Homeஆன்மிக தகவல்திருப்பாவைதிருப்பாவை பாடல் 3 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்

திருப்பாவை பாடல் 3 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்

திருப்பாவை பாடல் 3

உத்தமனைப்பாடி நோன்பு எடுப்போர் அடையும் பெரும் செல்வம்.

ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்,
தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெறும் செந்நெல் ஊடு கயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்:
நீங்காத செல்வம் நிறைந்து – ஏலோர் எம்பாவாய்

எளிய தமிழ் விளக்கம்:

மூன்று உலகத்தையும் தன் காலால் அளந்த திருவிக்கிரமனின் நாமங்களைப் பாடி நாம் நோம்பிற்கு நீராடினால்;
நாடு முழுவதும் தீமை இல்லாமல் மாதம் மூன்று முறை மழை பெய்யும். (அதனால்) செந்நெல் வளர, நடுவே கயல் மீன்கள் துள்ளி விளையாடும். அழகிய நெய்தல் பூக்களில் வண்டுகள் உறங்கிக்கிடக்கும். பருத்த முலைகளைப் பற்றி இழுக்க இழுக்க, அசையாமல் நின்று வள்ளல்களைப் போல் பால் குடங்களை நிரப்பும் பசுக்கள் இருக்க, குறைவற்ற செல்வம் நிறைந்திருக்கும்.

எளிய ஆங்கில விளக்கம்:

Thiruppavai – 3 – Raga : Arabbi, Adi

Praise him who measured the three worlds in two strides,
If we take bath for our winter’s vow ( pavai nonbu)
The monsoon shall not fail this fertile land,

but bring forth golden heads of paddy
In the still waters of the fields, tiny fish will jump and dance enchanted
Dreamy bees will fall asleep amidst the petals of lotus.
Udders of our cows so grand shall scarce be held in our milking hand
Abiding wealth shall be ours, come!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!