நவகிரக மந்திரம்
சூரிய பகவான் மந்திரம்
எங்கும் இருளகற்றி எழுபரித் தேரேறித்
துங்கமுடன் சுற்றிவரும் சோதிமனிச்- சூரியனே
துன்ப இருளகற்றி தூய நலம் திகழ
இன்பம் தருவாய் எனக்கு .
சந்திர பகவான் மந்திரம்
தரணியில் வாழ்வோர்க்கு தண்ணிலவை தந்தருளி
நீரணிந்தோன் நெற்றியிலே நின்றிலங்கும் – வெண்ணிலவே என்றன் துயர் நீக்கி இன்பம் பலவாக்கி
நன்றே புரிவாய் நயந்து ..
செவ்வாய் பகவான் மந்திரம்
தீரம்மிகக் கொண்ட செவ்வாய் பகவானே
ஈரம் கசிய இணையடியை யான்- துதிப்பேன்
துன்பம் துடைத்தெனை தூய நெறி படுத்தி
இன்பம் தருவாய் இனி .
புதன் பகவான் மந்திரம்
வித்தைக் களஞ்சியமே வெற்றிமிகு நாயகமே
புத்திக்கு வித்தே புதனே உனைத்- துதிப்பேன்
சித்தம் மகிழ்ந்து சிறியேன் நலமடைய
நித்தம் அருள்வாய் நினைந்து..
குரு பகவான் மந்திரம்
தேவரெல்லாம் போற்ற திகழ்கின்ற நற் குருவே
நாவாரபாடி நயந்துருகி – போற்றுகின்ற
சேயாம் எனக்கு திருவருளை செய்கின்ற
தூய குருவே துணை..
சுக்கிர பகவான் மந்திரம்
மன்னுகலை நாயகனே மாண்புதரும் சுக்கிரனே
சென்னி வணங்கி தினமும் – துதி செய்வேன்
பொன்னும் களையும் புகழும் பொருந்திடவே
உன் அருளை செய்வாய் உவந்து..
சனி பகவான் மந்திரம்
ஒன்பான் கிராகத்துள் ஒன்றாய் மிளிர்கின்ற
அன்பாய் நலம் புரியும் அண்ணல் – சனீஸ்வரனே
என்பால் அடைந்தாலும் ஏழைக்கு இரங்கி இனி
நன்மையே செய்வாய் நயந்து
இராகு பகவான் மந்திரம்
இன்பமே செய்யும் ராகு பகவானே
அன்பாக உன்றன் அடிபணிவேன் என்- குடும்பம்
செல்வ வளமுடனே சீரோங்கி வாழ்வதற்கு
நல்லருளை செய்வாய் நயந்து
கேது பகவான் மந்திரம்
சீரமேவும் கேதரசே செல்வ செழிப்புடனே
பார்ப்புகழும் வாழ்வும் பலவளமும் – பெற்றினிது
எங்கள் குடி தழைக்க என்றென்றும் உன்றனது
துங்கமிகு பாதம் துணை …