுகளில், கேந்திர கோணங்களில் இருந்தால். ஜாதகர் செல்வம் குவிப்பார். மக்களுக்கு தலைமை தாங்குவார்.
  • பாபக் கிரகங்கள், பாபக் கிரகங்களின் வீடுகளில் இருந்தாலும் மேற்சொன்ன பலன்கள் உண்டாகும்.
  • புதன் குருவால் பார்க்கப்பட்டால் ஜாதகர் அறிவாளியாகவும், மதிப்புக்குரியவராகவும் விளங்குவார்.
  • ஜாதகத்தில் ஏதேனும் ஒரு கிரகம் ஆட்சி பெற்று இருந்தால் ஜாதகர் பிறந்த குடும்பத்தில் சிறப்பு உடையவராவார்.
  • இரண்டு கிரகங்கள் ஜாதகத்தில் ஆட்சி பெற்றிருந்தால் ஜாதகர் குடும்பத் தலைவராவார்.
  • மூன்று கிரகங்கள் ஜாதகத்தில் ஆட்சி பெற்றிருந்தால் ஜாதகர் அவரை சார்ந்த அனைத்து குடும்பங்களுக்கும் தலைவராவார்.
  • நான்கு கிரகங்கள் ஆட்சி பெற்றிருந்தால் ஜாதகர் பெரும் பணக்காராவார்.
  • ஐந்து கிரகங்கள் ஜாதகத்தில் ஆட்சி பெற்றிருந்தால் ஜாதகர் வாழ்நாள் முழுவதும் சந்தோஷத்தை அனுபவிப்பார்.
ஜோதிட குறிப்புகள்
  • ஆறு கிரகங்கள் ஜாதகத்தில் ஆட்சி பெற்றிருந்தால் ஜாதகர் வாழ்நாள் முழுவதும் சந்தோஷத்தை அனுபவிப்பார்.
  • ஏழு கிரகங்கள் ஆட்சி பெற்றிருந்தால் அரசனாகவோ, அரசனுக்கு நிகரான ஓர் அந்தஸ்தை பெற்றவராகவோ விளங்குகின்ற தகுதி உண்டாகும்.
  • நிறைய கிரகங்கள் நட்பு வீடுகளில் இருந்தால் ,ஜாதகருக்கு வயிறு நிறைய உணவும் ,வரவேற்பும் ,நிலையான வாழ்வும் கிடைக்க தடையிராது.
  • இரண்டு கிரகங்கள் நட்பு வீடுகளில் இருந்தால், நண்பர்களால் ஜாதகருக்கு பொருளாதார உதவி கிடைக்கும்.
  • மூன்று கிரகங்கள் நட்பு வீடுகளில் இருந்தால், உற்றார்-உறவினர் மற்றும் எல்லோராலும் மதிக்கபடுகின்றன ஒரு உன்னதமான வாழ்வு உருவாகும் என்பதில் சந்தேகமிராது.
  • நான்கு கிரகங்கள் நட்பு வீடுகளில் இருந்தால், உறவினர்கள் மட்டுமல்லாமல் முன்பின் தெரியாதவர்களால் கூட பயன்பெறக்கூடிய தகுதியை ஜாதகர் பெறுவார்.
  • ஐந்து கிரகங்கள் நட்பு வீடுகளில் இருந்தால் ஒரு பெரிய நிறுவனத்திற்கோ, அல்லது குழுவிற்கோ ஜாதகர் தலைமை தாங்குகின்ற உயர்நிலையை பெற்றிருப்பார்.
  • ஆறு கிரகங்கள் நட்பு வீடுகளில் இருந்தால் ராணுவம் மற்றும் ராணுவத்தை போன்ற பாதுகாப்பு அமைப்பின் தலைமைப் பொறுப்பை வகிக்கின்ற ஆற்றலைப் பெற்றிருப்பார்.
  • ஏழு கிரகங்கள் நட்பு வீடுகளில் இருந்தால் ஜாதகர் அரசனாகவோ, அரசனுக்கு நிகரான ஒரு அந்தஸ்தை பெற்றவராகவோ விளங்குகின்ற தகுதியை பெற்றிருப்பார்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!