Homeஆன்மிக தகவல்திருப்பாவைதிருப்பாவை பாடல் 5 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்

திருப்பாவை பாடல் 5 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்

திருப்பாவை பாடல் 5

கண்ணனை வாழ்த்தும் முறையும் அடையும் பலன்களும்

ஸ்ரீ ராகம், ஆதிதாளம்

மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி-விளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது
வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க,
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும்; செப்பு – ஏலோர் எம்பாவாய்.

எளிய தமிழ் விளக்கம்:

மாயச் செயலுடைய கண்ணன், வடமதுரையில் பிறந்த திருக்குமாரனை,தூய யமுனை நதிக் கரையில் வசிப்பவனை,இடையர் குலத்தில் விளக்கைப் போல் அவதரித்து யசோதைக்கு பெருமை தேடிக் கொடுத்த தாமோதரனை,பரிசுத்ததுடன் அணுகி, மலர்களைத் தூவி வணங்கி வாயாரப் பாடி, நெஞ்சார தியானிப்போம். முன்பு செய்த பாவங்களும், பின்வரும் பாவங்களும் அவன் அருளால் நெருப்பில் விழுந்த பஞ்சாக உருத் தெரியாமல் அழிந்து போகும். ஆகவே அவன் நாமங்களைச் சொல்!

எளிய ஆங்கில விளக்கம்:

Thiruppavai – 5 – Raga : Sri, Adi

Kirishna, prince of Northern Mathura who haunts the clean banks of Yamana who took birth like a beacon among the cowherd clan the jewel of his mother’s womb if we come pure and strew fresh flowers with songs on our lips, feeling in our hearts then he will forgive our past misdeeds and even what remains will disappear like cotton unto fire So come, let us praise him.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!