மதுரையின் ஆன்மிக பெருமைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு ?
மதுரை
- 108 திவ்ய தேசத்தில் மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் மட்டுமே நவகிரகங்கள் உள்ளது.
- பஞ்சபூத தலங்கள் மதுரை மாநகரிலேயே உள்ளது.
- சிவபெருமானுக்கு மற்றும் அம்பாளுக்கு பட்டாபிஷேகம் இங்கு மட்டுமே செய்யப்படுகிறது.
- அறுபடை வீட்டில் மதுரை திருப்பரங்குன்றமும் முருகனுக்கு மட்டுமே பட்டாபிஷேகம் செய்யப்படுகிறது.
- வேற்று வர்ணத்தவர்களும் அறநிலைத்துறை கோவில்களில் அர்ச்சகர் ஆனது முதன் முதலில் மதுரை தல்லாகுளம் ஐயப்பன் கோவிலில் தான்.
- சிவபெருமானுக்கு மனித உருவம் மதுரையில் இரண்டு இடத்தில் உள்ளது. திருப்பரங்குன்றம் மற்றும் இம்மையில் நன்மை தருவார்.
- ஆதீன மடம் முதன் முதலில் உருவானது மதுரையில் தான்.
- சொக்கநாதர், கள்ளழகர் கிட்ட மட்டும் தான் இடுப்பில் கத்தி இருக்கும். வேறு எந்த சிவபெருமானிடமும், பெருமாளிடமும் இருக்காது.
- நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் பிறந்தது மதுரை திருவாதவூர்.
- 278 தேவார பாடல் பெற்ற திருத்தலங்களில் மூன்று மதுரையில் உள்ளது.
- மகாத்மா காந்தி மதுரைக்கு ஐந்து முறை வந்துள்ளார்.
- மகாகவி சுப்ரமணிய பாரதியார் மதுரை சேதுபதி பள்ளியில் பணிபுரிந்தார்.
- பசும்பொன் முத்துராமலிங்க தேவர் படித்தது மதுரை திருநகர் முக்குலத்தோர் பள்ளி மதுரை பெரியார் யூனியன் கிறிஸ்டியன் பள்ளி.
- ரமண மகரிஷி படித்தது மதுரை ஸ்காட் பள்ளி.
- மதுரைக்கு நிறைய பெயர்கள் உண்டு.
- பல்லவ நாடு போதிதர்மர் போல் பாண்டியநாடு போதி சேனா பற்றி யாருக்கும் தெரியாது. இவர் மதுரையில் பிறந்தவர். போதிதர்மர் போல புத்த மதத்தை சீனா மற்றும் ஜப்பானில் பரப்பினார்.
- சாம்ராஜ் மாறினாலும் தலைநகராக மதுரையே இருந்துள்ளது. இந்தியாவிலேயே வேறு எந்த ஊரும் இப்படி இருந்ததில்லை.
- மதுரையில் இரண்டு முறை திரு தாண்டவம் ஆடியுள்ளார் நடராசர்.வலது கால் மாற்றி ஆடியதும் இங்கு மட்டுமே.
- மதுரை பிறக்க, வாழ, இறக்க, தரிசிக்க, நினைக்க, கேட்க, சொல்ல முக்தி தரும் திருத்தலம்.
- இந்து மதத்தின் 6ல் நான்கு உட்பிரிவுகளுக்கு (சைவம், வைணவம், சாக்தம் கௌமாரம்) முக்கியத்துவம் தந்த ஊர் மதுரை.
- சுதந்திரம் பெற்றபின் மாநகராட்சியானது மதுரை தான்.
error: Content is protected !!