மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குண நலன்கள் மற்றும் தொழில் வணங்க வேண்டிய தெய்வம் செய்ய வேண்டிய பரிகாரம்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Updated on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

மிருகசீரிடம்
மிருகசீரிஷம் நட்சத்திரம்

நட்சத்திரத்தின் ராசி – ரிஷபம், மிதுனம்.

நட்சத்திர அதிபதி- செவ்வாய்.

நட்சத்திர நாம எழுத்துகள் :வே-வோ-கா-கி

கணம் :தேவ கணம்

மிருகம் :பெண்சாரை

பட்சி : கோழி

மரம் :கருங்காலி

நாடி :மத்திய பார்சுவ நாடி

ரஜ்ஜு :சிரசு (தலை)

அதி தெய்வம் :சந்திரன்

மிருகசீரிடம்

மிருகசீரிஷம் நட்சத்திரம் பொதுவான குணங்கள்:

மிருகத்தின் தலை போன்ற அமைப்பு உள்ளது. வாராகி, அனுமான், விநாயகர், கல்கி நரசிம்மர் போன்ற தெய்வங்களுடனும், கொரியா தொடர்பும் கொண்டது. இந்த ராசிக்காரர்கள் சத்திய சாய்பாபா அருள் உள்ளவர்கள்.மறந்தோம் மன்னித்தோம் என்னும் குணம் உள்ளவர்.

கேலி பேசுவார், மடத்தனமாய் தியாகம் செய்வார். சிலர் ஏளனத்துக்கு ஆளாவார். தனக்குத் தானே பேசிக் கொள்ளும் இவர் குடும்பத்தை விட பிறருக்கே ஆதரவாக இருப்பார். கலப்பு மணம், பிறர் அழகை ரசிப்பது தவறல்ல என்னும் கொள்கை உள்ளவர்.

இவர் கணவர்/மனைவி இருபாலருக்கும் பலமாய் பலவீனமாய் இருப்பார். மருத்துவராகும் கனவு பலிக்காது. புகுந்த வீட்டில் வேலைக்காரி போல் வேலை செய்வார். குடும்ப பொறுப்பு உண்டு.

உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பவர்கள்.மற்றவர்களுக்கு மரியாதை மற்றும் பண்போடு பழக கூடியவர்கள்.நல்ல பேச்சு திறமை உடயவர்கள்.கொஞ்சம் கர்வம் மற்றும் திமிரும் உடயவர்கள்.உறுதியான உடல் அமைப்பை உடயவர்கள்.இரகசியங்களை பாதுகாப்பவர்கள்.தீர்மான அறிவினை உடையவர்கள்.தாய் மற்றும் தந்தை மீது பாசம் கொண்டவர்கள் .

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குடும்பம்

மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களில் பெரும்பாலோர் குடும்பத்தில் விட்டு கொடுக்கும் பண்பில்லாதவர்களாக இருப்பார்கள். இதனால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவாகவே இருக்கும். அடிக்கடி மன சஞ்சலங்களும் கருத்து வேறுபாடுகளும் உண்டாகும். வெளி நபர்களிடம் விட்டுக் கொடுக்கும் பண்பிருக்கும் அளவிற்கு வீட்டில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடக்க மாட்டார்கள்.

பெண்களுக்கு தாய் வழியில் நிறைய வசதிகள் வந்து கொண்டேயிருக்கும். செல்வம் செல்வாக்கிற்கு பஞ்சம் இருக்காது. ஆடம்பர பொருட்களை எல்லாம் வாங்கி போட்டு சொகுசான வாழ்க்கை வாழ்வார்கள். அன்புக்கு கட்டுபட்டவராக இருந்தாலும் இவர்களுடைய குண அமைப்பால் கடைசி காலத்தில் தனியாக வாழ வேண்டிய சூழ்நிலை உண்டாகும். எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் எளிதாக எடுத்துக் கொண்டு வாழம் ஆற்றல் கொண்டவர்கள். பிள்ளைகளிடம் கராராக நடந்து கொள்வார்கள்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அமையும் தொழில்கள்

செய்யும் உத்தியோகத்தில் நெறி முறை தவறாமல் நடந்து கொள்வார்கள். நினைத்த காரியத்தை நிறைவேற்றும் ஆற்றல் இருக்-கும். நாட்டியம், நாடகம், சங்கீதம் போன்றவற்றில் அதிக ஆர்வம் இருக்கும். கடின உழைப்பாளிகள், பேச்சாலும், செயலாலும் அனைவரையும் கவர்ந்திழுப்பார்கள். கற்பூர புக்தி உண்டு என்று கூறலாம்.

அரசியல், பொது மேலாண்மை, சட்டம் போன்ற துறைகளில் புகழ் பெறுவார்கள். பணம் படிப்பு போன்றவை குறைவாக இருந்தாலும் தான் நிறைவாக வாழ்வதாகவே காட்டி கொள்வார்கள். தங்களுடைய சொந்த கருத்துக்களை யாரிடமும் வெளியிடாமல் சாதித்துக் காட்டும் திறமைசாலிகள் என்றால் மிகையாகாது. வண்டி வாகனங்களை வேகமாக ஒட்டிச் செல்வதில் அதிக ஆர்வம் இருக்கும்.

இதையும் கொஞ்சம் படிங்க : 8 தல விருட்ச மரங்கள் இருக்கும் அபூர்வ கோவில்

மிருகசீரிட நட்சத்திரகாரர்களை தாக்கும் நோய்கள்

மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிகமாக உழைப்பதால் கை, கழத்து எலும்பு போன்றவற்றில் வலியும், வயிற்று வலி குடல் இறக்கம், நீரிழவு, வாதம் போன்றவற்றில் பாதிப்பும் உண்டாகும். பயணங்களில் அடிபட கூடிய வாய்ப்பு உண்டு என்பதால் எதிலும் கவனமுடனிருப்பது நல்லது.

