புத்திர தோஷத்தை ஏற்படுத்தும் கிரக அமைப்புகள்-பரிகாரங்கள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

புத்திர தோஷத்தை ஏற்படுத்தும் கிரக அமைப்புகள்-பரிகாரங்கள்

உலகில் மனிதர்களாய் பிறந்த அனைவரும் பிறவிப் பயனை அடையவும், தங்களது வம்சம் தழைக்கவும்
வாரிசுகளை விருத்தி செய்யவேண்டும்.

பிரபஞ்ச நியதி இவ்வாறு இருக்க திருமணமான தம்பதிகளில் 60 சதவீதத்தினருக்கு உடனே குழந்தை பாக்கியம் கிடைத்துவிடுகிறது. எஞ்சிய 40 சதவீதத்தினர் குழந்தை பாக்கியம் இன்மையால் சங்கடத்துடன் வாழ்கிறார்கள். ஒரு காலத்தில் 80 சதவீதமாக இருந்த குழந்தை பிறப்பானது தரமற்ற உணவு பழக்கம், சுதந்திரமான முற்போக்கு வாழ்க்கை போன்ற பல்வேறு காரணங்களால் 60 சதவீதமாக குறைந்துவிட்டது வருத்தப்பட வேண்டிய செயல் என்றே கூறவேண்டும்.

ஜோதிடரீதியாக ஒருவரின் புத்திர பாக்கியத்தை புத்திர காரகன் குருவும்,ஐந்தாமிடமெனும் பூர்வ புண்ணியஸ்தானமும், ஒன்பதாமிடமெனும் பாக்கியஸ்தானமே தீர்மானிக்கின்றன.

புத்திர தோஷத்தை ஏற்படுத்தும் கிரக அமைப்புகள்-பரிகாரங்கள்

இனி குழந்தை பாக்கியத்தை தடை செய்வதற்கான கிரக அமைப்புகளை காணலாம்.

  • லக்னத்திற்கு ஐந்தாம் அதிபதி நீசம், வக்கிரம், அஸ்தமனம் அடைதல்.
  • ஐந்தாமதிபதிக்கு லக்ன ரீதியான பாதகாதிபதி சம்பந்தம் இருப்பது.
  • ஐந்தாமதிபதி 6,8,12-ல் மறைதல்.
  • ஐந்தாமதிபதி நின்ற வீட்டின் அதிபதி நீசம் பெறுவது அல்லது 6, 8, 12-ல் மறைதல்.
  • ஐந்தாமதிபதிக்கு சனி, ராகு-கேது சம்பந்தம் இருப்பது.
  • ஐந்தாமிடத்திற்கு செவ்வாய், சனி, புதன், ராகு-கேது போன்ற கிரகங்கள் சம்பந்தம்.
  • ஐந்தாம் இடத்தில் தனித்த குரு நிற்பது.
  • புத்திரகாரகன் குருவுக்கு செவ்வாய், புதன், சனி, ராகு-கேதுவின் சம்பந்தம்.
  • குரு லக்ன பாதகாதிபதி சம்பந்தம் பெறுவது.
  • குரு வக்ரம், அஸ்தங்கம் அடைதல்.
  • குரு மற்றும் ஐந்தாமதிபதிக்கு திதி சூன்ய பாதிப்பு.
  • செவ்வாய் தோஷமுள்ள ஜாதகத்தை செவ்வாய் தோஷம் இல்லாத ஜாதகத்துடன் இணைப்பது
  • ராகு-கேது தோஷமுள்ள ஜாதகத்தை ராகு-கேது தோஷம் இல்லாத ஜாதகத்துடன் இணைப்பது
  • ஆண் ,பெண் ராசி சஷ்டாஷ்டகமாக அமைவது.
  • குடியிருக்கும் வீட்டின் வடகிழக்கு பாதிப்பது.

போன்ற பல்வேறு ஜோதிட ரீதியான காரணங்களால் குழந்தை பிறப்பு தடைபடுகிறது. (குரு நீசம் பெற்றால் குழந்தை பிறக்காது என்ற தவறான கருத்து பலரிடம் இருந்து வருகிறது. குரு நீசம் பெற்றவர்கள் பலர் குழந்தைகள் பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை)

பொதுவாக குழந்தையின்மையால் மன வேதனையை அனுபவிப்பவர்கள் குல தெய்வ வழிபாட்டையும், பித்ரு பூஜையும் முறைபடுத்த வேண்டும். அத்துடன் லக்ன ரீதியான ஐந்தாமதிபதிக்கு பரிகாரம் செய்தாலே பாதிப்பு நீங்கும்.

