Homeஆன்மிக தகவல்நவராத்திரி பூஜைநவராத்திரி ஆறாம் நாள் வழிபாடு மற்றும் பலன்கள்

நவராத்திரி ஆறாம் நாள் வழிபாடு மற்றும் பலன்கள்

நவராத்திரி ஆறாம் நாள் வழிபாடு

அம்மன் வடிவம் : இந்திராணி

பூஜையின் நோக்கம் : தூம்ரலோசன வதம் புரிதல்.

இந்திராணி வடிவம்: இந்திரனின் சக்தி வடிவமாக நிகழக்கூடியவன் மகேந்திரி என்றும் அழைக்கப்படுபவள்.வஜ்ராயுதத்தை கொண்டு ஐராவதம் யாளையில் வீற்றிருப்பவள்.சத்ரு பயம் மற்றும் மரண பயத்தை அழிக்கக்கூடியவன்.உயர் பதவிகளில் உள்ள இடையூறுகளை தகர்க்கக்கூடியவன்.

தென்னாட்டில் ஆறாம் நாள் வணங்கப்படும் தேவியின் அம்சம் ஜ்வாலா துர்க்கை, பண்டாகரன் என்ற அகரனுடன் போர் புரிந்த போது எதிரிகள் அருகில் வராமல் தடுப்பதற்காக துர்க்கை அகனி ஜூவாலையுடன் கூடிய மிகப்பெரியதொரு நெருப்பு வட்டத்தை அமைத்தாள்.நெருப்பு வட்டமானது நனது படைகளை காக்கும் பொருட்டு தீப்பிழம்பாக நின்றாள்.இதனால் துர்கா தேவி ஜ்வாலா துர்க்கை என்று அழைக்கப்படுகிறாள்.

அன்னைக்கு சாற்ற வேண்டிய மாலை: செம்பருத்தி

அன்னைக்கு சாற்ற வேண்டிய இலை : சந்தன இலை

அன்னைக்கு சாற்ற வேண்டிய வஸ்திர நிறம் : ஆரஞ்சு நிறம்

அன்னையின் அலங்காரம்: பிறைசூடிய சண்டிகா தேவி அலங்காரம்

அர்ச்சனைக்கு பயன்படுத்த வேண்டிய மலர்கள்: சிவப்பு நிற மலர்கள்

கோலம் : பருப்பு மாவு கொண்டு தேவிநாம கோலம் போட வேண்டும்.

நைவேத்தியம்: தேங்காய் சாதம்

குமாரி பூஜையில் உள்ள குழந்தையின் வயது : 7 வயது.

குமாரி பூஜையால் உண்டாகும் பலன்கள்: செல்வ செழிப்பு உண்டாகும்.

பாட வேண்டிய ராகம்: நீலாம்பரி

பயன்படுத்த வேண்டிய இசைக்கருவி: பேரி

குமாரிக்கு தரவேண்டிய பிரசாதம்: வடகம்

பலன்கள் : மனக்கவலைகள் நீங்கும், பொருட்சேர்க்கை உண்டாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!