Homeஆன்மிக தகவல்நவராத்திரி பூஜைநவராத்திரிக்கு கொலு வைப்பது ஏன்?

நவராத்திரிக்கு கொலு வைப்பது ஏன்?

நவராத்திரி

ஆதிபராசக்தி இப்பூவுலகம் முழுவதிலும் அருளாட்சி செய்கிறாள் புல், பூண்டு, புழு, மரம், பசு. புலி மற்றும் மனிதர் என எல்லாவித உயிர்களுமாக விளங்குகிறாள் பராசக்தி அனைத்து உயிர்களிலும், பொருட்களிலும் அவளை காண வேண்டும் என்பதே கொலு வைப்பதன் நோக்கம்,

முதல் படி, அதாவது கீழ் படியில்

ஓரறிவு உடைய உயிரினமான புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள்

இரண்டாம் படியில்

இரண்டறிவு உடைய நத்தை, சங்கு பொம்மைகள்.

மூன்றாம் படியில்

மூன்றறிவு உடைய கரையான், எறும்பு பொம்மைகள்.

Generated Image September 24 2025 9 06PM

நான்காம் படியில்

நான்கறிவு உடைய நண்டு, வண்டு பொம்மைகள்

ஐந்தாம் படியில்

ஐந்தறிவு கொண்ட நான்குகால் விலங்குகள், பறவைகளின் பொம்மைகள்,

ஆறாம் படியில்

ஆறறிவு உடைய மனிதர்களின் பொம்மைகள்.

ஏழாம் படியில்

சாதாரண மனிதர்களுக்கு மேலான மகரிஷிகளின் பொம்மைகள்:

எட்டாம் படியில்

தேவர்களின் உருவங்கள் நவகிரக பகவான்கள் பஞ்சபூத
தெய்வங்களின் பொம்மைகள்.

ஒன்பதாம் படியில்

பிரம்மா ,விஷ்ணு, சிவன் என்ற மும்மூரத்திகளையும், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய பெண் தெய்வங்களையும் வைக்க வேண்டும்…

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!