மிருகசீரிடம்

மகா திசை பலன்கள்

மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக செவ்வாய் திசை வரும் செவ்வாய் திசை காலங்கள் மொத்தம் ஏழு வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா காலங்களை அறியலாம்.செவ்வாய் திசையில் எதிலும் துடிப்பு,ரத்த சம்பந்தபட்ட பாதிப்பு உண்டாகும்

இரண்டாவது திசையாக ராகு திசையாக வரும். இத்திசை மொத்தம் 18 வருடங்கள் நடைபெறும். இளமை காலத்தில் ராகு திசை வருவதால் ராகு பலம் பெற்றிருந்தால் மட்டும் நல்ல கல்வி அறிவை பெற முடியும் இல்லையெனில் கல்வியில் மந்த நிலை, முன் கோபம் முரட்டு சுபாவம், தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையால் அவப் பெயர் பெற்றோர்களிடம் கருத்து வேறுபாடு உண்டாகும்.

மூன்றாவதாக வரும் குருதிசை காலங்களில் சற்று உயர்வுகளை பெற முடியும். பூமி மனை வாங்கும் யோகம் பொருளாதார மேன்மையும் செய்யும் உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும்.

நான்காவதாக வரும் சனி திசை மாரக திசை என்றாலும் சனி பலம் பெற்று அமைந்து விட்டால் சமுதாயத்தில் நல்ல உயர்வினையும், வாழ்வில் அதிர்ஷ்டத்தையும் அள்ளித் தருவார். இரும்பு சம்மந்தப்பட்டவைகளால் அனுகூலமும் உடனிருக்கும் தொழிலாளர்களால் உயர்வும் உண்டாகும். நல்ல செல்வந்தர்களாக வாழக் கூடிய ஆற்றல் இருக்கும்.

மிருக சீரிஷ நட்சத்திர காரர்களின் ஸ்தல விருச்சம் கருங்காலி மரமாகும். இம்மரத்தை வழிபடுவதால் நல்ல பலன்களை பெற முடியும். இந்த நட்சத்திரத்தை ஜனவரி மாதத்தில் இரவில் பத்து மணிக்-கு தலைக்கு மேல் வானத்தில் காண முடியும்.

மிருகசீரிஷம் நட்சத்திரம் முதல் பாதம்

மன பலம் உள்ளவர்கள்.கல்வியில் ஓரளவு விருப்பம் உள்ளவர்கள்.கலைகள் மூலம் லாபம் அடைய கூடியவர்கள்.தன்னம்பிக்கை, துணிச்சல் உள்ளவர்கள்.எல்லாம் தெரியும் என்ற கர்வம் உடையவர்கள்.

மிருகசீரிஷம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் 

புத்திசாலித்தனம் உடையவர்கள்.இரக்க குணம் கொண்டவர்கள்.திட்டமிட்டு செயலாற்றுபவர்கள்.சொன்னதை செய்ய கூடியவர்கள்

மிருகசீரிடம்
மிருகசீரிஷம் நட்சத்திரம்

மிருகசீரிஷம் நட்சத்திரம் மூன்றாம் பாதம் 

ஆடம்பர வாழ்க்கை வாழ விரும்புவர்கள்.உத்தம குணங்களை கொண்டவர்கள்.வசீகரமான தோற்றம் கொண்டவர்கள்.

மிருகசீரிஷம் நட்சத்திரம் நான்காம் பாதம்

முடிவுகளை விரைவில் எடுக்க கூடியவர்கள்.வஞ்சக எண்ணம் கொண்டவர்கள்.பிடிவாத குணத்துடன் நெஞ்சில் அழுத்தம் கொண்டவர்கள்.தானாகவே பிரச்சினைகளை உருவாக்கி கொள்ள கூடியவர்கள்.

இதையும் கொஞ்சம் படிங்க : உங்கள் ஜாதகம் முற்பிறவி சாபம் பெற்ற ஜாதகமா ? பரிகாரம் என்ன ?

செல்ல வேண்டிய ஆலயங்கள்

  • கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலுள்ள சந்திர சூடேஸ்வரர் மரக தாம்பிகை திருக்கோவில்
  • தர்மபுரிக்கு வடக்கு 48 கி.மீ தொலைவிலுள்ள சந்திர மௌலிஸ்வரர், பார்வதியம்மை திருக்கோயில்
  • கரூர் மாவட்டம் காவிரியின் வடகரையிலுள்ள கற்பூர வல்லி சந்திர மௌலீஸ்வரர் திருக்கோயில்
  • சென்னைக்கு அருகிலுள்ள மதுராந்தகத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ஜனகவல்லி, உடனுறை ஏரி காத்த ராமன் எனப்படும் ஸ்ரீ கோதண்ட ராமன் திருக்கோயில் ஆகியவையாகும்.

கூற வேண்டிய மந்திரம்

விச்வேச்வராய நரகார்வை தாரணாய
கர்ணாம்ருதாய சசிகேகர தாரணாய
கர்பூரகந்தி தவளாய ஜடாதராய
தாரித்திய துக்க தஹணாய நமச் சிவாய.

மிருகசீரிஷ நட்சத்திரத்திற்கு பொருத்தமில்லாத நட்சத்திரங்கள்

சித்திரை, அவிட்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்களை திருமணம் செய்ய கூடாது.

Leave a Comment

error: Content is protected !!