Homeசிவன் ஆலயங்கள்சனி பெயர்ச்சி திருத்தலங்கள்: திருக்கொள்ளிக்காடு சிறப்பு, தரிசனம் மற்றும் பலன்கள்

சனி பெயர்ச்சி திருத்தலங்கள்: திருக்கொள்ளிக்காடு சிறப்பு, தரிசனம் மற்றும் பலன்கள்

திருக்கொள்ளிக்காடு

திருவாரூர் மாவட்டம் திருவாரூரில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிவத்தலம் திருக்கொள்ளிக்காடு(thirukollikadu) பொங்கு சனீஸ்வர கேஷத்திரம் என போற்றப்படுகிறது.

சனி பகவான்(Sani bhagavan ) தன் சாபம் நீங்குவதற்காக இந்த தளத்துக்கு வந்து அக்னி தீர்த்தத்தில் நீராடி சிவபூஜை செய்தார் அவரின் தவத்தில் மகிழ்ந்த சிவனார் தேவியுடன் அவருக்கு காட்சி தந்தார் அப்போது தனம் மற்றும் தானியங்களுக்கு அதிபதியாக இருந்து அனைவருக்கும் அருளவேண்டும். ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் அதிபதியாக இருந்து குபேர சம்பத்துக்களை தருபவனாக உயிர்களுக்கு வரமளிக்க வேண்டும் என வரம் கேட்டார் சனி பகவான்(Sani) அப்படியே ஆகட்டும் என வரத்தைத் தந்து அருளினார் சிவனார்.

அன்றுமுதல் திருக்கொள்ளிக்காடு(Thirukollikadu) தளத்திற்கு வந்து தன்னை தரிசிக்கும் பக்தர்களுக்கு சகல செல்வங்களையும் நோய் நொடி இல்லாத நீண்ட ஆரோக்கியத்தையும் வாரி வழங்குகிறார் ஸ்ரீ சனீஸ்வரர்(Sani).

இத்தலத்து இறைவனின் திருநாமம் 

  • அருள்மிகு அக்னீஸ்வரர்(Sri Agnieeswarar) 
  • அம்பாளின் திருநாமம் அருள்மிகு வேதநாயகி அதாவது பஞ்சின் மெல்லடி என்று பொருள்.
சனி பெயர்ச்சி திருத்தலங்கள்

கலப்பையுடன் சனி பகவான்

ஜோதிட சாஸ்திரத்தில் சனிபகவானின் கோட்சார நிலைகளை மங்குசனி(Mangu Sani), பொங்குசனி(Pongu Sani), மரணச்சனி(Marana Sani),அந்திமசனி(Anthima Sani)  என்பார்கள் இத்தளத்தில் அவர் பொங்கு சனீஸ்வரர்(Pongu Sani) அருள்பாலிக்கிறார் மட்டுமின்றி கையில் கலப்பையுடன் சனிபகவான்(Sani) திருக்காட்சி தந்தருள்வது  இத்தலத்தின் சிறப்பம்சம்.

இந்த சனீஸ்வரரை(Sani) வணங்கி விட்டு விதை விதைத்தால் அமோக விளைச்சல் கிடைக்கும். விதைக்கும் அனைத்தும் பொன்னென விளைந்து  செல்வத்தை தரும். வீட்டில், சகல சவுபாக்கியங்களும் ஐஸ்வர்யங்களும் சேரும் என்பர்.

 எதிரெதிர் சன்னதியில் பைரவரும்  சனிபகவானும்! 

வேறொரு மகிமையும் உண்டு இத்தலத்திற்கு பொங்கு சனீஸ்வரருக்கு(Pongu Sani) என்ன தெரியுமா?

இவர் மகாலட்சுமி அமைந்திருக்கும் இடத்தில் சந்நிதி கொண்டிருப்பதால் பக்தர்களுக்கு குபேர சம்பத்துகளையும் யோகங்களையும் அருளும் வரப்பிரசாதியாய்  திகழ்கிறார்.

அதேபோல் இந்த ஆலயத்தில் ஸ்ரீ பைரவரும்,  சனீஸ்வரரும் எதிரெதிர்  சன்னதியில் இருந்தபடி அருள்பாலிக்கின்றனர். சிறப்பான அமைப்பு இது என்கிறார்கள் பக்தர்கள்.

 ஸ்ரீகாலபைரவர் எதிரிகளின் தொல்லை தீவினைகள் முதலான சகல பிரச்சினைகளையும் தீர்த்து மன தைரியத்துடன் வாழ்வதற்கு அருள்பாலிக்கிறார்.

சனி பெயர்ச்சி திருத்தலங்கள்

 தலம்: திருக்கொள்ளிக்காடு 

சுவாமி: ஸ்ரீ அக்னீஸ்வரர்(Sri Agnieeswarar) 

அம்பாள்: ஸ்ரீ மிருதுவாக நாயகி(Sri Miruthuvaga Nayagi) 

திருத்தலச் சிறப்புகள்: அக்னிபுரி,அக்னிஹோத்ரம், என்றெல்லாம் போற்றப்படும் இந்த தளத்தில் தனி சன்னதியில் அருளும் சனீஸ்வரர் லட்சுமி கடாட்சத்தை அள்ளி தரும் பொங்கு சனீஸ்வரர்(Pongu Sani) காட்சி தருகிறார். ஆம் இங்கே லட்சுமி சன்னதி இருக்க வேண்டிய இடத்தில் சக்தி அம்சமாக சகல ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்கும் வள்ளலாக அருள்கிறார். அருகிலேயே திருமகளும் சன்னதி கொண்டு இருப்பது விசேஷம்.

எப்படி செல்வது?: திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது திருக்கொள்ளிக்காடு(Thirukollikadu) திருவாரூர் திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் சுமார் 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பாங்கல்  நால்ரோடு இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில் சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருக்கொள்ளிக்காடு(Thirukollikadu)திருத்தலம்.

 
 
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!