புத்திர தோஷத்தை ஏற்படுத்தும் கிரக அமைப்புகள்-பரிகாரங்கள்

அதன்படி ஐந்தாம் அதிபதி அல்லது ஐந்து நிற்கும் கிரகங்களுக்கான பரிகாரங்கள்.

சூரியன்

ஞாயிற்றுகிழமை சூரிய உதயத்தில் பொங்கல் வைத்து, சிவலிங்கத்திற்கு சிவப்பு வஸ்திரம் சாற்றி, ஒற்றைப்படை எண்ணிக்கையில் (10, 100,1000) காணிக்கை செலுத்த வேண்டும். 10 பேருக்கு சிவப்பு நிற ஆடையையும், கோதுமையையும் தானம் தர நன்மை உண்டாகும்.

சந்திரன்

திங்கள்கிழமை அம்பாளுக்கு அபிஷேக ஆராதனை செய்வதுடன், பச்சரிசி மாவு, வெல்லம் கலந்த பிரசாதம் படைக்க வேண்டும். இரட்டைபடை எண்ணிக்கையில் (20 -200 -2000 )காணிக்கை செலுத்த வேண்டும். இரண்டு நபர்களுக்கு வெண்ணிற உடையும், நெல்லும் தானம் தரவேண்டும்.

செவ்வாய்

செவ்வாய் கிழமை முருகனுக்கு சிவப்பு வஸ்திரம், புஷ்பம் அணிவித்து, துவரம்பருப்பு சாதம் படைத்து, ஒன்பது எண்ணிக்கையில் காணிக்கை செலுத்தவும். 9 நபர்களுக்கு சிவப்புநிற துணியையும், சிவப்பு துவரையும் தானம் தர மாற்றம் உண்டாகும்.

புதன்

புதன்கிழமை நரசிம்மருக்கு பச்சை வஸ்திரம், துளசி மாலை சாற்றி, வெண் பொங்கல் படைக்க வேண்டும். ஐந்து எண்ணிக்கையில் காணிக்கை செலுத்த வேண்டும். 5 பேருக்கு பச்சை நிற ஆடையுடன், பாசிப்பயறு தானம் தருவது சிறப்பு.

வியாழன்

வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி கொண்டைக்கடலை மாலை அணிவித்து, மூன்று எண்ணிக்கையில் காணிக்கை செலுத்த வேண்டும். மூன்று நபர்களுக்கு மஞ்சள் நிற ஆடையும், கொண்டைக் கடலையும் தானம் வழங்கலாம்.

வெள்ளி

வெள்ளிகிழமை சக்கரத்தாழ்வாருக்கு வெண் பட்டு அணிவித்து, கல்கண்டு அல்லது வெள்ளை மொச்சை பிரசாதம் படைப்பதுடன் 6 எண்ணிக்கையில் காணிக்கை செலுத்த வேண்டும். 6 நபர்களுக்கு வெள்ளை நிற ஆடையும், இனிப்பு உணவும் தானம் தருவது நல்லது.

சனி

சனிக்கிழமை சனி பகவானுக்கு கருப்பு வஸ்திரம் சாற்றி, எள்ளுருண்டை நிவேதனம் செய்து எட்டு எண்ணிக்கையில் காணிக்கை செலுத்த வேண்டும். எட்டு ஊனமுற்றோருக்கு உணவு, உடை, தானம் வழங்க வேண்டும்.

ராகு

ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30- 6:00 மணிக்குள் புற்றுகோவிலில் அல்லது வளரும் புற்று அருகில் ஒன்றரை மணி நேரம் அமர்ந்து ஆத்மார்த்த பிரார்த்தனை செய்யவேண்டும். அல்லது துர்க்கை,காளிக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடலாம். 4 எண்ணிக்கையில் காணிக்கை செலுத்தலாம். 4 பேருக்கு நீலநிற ஆடையும், கருப்பு உளுந்தும் தானம் தரவும்.

கேது

விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்து அருகம்புல் மாலை அணிவிக்கவும். ஏழு எண்ணிக்கையில் காணிக்கை செலுத்துவதுடன், ஏழு பேருக்கு பல வண்ண ஆடையும், கொள்ளும் தானம் தர வேண்டும்.

ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …

Astrosiva telegram


Leave a Comment

error: Content is protected !!